Monday 22nd June 2026

தலைப்புச் செய்தி :

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன் மொழிந்தார் | நீட் தேர்வு வினாத்தாள் கசிவை அடுத்து விதிக்கப்பட்ட தற்காலிக தடைக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி |
Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

ஏற்றத்தை தரும் 11-ம் பாவம்! ஜோதிட சிறப்பு கட்டுரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது  என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும்.  உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை. ஆனால். பலர் உழைப்பு உழைப்பு என்று இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, […]

06.09.2013 முதல் பொங்கி எழும் துலா சுக்கிரன்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 16.08.2013 அன்று “சீறி பாயும் கடக செவ்வாய்” என்ற தலைப்பில் யுத்த கிரகமான செவ்வாய்-சனி பார்வையால் விபத்துக்கள், நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, அரசியல் குழப்பங்கள் நிகழக்கூடும் என்று எழுதி இருந்தேன். அவ்வாறே சில நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது. இப்போழுது, 06.09.2013 (வெள்ளிக்கிழமை) முதல், சுக்கிரன், துலா இராசியில் சஞ்சாரம் செய்கிறான். துலாவில் சனி, இராகு, சுக்கிரன் கூட்டணியாக இருந்து, கடக்கத்தில் இருக்கும் செவ்வாயின் பார்வை பெறுகிறார்கள். யுத்த மேகங்கள் கூடிவிட்டன. […]

பெற்றோரின் ஜாதக ரீதியாக மருமகன் – மருமகள் அமைவார்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் விரைவில் திருமணம் செய்து பேரன், பேத்திகளை  பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த காலத்தில்  பிள்ளைகளுக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் காலகாலத்திலேயே திருமணம் தடையில்லாமல் நடைபெற்றது.  அந்த காலத்தில் மேட்ரிமோனி மையங்கள்  இல்லை. கல்யாண தரகர்களும் அதிகம் இல்லை. ஆனால் இன்றோ தடுக்கி விழுந்தால் மேட்ரிமோனி மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெருகிவிட்டது. எத்தனை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்தாலும் பலருக்கு […]

காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என்றிருப்பவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான். இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள். முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது. முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது […]

அவசரம், பரபரப்புடன் அதிகம் காணப்படுபவர் யார்? ஜோதிட சிறப்பு கட்டுரை

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு  காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். […]

மனக்குழப்பம் -மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வசதி வாய்ப்புகள் இல்லாமல் அதனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லா வசதிகள் இருந்தும் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இவர்களால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதி இழந்து கஷ்டப்படுகிறார்கள். மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள். ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு ஊரில், […]

குரு குணங்கள் – ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]

ஜாதகப்படி மகா தைரியசாலி யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஒரு கேள்வி எழுந்தது. யார் உண்மையான தைரியசாலி என்பதுதான் அவர் கேள்வி. இதை பற்றி மந்திரிகளிடம் கேட்டார் அரசர். இதற்கு ஒவ்வொரு மந்திரிகளும் ஒவ்வொரு கருத்துகளை சொன்னார்கள்.    முதல் மந்திரி எழுந்தார். “அரசே, சிறு போர் படையாக இருந்தாலும் பெருஞ்சேனையை எதிர்கொள்ள துணிபவர்கள்தான் மகா தைரியசாலி.” என்று கூறி அமர்ந்தார். அடுத்த மந்திரி எழுந்தார். “அரசே, போரில் எதிரிகளுக்கு அஞ்சாமல் போரிட்டு வீர […]

நண்பனும் விரோதி ஆவது ஏன்? – ஜோதிட சிறப்பு கட்டுரை.!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. என் நண்பன் போல யார் இருக்கிறான்? என்று கைகோர்த்து சொன்னவர்களும் ஏதோ சில காரணத்தால், அதே நண்பர்கள் நீயா- நானா என்று  ஆவதும் உண்டு. ஒரே தட்டில் சாப்பிட்டோம் ஆனால் இன்று அவன் யாரோ நான் யாரோ என்று கூறுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் நண்பர்களாக இருந்து திடீர் என்று எதிரிகளாக மாறி விடுகிறார்கள்?. பார்த்து பார்த்து பழகினாலும் சில நண்பர்கள் தேள் போல் கொட்டி விடுவது ஏன்? […]

புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகும் யோகம்…. எழுத்துத் துறையில் புகழும் பணமும் பெறுபவர் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. “ஒரு கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை” என்பது ஒரு சீன பொன்மொழி. கல்வியில் சிறந்தவரெல்லாம் எழுத்தாளராகி விட இயலாது. எழுத்தாளராக பிறப்பது என்பது ஒரு பாக்கியம், ஒரு வரம். விரல்கள் உள்ளவரெல்லாம் வீணை வாசித்துவிட முடியாது என்பதை போல, பேனா பிடிக்க தெரிந்தவரெல்லாம் எழுத்தாளர் ஆகிவிட முடியாது. எழுத்தாளர் ஆவதற்கு மிக முக்கிய தேவை நல்ல சிந்தனை திறன். காலத்திற்கு ஏற்றார்போல ஒரு படைப்பாளின் எழுத்து திறன் அமைய வேண்டும். ஒரு […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »