Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

திருப்பம் தரும் திருபரங்குன்றம்

நிரஞ்சனா

கயிலாயமலையில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசித்து கொண்டு இருந்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த பாலமுருகனும் இதை கேட்டார். “தந்தை என் தாய்க்கு உபதேசித்ததை நான் அவர் அனுமதியில்லாமல் கேட்பது பாவசெயல்.“ என்று அவர் மனம் கருதி திருப்பரங்குன்றம் சென்று தவம் இருந்தார். முருகனின் தவத்தை ஏற்று சிவசக்தி காட்சி தந்தார்கள். அவர்கள் காட்சி தந்த இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக இப்போது திகழ்கிறது.

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்கள் திருபரங்குன்றத்தில் முருகனையும் தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால்தான் இன்னும் நம் பிராத்தனைக்கு பலன் கிடைக்கும் என்கிறது ஸ்தல வரலாறு. இந்த திருத்தலத்திற்கு சென்றால் திருமணம் நடக்காதவர்களுக்கும் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். சூரபத்மனை போர் செய்து ஜெயித்தவுடன் இந்த கோவிலில்தான் தெய்வானைக்கும் முருகனுக்கும் திருமணம் நடந்தது.

நக்கீரர், கோவிலுக்குள் செல்வதற்கு முன்னதாக ஒரு குளத்தின் அருகே சிவ பூஜைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் இலை அந்த குளத்தில் பட்டது. இலையின் ஒரு பாதி தண்ணீரிலும் மறுபாதி இலை மண்ணிலும் இருந்ததால் தண்ணீரில் இருந்த இலையின் ஒரு பகுதி மீனாகவும் தரையில் இருந்த இலையின் மறுபகுதி பறவையாகவும் மாறியது.. இந்த காட்சியை கண்ட நக்கீரர் சிவபூஜையில் கவனம் செலுத்தவில்லை. ஒருவன் சிவபூஜையில் லயித்து இருக்கும் போது எக்காரணம் கொண்டும் மனதில் வேறு எண்ணங்கள் பார்வை வேறு விஷயத்தில் இருக்கக் கூடாது என்பது சிவபூஜை விதி. இதனால் சிவ வழிபாட்டில் கவனம் செலுத்தாத நக்கீரர் ஒரு ஆபத்தை சந்தித்தார். கற்கிமுகி என்ற பூதம், முனிவர்களோ ரிஷிகளோ யாராக இருந்தாலும் சிவபூஜை செய்யும் போது அவர்கள் மனம் வேறு கவனத்தில் சென்றால் அவர்களை சிறை பிடித்துக்கொள்ளும். கற்கிமுகியின் நோக்கம் ஆயிரம் பேரை ஒன்றாக வைத்து சாப்பிட வேண்டும் என்ற சபதத்துடன் இருந்தது. இதனாலேயே சிவபூஜை செய்யும் முனிவர்களின் மனதை ஒருமுகப்படுத்தாமல் இருக்க மாயமந்திர வித்தைகளை செய்து பல இதுவரை மொத்தம் 999 பேரை  சிறை பிடித்தது. இன்னும் ஒருவரை பிடித்தால் ஆயிரம் ஆகும் என்ற எண்ணத்தில் அலைந்து கொண்டு இருந்தது அந்த பூதம்.

சிவபூஜை செய்யும் போது பூதத்தின் மந்திர வித்தையால் நக்கீரரின் கவனம் மாறியதால் நக்கீரரை சிறை பிடித்தது கற்கிமுகி. கற்கிமுகி பூதத்தால் சிறைபிடிக்கப்பட்ட 999 பேர் நக்கீரரை கண்ட உடன் கடும் கோபம் கொண்டார்கள். “

போச்சு போச்சு… நாம் இன்று பூதத்திற்கு உணவாக வேண்டியதுதான்.“ என்று அழுது புலம்ப ஆரம்பித்தார்கள்.

“பதட்டம் பலத்தை இழக்கச் செய்யும். இதனால் பாதிப்புதான் வரும். யாரும் பயப்படவேண்டாம். என் அப்பன் முருகன் இருக்க பயம் ஏன்?.“ என்று கூறி மற்றவர்களுக்காகவும் தனக்காகவும் முருகனை வணங்கி “திருமுருகாற்றுப்படை“ இயற்றி பாடினார் நக்கீரர். அபிராமபட்டர் அரசரிடம் மாட்டி கொண்ட பிறகு எவ்வாறு, “அம்மா… எல்லாம் உன் செயல்.“ என சரண் அடைந்து, “அபிராமி அந்தாதி“ பாடலை இயற்றி பாடி அம்பிகையை வரவழைத்து தப்பினாரோ, அதுபோல் நக்கீரரும் திருமுருகாற்றுப்படையை ஆபத்தான இத்தருணத்தில் இயற்றி பாடியதால் கற்கிமுகி என்கிற பூதத்திடம் இருந்து நக்கீரரையும் மற்றவர்களையும் சேர்த்து காப்பாற்றினார் முருகப் பெருமான்.

முருகனுக்கு அபிஷேகத்திற்காக தினமும் சந்நியாசிக்கிணறு என்று சொல்லப்படும் பிரம்ம சுப தீர்த்தம் என்ற கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து வருவார்கள். இந்த கிணறு பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம்.

கோவிதாரத்துவசன் என்ற பாண்டிய அரசருக்கு எந்த மருந்து எடுத்துக்கொண்டும் வெண்குஷ்ட நோய் தீர வில்லை. மனிதர்களின் மேல் நம்பிக்கை போனால்தான் தெய்வத்தின் மீது முழு ஈடுபாடான நம்பிக்கை வைப்பார்கள். மன்னராக இருந்தாலும், சராசரி மனிதர்களின் மனநிலையில்தானே இருப்பார்.

“சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை“ என்பதை உணர்ந்து முருகனை மனதால் தியானித்து அந்த கிணற்று நீரில் குளித்தார் அரசர். என்ன ஆச்சரியம்… தீராத வெண்குஷ்டநோய் முருகனின் மகிமையால் பூரணமாக குணம் கிடைத்தது. இதை கண்ட மக்களும் பலன் கண்ட அரசரும், இந்த கிணற்று நீருக்கு மருத்துவ குணம் இருக்கிறது, அத்துடன் இறைவனே இங்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை வணங்கினால் தடை படும் திருமணம் விரைவில் நடக்கும். தீராத நோயும் தீரும். நக்கீரரால் இயற்றப்பட்ட திருமுருகாற்றுப்படையை பாடினால் விரோதிகள் அழிவார்கள். குடும்பம் செழிக்கும்.

 © 2011 bhakthiplanet.com All Rights Reserved

Posted by on Apr 12 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முருகன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech