Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |
Category archives for: முதன்மை பக்கம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் -2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை 2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஐஏஸ் அதிகாரி அசோக் கெம்கா, உத்திரபிரதேச  மாநில ஐஏஎஸ் அதிகாரி துர்கா நாக்பால் ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரமணாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ், […]

IFS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் வெற்றி

வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்வதற்கான IFS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்..அதிலும் திண்டுக்கல்லை சேர்ந்த கவுதம் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். வனத்துறைக்கு வளம்சேர்க்கப்போகும் அவர்களை வாழ்த்தி தமிழகத்தில் இருந்து ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பணியேற்கப்போகும் 15 பேரில் நால்வரை நேர்கண்டு வந்திருக்கிறார் செய்தியாளர் ராம்குமார் ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் IFS தேர்வில் தமிழகத்தை […]

நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது

நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறியதாவது:– நஸ்ரியா–பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது முழுக்க […]

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை இல்லை: தமிழக அரசு

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை எதுவும் இல்லை என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் (சிவகங்கை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) ஆகியோர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி இல்லாததால் சாதாரண மக்கள் வீடுகட்ட முடியவில்லை. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்று […]

மது குடித்துவிட்டு வேலைக்கு வந்தால் ‘சஸ்பெண்டு’: என்.எல்.சி. நிர்வாகம் எச்சரிக்கை

நெய்வேலி, ஜன.31– என்.எல்.சி. நிர்வாகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் சில தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இது பணியிடத்து ஒழுக்கத்தையும், சூழ்நிலையையும் கெடுக்கும் விதமாக அமைகிறது. என்.எல்.சி.யின் நிலை ஆணை விதியின்படி, பணியிடத்தில் மது அருந்துதல், அமைதி குலைவு ஒழுங்கின்மையாக நடத்தல் குற்றமாகும். தொழிலாளர்கள் குடிபோதையில் பணிக்கு வந்து தங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், எந்திரங்களுக்கும் பாதுகாப்பு இன்மையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று […]

தமிழகத்தில் கோமாரி நோய் இல்லை: தமிழக அரசு

கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் கோமாரி நோய் இல்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், கடந்த டிசம்பரம் மாதத்திலேயே தமிழகம் முழுவதும் கோமாரி நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்றார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக […]

இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா அறிக்கை

வாஷிங்டன், ஜன. 31- அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. மேலும், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி உள்ளது. பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முதல் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளது என இந்திய விமான போக்குவரத்து ஆணைய டைரக்டர் ஜெனரல் பிரபாத் குமார் தெரிவித்தார். மேலும் ஆசிய […]

ரஜினியை பார்க்க ஆயிரக் கணக்கானோர் முற்றுகை

பெங்களூர்: பெங்களூர் வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தார். இரவு நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் அம்பரீஷ், நடிகர் துவாரகேஷ், ராஜ்பகதூர், கோபிநாத் உள்பட பலருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். இரவு நேரத்தில் கவிபுரம் கவிகங்காதேஷ்வர கோயில், பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். யாருக்கும் தெரியாமல் […]

சிம்பு–நயன்தாரா ஜோடி காரணமாக ‘இது நம்ம ஆளு’ ஆகிறது படத்தின் பெயர்

சென்னை, சிம்பு–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று பெயர் சூட்டப்போவதாக டைரக்டர் பாண்டிராஜ் கூறினார். 6 வருடங்களுக்கு பின்… 6 வருட இடைவேளைக்கு பின், சிம்புவும், நயன்தாராவும், பாண்டிராஜ் டைரக்டு செய்யும் புதிய படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, ஒருவருக்கொருவர் சிரித்தபடி, ‘ஹாய்’ சொல்லிக்கொண்டார்கள். படப்பிடிப்பு இடைவேளை சமயங்களில் இரண்டு பேரும் நெருக்கமாக அமர்ந்தபடி, சிரித்து பேசிக்கொண்டார்கள். சிம்பு அடித்த ‘ஜோக்’கிற்கு நயன்தாரா விழுந்து […]

ஆசிரியர் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »