Tuesday 10th March 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை

நிரஞ்சனா பில்லி – சூனியம் உண்மையா என்ற சந்தேகம் பலர் மனதில் காலம் காலமாக இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த வினைதான் இந்த ஜென்மத்தில் செய்வினையாக வருகிறது என்றும் அதைதான் நாம் யாரோ நமக்கு செய்த செய்வினை என்கிறோம், அது மூடநம்பிக்கை என்பதும் சிலர் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நம் முன் முற்பிறவி கர்மவினையும் இந்த பிறவியில் நம் எதிரிகளால் செய்யப்படும் துஷ்ட பூஜைகளும் இணைந்தால் அதுவே செய்வினையாகும். செய்வினையால் பாதிப்பு அடைந்தவரின் உண்மை […]

மகாகாளி தில்லையம்மன்

நிரஞ்சனா சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை சொல்லியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. இதனால் சினம் கொண்ட சிவன், “நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்.“ என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சக்திதேவி, தன் தவறுக்கு மன்னிப்பும் அத்துடன் சாப விமோசனமும் கேட்டார்.   “கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் […]

விரோதிகளை அடக்கும் சக்தி தரும் சாளக்கிராமம் – சுதர்சன சக்கரம்

நிரஞ்சனா சாளக்கிராமம் உருவான கதையை பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ – விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும் பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று பயந்தார்கள் தேவர்கள். இவர்களின் மன பயத்தை புரிந்து கொண்ட விஷ்ணுபகவான், மோகினி உருவம் எடுத்து […]

முன் ஜென்ம வினைக்கு வழிபாடு சித்திர குப்தர்

நிரஞ்சனா சித்திரகுப்தர். இவரை பற்றி  முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?. அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு […]

கொதிக்கும் உணவில் சாய்பாபா செய்த அற்புதம்

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 6 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் தாஸ்கணு பாபாவிடம், “நான் புனித நதிகளை தரிசிக்க போகிறேன். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்.“ என்றார். கங்கை, காவேரி போன்ற பல புனிதநீரை பாபா தன் கால் பாதத்திலேயே வரவழைத்தார். அந்த புனிதநீரை மக்கள் எல்லோரும் தலையில் தெளித்து கொண்டார்கள். அந்த இடத்திற்கு “பிரயாகை நதி“ என்று பெயர் வைத்தார்கள். ஒருநாள், ஈஷா உபநிஷத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து […]

ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி –  5 நிரஞ்சனா  முந்தைய பதிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்  நம்பியாரூரர் விழித்து பார்த்த போது தலைக்கு வைத்து படுத்திருந்த செங்கல் தங்ககல்லாக மாறி ஜொலித்தது. இதை கண்டு, “எம் இன்னலை தீர்த்த இறைவனே..!“ என்று போற்றி மகிழ்ந்தார். திருப்புகலூர் ஈசனால் கிடைத்தது இது. “தம்மையே புகழ்ந்து“ என்று தொடங்கும் திருபதிகத்தை பாடினார். தன் ஊரான திருவாரூர் சென்று அங்கு இருக்கும் சிவனை வணங்கி தன் இல்லத்திற்கு சென்றார். திருவிழாவை சிறப்பாக […]

திருப்பம் தரும் திருபரங்குன்றம்

நிரஞ்சனா கயிலாயமலையில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசித்து கொண்டு இருந்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த பாலமுருகனும் இதை கேட்டார். “தந்தை என் தாய்க்கு உபதேசித்ததை நான் அவர் அனுமதியில்லாமல் கேட்பது பாவசெயல்.“ என்று அவர் மனம் கருதி திருப்பரங்குன்றம் சென்று தவம் இருந்தார். முருகனின் தவத்தை ஏற்று சிவசக்தி காட்சி தந்தார்கள். அவர்கள் காட்சி தந்த இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக இப்போது திகழ்கிறது. மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்கள் திருபரங்குன்றத்தில் முருகனையும் […]

சாம்பிரானியுடன் குங்குலியம்.

நிரஞ்சனா கலயனார் என்பவர் தினமும் ஈசனையே வணங்கி வருவார்.  சிவலாயத்தில் சாம்பிரானி போடும் போது குங்குலியத்தையும் தன் பங்குக்கு கொடுத்து போட சொல்வார். குங்குலியத்தை ஆலயத்திற்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பல வருடங்கள் இந்த வழக்கம் தொடர்ந்தது. தங்கத்தை தீயில் காட்டி தட்டி அழகான ஆபரணம் செய்வார்கள். வைரத்தை பட்டை தீட்டினால்தான் பலபலக்கும். இந்த இரண்டுக்கும் சோதனை வந்தாலும் முடிவில் மதிப்பு அதிகமாக கிடைக்கும். அதேபோலதான் இறைவன் பக்தர்களை சோதித்து பார்ப்பதும். ஈசனின் திருவிளையாட்டில் இருந்து யார்தான் […]

வாகன சக்கரங்களில் எலுமிச்சை நசுக்குவது எதற்காக?

நிரஞ்சனா சும்பன்-நிசும்பன் இருவரும் உடன் பிறந்த சகோதர்கள் பிரம்மனை நினைத்து கடும் தவம் செய்து,  கருவில் உருவாகாத பெண்ணால்தான் தங்களுக்கு மரணம் நேர வேண்டும் என்கிற வரம் பெற்றவர்கள். கருவில் உருவாகாமல் எப்படி உயிர் ஜெனனம் ஆகும்? அதனால் சும்பனையும் நிசும்பனையும் யமனால் நெருங்கவே முடியவில்லை. இப்படிபட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எத்தனை யுகம் மாறினாலும் நாமும் உயிருடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் “ரக்த பீஜன்“ என்ற அசுரனும் இந்த அசுர சகோதர்களுடன் கூட்டு சேர்ந்தான். ரக்த […]

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500

 நிரஞ்சனா நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »