Tuesday 21st May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

நோய் தீர்த்த காக்கை




மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு

  பகுதி – 16

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  

நிரஞ்சனா

டாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன்.

மனிதனாக பிறந்தால் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த கர்ம பயன் பெரிய அளவில் பாதகத்தை கொடுக்காமல் இருக்க இறைவனை நம்ப வேண்டும். அந்த இறைவன்தான் நம் ஷீரடி சாய்பாபா.

நடமாடும் தெய்வமாக இருந்த நம் ஷீரடி சாய்பாபாவை ஆரம்பத்தில் டாக்டர் பிள்ளை பரிபூரணமாக நம்பவில்லை. தாமரை பூவின் அருமை எங்கோ இருந்து வரும் வண்டுக்கு தெரியும். ஆனால் எந்நேரமும் தாமரை பூவுடனே இருக்கும் தவளைக்கு அருமை தெரியாது என்பார்கள். அதுபோல்தான்  டாக்டர் பிள்ளை என்பவர் சாய்பாபாவின் பக்தராக இருந்தார். அந்த டாக்டரை ஷீரடி சாய்பாபா செல்லமாக “பாவ்” என்று அழைப்பார்.

ஒருநாள் விதி பயனால் டாக்டர் பிள்ளைக்கு காலில் சிலந்தி நோய் ஏற்பட்டது. அதனால் அவர் காலில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். வலியால் துடிப்பார் டாக்டர் பிள்ளை. இந்த பிரச்னை பற்றி ஆரம்பத்திலேயே பாபாவிடம் சொல்லி பரிகாரம் தேடாமல் மருத்துவத்தை நாடினார் டாக்டர் பிள்ளை. இதைதான் கர்ம பயன் என்கிறார்கள். நோய் தீர்க்கும் மகானின் பக்தராக இருந்தும் ஷீரடி மகானை நம்பாமல் ஏதேதோ மருத்துவம் பார்த்து வந்தார் பிள்ளை.

மருத்துவம் பார்த்த டாக்டர்கள், டாக்டர் பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அதன்படி செய்த அறுவை சிகிச்சை எந்த பலனும் தரவில்லை. இரண்டாவது முறையும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அதன்படியும் செய்துக் கொண்டார் டாக்டர் பிள்ளை. ஆனால் அதுவும் பலன் தரவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்றாவது முறையும் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். இந்த முறையும் பலன் தரவில்லை.

இதனால் தன் மேலும் உடல் நலிவடைந்தார். மனசோர்வும் சேர்ந்து கொண்டது. மிக துயர் அடைந்தார் டாக்டர் பிள்ளை. ஒருநாள், தன் நண்பனான காகாசாஹேப் தீஷத்திடம் தன் வேதனையை சொல்லி வருந்தினார்.

அதற்கு நண்பர் காகாசாஹேப், “கடலில் விழுந்தவனை கடல் தாய் மூன்று முறை கடலில் விழுந்தவன் உயிர் பிழைக்க சந்தர்ப்பம் தருகிறாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தண்ணீரில் விழுந்தவன் தம் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆயுள் முடிந்துவிடும் என்பார்கள். அதுபோல்தான் உனக்கு மூன்றுமுறை சிகிச்சை செய்தும் உன் நோய் தீரவில்லை. உனக்கு ஏற்பட்டிருக்கும் சிலந்தி நோய்க்கு உன் மருத்துவர்களிடம் மருந்தில்லை என்பதை இப்போதாவது புரிந்துக் கொள்.

பாபாவின் பக்தனான நீ, ஏன் நம் பாபாவிடம் முறையிடவில்லை.? சாய்பாபாவை நீ நம்பவில்லையா.? தீராத வியாதிகளும், கஷ்டங்களும் தீர்க்கவே அவதாரம் எடுத்தவர் நம் ஷீரடி மகான். அவர் பார்வைபட்டாலே உன் கர்மநோய் தீருமே. என்றார் நண்பர் காகாசாஹேப் தீஷத்.

அப்போதுதான் தன் தவறை உணர்ந்தார் டாக்டர் பிள்ளை. “நடமாடும் நம் தெய்வத்தை எப்படி நான் மறந்தேன்.?“ என்று கலங்கிய டாக்டர் பிள்ளை, பாபாவை உடனே தரிசிக்க நினைத்தார். “ஆனால் பாபாவிடம் நான் முன்பே அறுவை சிகிச்சை செய்ய போவதாக சொல்லவில்லை. செய்த பிறகும் அதை பற்றி அவரிடம் சொல்லவில்லை. ஆகவே பாபா என் மேல் கோபம் அடைவாரோ.?” என்று சொல்லி தயங்கிய டாக்டர் பிள்ளை, நண்பர் தீஷத்திடம், “நீதான் பாபாவிடம் என் நிலை பற்றி பக்குவமாக சொல்ல வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி நண்பர் காகாசாஹேப் தீஷத், டாக்டர் பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் சிலந்தி நோய் பற்றியும், அவர் படும் துன்பத்தை பற்றியும் சாய்பாபாவிடம் சொன்னார்.

“தன் பிள்ளை படும் துன்பத்தை பற்றி ஒரு தந்தைக்கு தெரிந்ததும் உதவாமல் இருப்பாரா.? என் பக்தர்கள் என் பிள்ளையை போன்றவர்கள். டாக்டர் பிள்ளைக்கு எல்லாமே அவன் கர்ம வினைபடி நடந்தது. அவன் கர்ம நோய் விலகும் நேரம் இது. அதனால்தான் அவனுக்கு என் நினைவு வந்திருக்கிறது. டாக்டர் பிள்ளையை வர சொல்.“என்றார் மகான் சீரடி சாய்பாபா.

உடனே டாக்டர் பிள்ளையை சாய்பாபாவின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தார் காகாசாஹேப். அப்போது மகான் சாய்பாபாவை கண்ட உடன் டாக்டர் பிள்ளையின் விழிகளில் மழை வந்தது போல் கண்ணீர்.

காலில் கட்டு போடப்பட்டிருந்த டாக்டர் பிள்ளையை பார்த்த சாய்பாபா, ‘கால் புண்ணுக்கு கட்டுபோட்டால் புண் ஆறுமா.? இயற்கை காற்றுபட்டால்தானே புண் ஆறும். உன் காலில் சீழ் வடிவதற்கு முதல் காரணம் கட்டுபோட்டதால்தான். கட்டுபுண் வந்துவிட்டால் அதற்கு மருந்துவமே சிரமம். இந்த சின்ன விஷயம் கூட படித்த உனக்கு தெரியாதா.?“ என்ற மகான் சாய்பாபா, “முதலில் டாக்டர் பிள்ளையின் கால்கட்டை அவிழுங்கள். இப்போது காக்கை ஒன்று வரும். அந்த காக்கை டாக்டர் பிள்ளையின் காலை கொத்தி வைத்தியம் செய்யும்.“ என்றார் சாய்பாபா.

டாக்டர் பிள்ளையும், காகாசாஹேப் தீஷத்தரும், “இந்த மசூதிக்குள் காக்கை எப்படி வரும்.?” என்ற சிந்தனையுடன் இருந்தார்கள்.

அப்போது மசூதியை சுத்தம் செய்யும் அப்துல் என்பவன் வேகமாக வந்தான். வழக்கமாக வரும் நேரத்தை விட இன்று மிக தாமதமாக வந்ததால் சாய்பாபா திட்டுவாரோ என்ற பயத்திலேயே அவசர அவசரமாக மசூதிக்குள் நுழைந்த அப்துல், அங்கு நின்றிருந்த டாக்டர் பிள்ளையின் காலை தெரியாமல் மிதித்து, தடுமாறி டாக்டர் பிள்ளையின் மேலேயே விழுந்தான். இதனால் டாக்டர் பிள்ளையின் கால் புண் வெடித்து சீழ் வெளியேறியது. அந்த சீழில் இருந்த சிலந்தி பூச்சி வெளியேறியது.

இதை பார்த்துக் கொண்டிருந்த சாய்பாபா பலமாக சிரித்தார்.

அப்துல் ஒரே இடத்தில், ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டான். அவனை ஷீரடி மக்கள், “காக்கையை போல ஒரு இடத்தில் நிற்காமல் எங்கே பறந்து போய்விடுகிறாய்.?” என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. அதனால்தான் மகான் சாய்பாபா, அப்துலை குறிப்பிடும் விதமாக ‘ஒரு காக்கை வரும். அது கொத்தி நோய் தீர்கும்.’ என்று சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்த பக்தர்கள், பாபாவின் மகிமையை உணர்ந்தார்கள். அதே சமயம் அப்துலின் வேடிக்கையை பார்த்து அவர்களும் சிரித்தார்கள்.

டாக்டர் பிள்ளையின் கால்வலியும் குறைந்து, சில நாட்களிலேயே பாபாவின் ஆசியால் பரிபூரணமாக குணம் அடைந்தார் டாக்டர் பிள்ளை. அறுவை சிகிச்சையால் குணமாகாத சிலந்தி நோய், ஒரு ரூபாய் கூட செலவில்லாமலே ஷீரடி சாய்பாபாவின் அருள் பார்வையால் நிவர்த்தி அடைந்தது.

ஷீரடி சாய்பாபாவை நினைத்தால் தீய கர்மவினை விலகும். இன்றும் நம்முடன் இருக்கும் நடமாடும் தெய்வம் நம் ஷீரடி சாய்பாபாவை அவர் திருவுருவ படத்தின் முன், நம் மனகுறையை சொன்னால் நிச்சயம் அதற்கு தீர்வு கிடைக்கும்.

தண்ணீரில் விளக்கேற்றி அதிசயிக்க வைத்த சாய்பாபா. அது அடுத்த பகுதியில்….

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

 

 

 

Posted by on Jan 12 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech