Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

நண்பனும் விரோதி ஆவது ஏன்? – ஜோதிட சிறப்பு கட்டுரை.!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

என் நண்பன் போல யார் இருக்கிறான்? என்று கைகோர்த்து சொன்னவர்களும் ஏதோ சில காரணத்தால், அதே நண்பர்கள் நீயா- நானா என்று  ஆவதும் உண்டு. ஒரே தட்டில் சாப்பிட்டோம் ஆனால் இன்று அவன் யாரோ நான் யாரோ என்று கூறுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஏன் நண்பர்களாக இருந்து திடீர் என்று எதிரிகளாக மாறி விடுகிறார்கள்?. பார்த்து பார்த்து பழகினாலும் சில நண்பர்கள் தேள் போல் கொட்டி விடுவது ஏன்?

வியபாரத்தை சரி வர கவனிக்காமல், நண்பர்கள்தான் தன் உயிர் என்று சொல்லிக்கொண்டு செலவழித்து வந்தான் ஒருவன்.

“எல்லோரையும் நண்பர்கள் என நம்பாதே. குளத்தில் மீன்கள் இருக்கும்வரைதான் கொக்குகள் அந்த குளத்தில் இருக்கும். அதே குளத்தில்  நீர் வற்றி, மீன்களே இல்லாத பிறகு, பல வருடங்களாக அங்கே இருந்த கொக்குகள் இனி அந்த இடத்தை திரும்பி கூட பார்க்காது. அதுபோலதான் சுயநலத்துடன் உன் நண்பர்களில் பலர் இருப்பார்கள் என்றார் அவனின் தந்தை.

“பெருசுக்கு நம் நட்பை பார்த்து பொறாமை“   என்று நண்பர்களிடத்தில் தன் தந்தையை பற்றியே கேவலமாக பேசினான் மகன்.

காலங்கள் ஓடியது தந்தையின் வியபாரம் நொடிய ஆரம்பித்தது. இனிப்பு இருக்கும் இடத்தில் எறும்பு இருப்பதுபோல, வியபாரியின் மகனுக்கு இப்போது பணம் பற்றாக்குறை என தெரிந்ததும், நண்பர்கள் என சொல்லிக்கொண்டு அவனுடன் திரிந்தவர்கள் விலக ஆரம்பித்தார்கள். அதில் சிலர் அவனுக்கு எதிரான காரியங்களையும் செய்து விரோதியானார்கள்.

இதை கண்ட வியபாரியின் மகன், தன் தந்தை சொன்னது உண்மை என உணர்ந்தான்.

Bhakthi Planetஆனால் இப்படி எல்லா நண்பர்களும் பணத்திற்காக பழகுவதில்லை. நட்புக்கு மரியாதை தருகிற பலர் இருக்கதான் செய்கிறார்கள்.

நல்ல நண்பர்கள் அமைவதும் ஒரு வரம். அந்த வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்தாலும், “எதற்காக என்னுடைய செல்வங்களை இப்படி செலவு செய்கிறாய்?” என்று கர்ணனிடம் துரியோதனன் ஒருநாளும் கேட்டதில்லை.

நண்பன் துரியோதனனுக்கு துன்பங்கள் வந்த போது, செஞ்சோற்றுக்  கடன் தீர்க்க பாடுபட்டானே தவிர, நண்பனுக்கு எதிராக கர்ணனும் செயல்பட்டதில்லை.

நம்மில் பலருக்கு நண்பர்கள்தான் ஏணி படிகளாகவும் இருக்கிறார்கள், நம்மை சறுக்கி விடும் சறுக்கு மரமாகவும் இருக்கிறார்கள்.

எதனால் இப்படி? ஒருவருக்கு நண்பர்களும் விரோதியாவது ஏன்? இதற்கு ஜோதிடகலை சொல்லும் காரணங்கள் என்ன?

நண்பர்களால் இன்னல்கள் நேரும் என்று ஜாதகப்படி அறிந்தால் ஓரளவுக்காவது எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா.

ஒருவர் ஜாதகத்தில் 7-ம் இடம் நண்பர்களை பற்றி அறியும் இடமாகும்.

அந்த 7-ம் இடத்து அதிபதியோடு கேது அல்லது இராகு கூடி எங்கிருந்தாலும், நண்பர்களும் விரோதியாக மாறி விடுவார்கள்.

7-ம் இடத்து அதிபதி, 6,8,12-க்குரியவனோடு சேர்ந்தாலும், நண்பன் விரோதியாவான். 7-க்குரியவன் நீச்சம் பெற்று இருந்தாலும் இதே நிலைதான்.

ஆகவே, இப்படிபட்ட ஜாதகர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும், தொழிலில் கூட்டு சேரும்போது எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதும் அவசியம்.!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Apr 17 2013. Filed under Headlines, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech