Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

திருமலை மகத்துவம்

Written by Niranjana NIRANJHANA

ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது  தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது.  அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தையை உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி உத்தரவிட்டார். ஆனால் யாரும் குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. “எல்லாம் இறைவன் செயல். இந்த குழந்தையை என் மகளாக ஏற்று நானே வளர்ப்பேன்.“ என்று முடிவெடுத்து அந்த குழந்தைக்கு “பத்மாவதி“ என்று பெயரிட்டார் அரசர்.

குழந்தை பருவத்தில் இருந்து பத்மாவதி மங்கை பருவம் அடைந்தாள். தான் யார் என்பதை உணர்ந்து, பெருமாளுடன் திரும்பவும் ஒன்று சேர தவம் இருந்தாள். வேங்கடேச பெருமாள், திருப்பதி மலை மீது தோன்றி தன் உடன் இருந்த வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் அனுப்பி பெண் கேட்டு தூது அனுப்பினார். வெங்கடாசலபதியே மருமகனாக வர இருப்பதை தடுப்பாரா அரசர்?. தன் மகளின் விருப்பத்தையும் தெரிந்த மன்னர், பெருமாளுக்கு பெண் தர சம்மதம் தெரிவித்தார். அரசருடைய மகளை திருமணம் செய்வதால் அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது திருமணத்திற்கு தன் சார்பிலும் கல்யாண செலவு செய்ய வேண்டும் என்று விரும்பி குபேரரிடம் கடன் பெற்றார் பெருமாள்.

Bhakthi Planetதிருமணமும் பிரமாண்டமாக நடந்தது. ஒரே மகள் என்பதால் சீர்வரிசையை அள்ளி கொடுத்தார் அரசர். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் சீர் பொருட்கள் இருந்தாலும், சமையல் பொருட்களில் கருவேப்பிலை இல்லாததை கண்டார் பெருமாள். “என்ன பத்மாவதி… உன் தந்தைக்கு கருவேப்பிலை வாங்க கூட பணம் இல்லையா.“ என்று கேலியாக நகைந்தார். தன் தந்தையை பற்றி கிண்டலாக பேசி விட்டாரே என்ற கோபத்தில், “சரி.. இருங்கள், தந்தையிடம் சென்று கருவேப்பிலை வாங்கி வருகிறேன். பொழுது சாயும் முன்பாகவே வந்து விடுகிறேன்.“ என்று உறுதி தந்து சென்றாள் பத்மாவதி. ஆனால் தந்தையிடம் கருவேப்பிலை வாங்கி மேல் திருப்பதி செல்வதற்கு முன்னதாகவே கீழ் திருப்பதியிலேயே கதிரவன் மேற்கில் மறைந்துவிட்டான். பொழுது சாய்ந்தும் விளக்கு வைக்கும் நேரத்தில் தன் மனைவி வீடு திரும்பாமல் இருக்கிறாளே என்று கோபப்பட்ட பெருமாள், “நீ கீழ் திருப்பதியிலேயே தங்கி விடு.“ என்று சொல்லிவிட்டார். தன் கணவரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லி வாதாடுவது நல்லதல்ல என்று நினைத்த பத்மாவதி, கீழ் திருப்பதியிலேயே தங்கிவிட்டாள்.

ஒருவருக்கு ஆபத்து என்றால் முதலில் பரிதாபப்பட்டு அதற்கு தீர்வு சொல்வதும் பெண்கள்தான். அதனால் பெருமாளுக்கு முன்னதாகவே பக்தர்களுக்கு அருள் தர பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் தங்கி இருக்கிறார்.

இந்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் –

கூனன், குருடன், முடவன், ஊமை இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தார்கள். “இந்த சமுதாயம்Manamakkal Malai நம்மை மதிக்கவில்லையே, இனி நாம் உயிருடன் இருப்பதை விட இறப்பதே நல்லது.“ என்று முடிவெடுத்து, திருமலையின் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளலாம என்று எண்ணி திருப்பதி மலையின் மேல் ஏற முயற்சித்தனர் நால்வரும். அதற்கு முன்னதாக கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசித்தனர். பிறகு –

திருப்பதி மலை ஏற ஏற கூனன் தன் கையில் இருந்த கோலை வீசி நிமிர்ந்து நடந்தான், குருடன் கண் பார்வை பெற்று, ஒரு மரத்தை சுட்டிக்காட்டி, “அதோ பார்… அந்த மரத்தில் கொம்பு தேன்.“ என்று கத்தினான். நெண்டி நொண்டி நடந்து வந்த முடவன், “எங்கே அந்த மரத்திலா.“ என்று கூறி கொண்டே அந்த மரத்தின் மேல் ஏறினான். வாய் பேச முடியாதவனோ, “அந்த தேனில் எனக்கும் பங்கு தர வேண்டும்.“ என்று கத்தினான். இப்படி நால்வருக்கும் உடல்குறை நிவர்த்தியாகி ஏற்பட்ட நல்ல மாற்றத்தை கண்டு அவர்கள் ஆச்சரியம அடைந்தார்கள். பக்தியுடன் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசித்து, கீழ் திருப்பதி திரும்பி வந்து தாயாரையும் தரிசித்தார்கள்.

இந்த அதிசயத்தை அழகாக ஒரு கவிஞர் திருமலை ஸ்தல புராணத்தில் கவி பாடி இருககிறார்.

“கூன் கொண்டுசென்றவன் கூன் நிமிர்ந்து ஓட 

குருடன் கொம்பில் தேன் என்று காட்ட

முடவன் அக்தேனை எடுக்க அயல்

தானின்ற ஊமை எனக்கொன்று கேட்க

தருவன் வரம்

வான் நின்ற சோலை வடமலை மேல் நின்ற மாதவனே“

திருப்பதி பெருமாளையும், பத்மாவதி தாயாரையும் வணங்கினால் ஏற்றம் ஏற்படும். இராஜேந்திர சோழர் அரச பதவி ஏற்றால் திருப்பதி ஸ்தலத்தில் 24 நெய்விளக்கு ஏற்றுவதாக வேண்டினார். அவர் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. பதவி ஏற்ற பிறகு தினமும் 24 நெய்விளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவற்றி வந்தார்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 19 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech