Saturday 18th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?

Guru palanSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண வரன்கள் தேடி வரும். தேடி வந்த வரன்களும் சிறப்பான வரன்களாக இருக்கும். கல்யாண வைபோகமும் அமோகமாக நடைப்பெறும்.

அது சரி, குரு பலன் குரு பலன் என்றார்களே அதை எப்படி தெரிந்துக்கொள்வது?

ஒருவரின் ஜாதகத்தில் இராசிக்கு இரண்டாம் இடத்திலோ, ஏழாம் இடத்திலோ குரு பகவான் சஞ்சாரம் செய்தால் குரு பலன் வந்துவிட்டதாக அறியலாம். காரணம், இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். இந்த இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் குடும்பம் அமைத்து தருகிறார். அதாவது திருமண வாழ்க்கையை குரு பகவான் தருகிறார்.

அதுபோல, ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது. களத்திர ஸ்தானம் என்றால் கணவன் அல்லது மனைவி பற்றி அறியக் கூடிய இடம். இந்த ஏழாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் திருமண வாழ்க்கையை தருகிறார்.

சரி. குரு பகவான் 2, 7-ல் அமர்ந்தால் (சஞ்சரித்தால்) மட்டும் குரு பலன் வந்துவிட்டது என்றோ திருமணம் நடக்கும் என்றோ கூறினால், மற்றப்படி வேறு இடங்களில் குரு பகவான் சஞ்சரித்தால் திருமணம் அமையாதா எனக் கேட்டால், அமையாது என சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால், உதாரணத்திற்கு தற்போது குரு பகவான் மிதுனத்தில் சஞ்சரிக்கிறார்.

அவர் ரிஷப இராசிக்கு இரண்டாம் இடத்திலும், தனுசு இராசிக்கு ஏழாம் இடத்திலும் இருக்கிறார். ஆகவே இந்த இராசிகாரர்கள் குரு பலன் பெறுகிறார்கள்.

அதுபோல குரு பகவான், ஐந்தாம் (5-ம்) பார்வையாக துலா இராசியையும், 7-ம் பார்வையாக தனுசு இராசியையும், 9-ம் பார்வையாக கும்ப இராசியையும் பார்க்கிறார்.

அந்த வகையில், சிம்ம இராசிக்கு 7-ம் இடம் குரு பார்வை பெறுவதால், சிம்ம இராசிகாரர்களுக்கும், கன்னி இராசிக்கு 2-ம் இடம் குரு பார்வை பெறுவதால் கன்னி இராசிகாரர்களுக்கும், மேஷ இராசிக்கு 7-ம் இடம் குரு பார்வை பெறுவதால் மேஷ இராசிகாரர்களுக்கும் குரு பலன் இருக்கிறது என அறியலாம். ஆகவே இவர்களுக்கும் திருமண யோகம் உண்டு.

ஆகவே, குரு பலன் என்பது இராசிக்கு 2-ல், 7-ல் குரு சஞ்சரிப்பதால் மட்டுமல்ல குரு பார்வையாலும் குரு பலன் கிடைத்து திருமண பாக்கியம் பெறுகிறார்கள்.

ஜாதகத்தில் பெரிய தோஷங்கள் ஏதும் இல்லாதபோது, குரு பலனும் சேர்ந்து வந்தால் கெட்டிமேளம்தான்!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights ReservedBhakthi Planet

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech