Tuesday 28th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிடம்

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by NIRANJANA நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.   ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் […]

ஏற்றத்தை தரும் 11-ம் பாவம்! ஜோதிட சிறப்பு கட்டுரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது  என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும்.  உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை. ஆனால். பலர் உழைப்பு உழைப்பு என்று இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, […]

06.09.2013 முதல் பொங்கி எழும் துலா சுக்கிரன்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 16.08.2013 அன்று “சீறி பாயும் கடக செவ்வாய்” என்ற தலைப்பில் யுத்த கிரகமான செவ்வாய்-சனி பார்வையால் விபத்துக்கள், நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, அரசியல் குழப்பங்கள் நிகழக்கூடும் என்று எழுதி இருந்தேன். அவ்வாறே சில நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது. இப்போழுது, 06.09.2013 (வெள்ளிக்கிழமை) முதல், சுக்கிரன், துலா இராசியில் சஞ்சாரம் செய்கிறான். துலாவில் சனி, இராகு, சுக்கிரன் கூட்டணியாக இருந்து, கடக்கத்தில் இருக்கும் செவ்வாயின் பார்வை பெறுகிறார்கள். யுத்த மேகங்கள் கூடிவிட்டன. […]

தூசியும் – ஒட்டடையும் வீட்டுக்கு ஆகாதா? வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]

18.8.2013 முதல் 5.10.2013வரை சீறி பாயும் கடக செவ்வாய்!

18.8.2013 முதல் 5.10.2013வரை சீறி பாயும் கடக செவ்வாய்! by Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  18.8.2013 ஞாயிறு அன்று, செவ்வாய் கடகத்தில் பிரவேசம் செய்ய போகிறார். 18.8.2013 முதல் 5.10.2013வரை கடகத்தில் அமரும் செவ்வாய், நீச்சம் பெற்று இருப்பதாலும், துலாவில் உள்ள உச்சம் பெற்ற சனியை பார்ப்பதாலும், அதே துலா சனி 10-ம் பார்வையாக செவ்வாயை பார்வை செய்வதாலும், அதாவது உச்சனும், நீச்சனும் பார்வை செய்து கொள்கிறார்கள். யுத்த கிரகமான செவ்வாய்-சனியின் காரணமாக, உலகில் […]

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்! வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]

யந்திரமும் – மந்திரமும்! வாஸ்துகலை கட்டுரை

Written by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி […]

பெற்றோரின் ஜாதக ரீதியாக மருமகன் – மருமகள் அமைவார்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் விரைவில் திருமணம் செய்து பேரன், பேத்திகளை  பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த காலத்தில்  பிள்ளைகளுக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் காலகாலத்திலேயே திருமணம் தடையில்லாமல் நடைபெற்றது.  அந்த காலத்தில் மேட்ரிமோனி மையங்கள்  இல்லை. கல்யாண தரகர்களும் அதிகம் இல்லை. ஆனால் இன்றோ தடுக்கி விழுந்தால் மேட்ரிமோனி மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெருகிவிட்டது. எத்தனை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்தாலும் பலருக்கு […]

காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என்றிருப்பவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான். இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள். முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது. முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது […]

ஆடி மாதம் அசுர மழை!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஆடி மாதம் 17.07.2013 புதன் அன்று பிறக்கிறது. சூரியன் மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு செல்கிறார். கடக இராசி, தண்ணீர் சம்மந்தப்பட்ட இராசி. இந்த (கடகம்)  இராசியில் தற்காலம் நீர் சம்மந்தப்பட்ட சுக்கிரன் இருக்கிறான். சுக்கிரனோடு சூரியன் சேர்வதால், ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »