Friday 31st July 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

அஜீத்துக்கு விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்

அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர். அஜீத்தும், விஜய்யும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்து அவர்களின் ரசிகர்களும் நண்பர்களாகிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அஜீத் நடிப்பில் ஆரம்பம் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற […]

சாமியாரின் தங்கப்புதையல் கனவு பொய்யாகிப்போனது!

உனாவ்: உத்திரப்பிரதேசத்தில் புதையலை தோண்டும் பணியை தொல்லியல்துறை கைவிட்டது. உனாவ் கிராமத்தில் மன்னரின் பழங்கால கோட்டையில் புதையல் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதையலை தேடும் பணி நடைபெற்று வந்தது. சாமியார் சோபன் சர்க்கார் கூறிய தகவலையடுத்து தொல்லியல் துறை இந்த ஆய்வில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் துறை புதையல் தோண்டும் பணியை கடந்த 18ம் தேதி துவக்கியது. ஆனால் சாமியார் கூறியது போல் புதையலுக்கான அறிகுறி இதுவரை தென்படாததால் , புதையல் தோண்டும் பணியை தொல்லியல் துறை […]

மலேசியாவில் டிச.28-ந்தேதி இளையராஜா பாடல்கள் இசை நிகழ்ச்சி

இளையராஜா 1980-களில் இசையமைத்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாடும் இசை நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் டிசம்பர் 28–ந்தேதி நடக்கிறது. இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரினி, கங்கைஅமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், ஹரினி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள். இளையராஜாவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக ‘கிங் ஆப் […]

ஸ்டான்லி மருத்துவமனையில் தொடரும் பைக் திருட்டு

தண்டையார்பேட்டை : வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு  1250க்கு மேற்பட்ட நோயாளிகள்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் தங்களது பைக்குகளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த பைக்குகள் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் பலர் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இந்நிலையில் மாதவரத்தை சேர்ந்த ரஜினி (35) என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை […]

ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த விவசாயி

தர்மபுரி: தர்மபுரி அருகே ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2  லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்தார். தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவரது வீட்டில் ஒரு பேன், ஒரு டி.வி, 2 குண்டு பல்பு உள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் […]

சென்னை தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னையில் இரண்டு தபால் நிலையங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய இரண்டு தபால் நிலையங்கள் மீது இந்த பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் இரண்டு தபால் நிலையங்களிலும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

டீசல் விலை லிட்டருக்கு ரூ . 5 உயரலாம்

டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் எனத் செய்திகள்வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை . பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த சிலமாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, அடிக்கடி பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இந்நிலையில், டீசல் விலையை உயர்த்துவது பற்றி கிரித் பரிக் தலைமையிலான கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. […]

மைக்கேல் ஜாக்சன் மரண சர்ச்சை: சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவர் விடுதலை

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம் அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. […]

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். அதற்குப்பிறகு ஏராளமான ஹிந்திப்படங்களிலும்.ரட்சகன் உள்ளிட்ட தமிழ்ப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுஷ்மிதா,பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுநலப்பணியாற்றி வருகிறார். அவருடைய சேவையை பாராட்டி ஹார்மனி பவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை தெரேசா சர்வதேச விருதை வழங்கி உள்ளது.மும்பையில் நடைபெற்ற விழாவில் விருதைப்பெற்றுக்கொண்ட சுஷ்மிதா சென், அன்னை […]

செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியல் ஏறி விண்கலம் ஆய்வு

வாஷிங்டன், அக்.29– செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »