Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.
Category archives for: கோயில்கள்

நட்சத்திர அர்ச்சனை

அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் நான் ஒரு காணொளி பார்த்தேன். அது ஒரு ஆன்மிக சொற்பொழிவாளரின் காணொளி. அதில் அவர் பேசும்போது ஒரு கருத்தினைச் சொன்னார். அது என்னவென்றால், நாம் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகும் பொழுது யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு விளக்கம் தந்தார். கோவிலுக்குள் நாம் நுழைந்தவுடன் நாம் யார்? நம்முடைய பெயர் என்ன? நம்முடைய நட்சத்திரம் என்ன? நம் குலம், கோத்திரம், நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியும். […]

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்யலாமா?

 Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்

 Written by Niranjana  முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது […]

சிவன் கோவிலுக்கு போறீங்களா? அப்போ இந்த வீடியோவை பாருங்க!



தொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ! ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை

 23.12.2018 அன்று ஆருத்ராதரிசனம் Written by Niranjana மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில்  அமைவதுதான் ஆருத்திரா தரிசனம். இந்த திருநாளில் சிவபெருமானின் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜ பெருமானின் நடனத்துடன் அந்த இசையும் கேட்டாலே நம் கவலைகள் மறந்து நம்மையும் அறியாமல் ஆட வைக்கும் சிலிர்க்க வைக்கும் நடனம்தான் எம்பெருமான் ஈசனின் ஆருத்திரா நடனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடரும் […]

சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை

18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana  மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் […]

சிவ-சக்தியின் அருளை தரும் கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் சிறப்பு கட்டுரை

 Written by Niranjana 23.11.2018  கார்த்திகை தீபம்  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் சிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தோன்றினார்கள். திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. […]

அற்புதங்கள் நடத்தும் முருகப் பெருமான் : கந்த சஷ்டி விழா சிறப்பு கட்டுரை

 13.11.2018 அன்று கந்த சஷ்டி விழா! Written by Niranjana  தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார். தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார். காசியப்பர் முனிவர் அசுரர்களுக்கு தந்தையை போன்றவர். இந்த முனிவர் அசுரகுலத்தில் பிறந்தாலும் குணத்தில் சாந்த சொரூபி. மிக […]

நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை

 Written by Niranjana  ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது […]

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை

Written by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech