Friday 26th April 2024

தலைப்புச் செய்தி :

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி! சிறப்பு கட்டுரை

Written by Niranjana niranjana

05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி!

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம்.

நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான்.

தந்தை சொல் மீறாதவர். ஏற்ற-தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் படைத்தவர். தன்னை நம்பி விரோதியே வந்தாலும் அவர்களை பழி வாங்காமல் அடைக்கலம் தரும் உத்தம குணம் கொண்டவர். இன்னும் இன்னும் எத்தனையோ சிறப்புகள் நிறைந்த ஸ்ரீஇManamakkal Malaiராமபிரானின் சரித்திரத்தை படித்தாலே தீராத கஷ்டங்கள் தீரும்.

ஸ்ரீஇராமருக்கு பட்டாபிஷேகம் முடிந்த பிறகு ஸ்ரீஇராமரிடம் சீதை பேசி கொண்டிருந்தபோது,  “உங்கள் வாழ்வின் சம்பவங்களை கேட்பது மகிமை வாய்ந்தது” என்றார்.

அதற்கு ஸ்ரீஇராமர், “எப்படி சொல்கிறாய்.?” என கேட்டார்.

அதற்கு சீதை, “இராவணனால் நான் கடத்தப்பட்ட பிறகு பல மாதங்கள் உங்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனாBhakthi Planetல் இனி உயிரோடு வாழ வேண்டாம் என்ற முடிவு செய்து தற்கொலை செய்ய எண்ணியபோதுதான், அனுமன் வந்து உங்கள் சிறுவயது சம்பவங்களையும், நான் இராவணனால் கடத்தப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களையும், இனி எல்லாம் வெற்றியாகவே அமையும் என சொன்னார். அதை கேட்ட பிறகே எனக்கு தைரியம் கிடைத்தது. நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. அதன்படி இராவணனிடம் இருந்து நீங்கள் என்னை மீட்டு சென்றீர்கள். ஆகவே உங்கள் சரித்திரத்திற்கு மகிமை greensiteஅதிகம் உள்ளது. கவலையில் இருக்கும்போது, யார் உங்கள் சரித்திரத்தை படிக்கிறார்களோ, அவர்களுடைய கவலை தீரும். அத்துடன் அனுமனின் அனுகிரகமும் கிடைக்கும்.” என்றாராம் அன்னை சீதாதேவி.

ஆம், எங்கெல்லாம் ஸ்ரீஇராமநாமமும், ஸ்ரீஇராம காவியமும் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அன்னை சீதாதேவியுடன் ஸ்ரீஇராமர் தோன்றுவார். அவர்களுடன் லட்சுமணனும் ஆஞ்சநேயரும் தோன்றி ஸ்ரீஇராம காவியத்தை கேட்பவர்களின் வாழ்வில் என்றும் துணை இருப்பார்கள்.

இராமநவமி அன்று, பெருமாள் கோயிலுக்கோ அல்லது ஸ்ரீஇராமர்niranjana channel கோயிலுக்கோ சென்று துளசி மாலை அணிவிக்க வேண்டும்.

வெல்லம் ஏலக்காய் இரண்டும் தண்ணீரில் கலந்து பானங்கம், நீர் மோர் வைத்து வணங்கினால் வாழ்க்கையில் இனிமையான சம்பவங்கள் நடக்கும். ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவிக்கலாம்.

அத்துடன் ஸ்ரீஇராம நாமத்தை உங்களால் முடிந்த அளவில் எழுதி அதை மாலையாக கட்டி ஸ்ரீஅனுமருக்கு அணிவித்தால் துன்பங்கள் நெருங்காது. என்றென்றும் வாழ்வில் வெற்றியும் இனிமையும் அமையும்.

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech