
பெர்த் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி நடைபெர்று வருகிறது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது […]
கோலாலம்பூர், ஏப். 26- மலேசியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 என்ற பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது. உயர்தொழில்நுட்பம் கொண்ட ரேடார்கள் உதவியுடன் விமானங்கள் மற்றும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடர்ந்து தேடும் பணி ஈடுபட்டு வருகின்றன. விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் 95 சதவீத பகுதிகளில் தேடும் பணி முடிவடைந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் அடிச்சுவட்டைக்கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் காணாமல் […]
கோச்சடையான் படத்தை நரேந்திரமோடி பார்க்கிறார். குஜராத்தில் இதற்கான சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளார். ரஜினிக்கு நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். […]
சென்னை கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு […]
மும்பை ஒலிம்பிக்கில் குத்து ச்ண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் வீராங்கனை மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மேரி கோம் என்ற இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா குத்துசண்டை வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடகிழக்கு மாநில குத்துச்சண்டை வீராங்கனை ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மசாலாவில் நடந்தது. அப்போது பிரியங்காவுடன் குத்துசண்டை வீராங்கனை இருவரும் […]

வானில் பறந்தபோது 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்சுக்குசொந்தமான போயிங் விமானம், 239 பயணிகளுடன் மலேசியதலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனாவுக்கு பறந்து சென்றபோதுமாயமானது. விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததாஅல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதா என்றுபல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எந்த கேள்விகளுக்கும்பதில் கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் முயற்சிகளும்இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போனவிமானம் குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிடஇருப்பதாக மலேசிய […]

புதுடெல்லி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24-ந்தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில் தெக் சின் அக்தர் கூறியதாவது:- ஒருநாள் பயிற்சி முகாமில் நான், யாசின் பத்கல், அசமதுல்லா அக்தர், ஜியா உர் ரஹ்மான் ஆகிய 4 பேரும் தற்கொலை தாக்குதல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யாசின் பத்கல், இந்தி திரை உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் […]
வாஷிங்டன், ஏப்.25- அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா […]
டோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் […]
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அமைதியாக நடந்தது: 73 சதவீத ஓட்டுப்பதிவு. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்! தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். அதிகபட்டசமாக தர்மபுரியில் 71% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு விடுமுறை விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் – சீல் வைப்பு;ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை! ஐ.டி. நிறுவனங்கள் மீது […]