புதுடெல்லி:டெல்லி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி […]
இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த சிறுவன் பிருத்வி. பள்ளிகளுக்கு இடையே மும்பையில் நடந்த போட்டியில் 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிருத்வியை பத்திரிகைகள் பாராட்டியது மட்டுமல்லாமல் அடுத்த சச்சின் உருவாகி வருகிறார் என்று ஆரூடம் தெரிவித்தன. கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தனிப்பட்ட முறையில் பிருத்விக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது: அன்பு பிருத்வி, இது சுருக்கமாக உனக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதம். 546 ரன்கள் எடுத்ததற்காக உன்னை பாராட்டுகிறேன். […]

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சங்கர ராமன் கொலை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் 3.9.2004 அன்று அந்த கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, […]
புதுடெல்லி, நவ. 27– மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது. செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. […]
வாஷிங்டன், சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது. சீனாவின் உத்தரவு சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் […]

18 -12 -2013 அன்று ஆருத்ராதரிசனம் Visit : http://www.youtube.com/niranjanachannel
Nov 27 2013 | Posted in
Headlines,
Video |
Read More »

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு 3-ம் இடம், எழுத்து துறை காட்டும் இடம். அந்த இடத்தில் புதன் அமர்ந்து அந்த புதனை குரு, சந்திரன், சூரியன், சனி பார்த்தாலும் வசனகர்த்தாக்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 3-ம் இடத்தில் புதன் இருப்பது அவசியம். 3-ம் இடத்தை புதன் நேர் பார்வையாக பார்த்தாலும் எழுத்தாளர் – வசனகர்த்தாக்களே! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே.. Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: […]
கடந்த 1979-ஆம் ஆண்டு திரைக்குவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குத் திரைப்படம் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’ ஆகும். முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சோமையாஜுலு, மஞ்சு பார்கவி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் நேரடியாகத் திரையிடப்பட்டு வசூலைக் குவித்த வெளிமாநிலப் படங்களில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமின்றி இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்பட விருதுகள் பலவற்றையும் இந்தப்படம் பெற்றது. 35 வருடங்கள் கடந்த பின்னர் இந்தப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருப்பதாகத் […]
பலசூர், நவ. 23- ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது. இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பிரித்வி ஏவுகணையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த தனுஷ் ஏவுகணை, இன்று காலை […]
புதுச்சேரி, நவ.22– ஹெலன் புயலின் தாக்கத்தையொட்டி புதுவையில் அதிகாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘ஹெலன்’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ‘ஹெலன்’ புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. அது ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் அருகே மையம் கொண்டுள்ளது. புயல் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். ‘ஹெலன்’ புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவையிலும் […]