Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

கிரகநிலைகள் எச்சரிக்கையான நேரம் – Coronavirus

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG

தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன்.

காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை பார்வை செய்கிறது.

பொதுவாக, விஷ காய்ச்சல், விஷ பூச்சிகளால் பாதிப்பை உண்டாக்க கூடிய நோய் நொடிகளை இராகு தருவார். ஆகவே தற்காலம் இராகு பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறார். செவ்வாய் உச்சம் பெற்று விட்டார். மகரத்தில் செவ்வாய் உச்சம். 13.4.2020 அன்று சூரியன், மேஷத்தில் உச்சம். இந்த காலகட்டத்தில் செவ்வாயும் உச்சம், சூரியனும் உச்சம். சூரியனை செவ்வாய் 4-ம் பார்வையாக பார்க்கிறார். உச்சனை உச்சன் பார்த்தால், பிச்சை கூட கிடைக்காது என்கிறபடி பொருளாதாரம் பெரும் பாதிப்பு அடையும் ஆபத்து உள்ளது. நமக்கு உதவி செய்தவர்களுக்கு கூட உதவ முடியாமல் சிரமப்படகூடிய காலகட்டமாக இருக்கும். 04.05.2020வரை மிக,மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்.

உலகளவில் அதாவது அன்னிய நாட்டவர்களை குறிப்பிடும் கிரகம் இராகு. அந்த இராகுவை 13.04.2020 முதல் சூரியன் 3-ம் பார்வையாக பார்வை செய்வதால் உலகளவில் வெளிநாட்வர்களுக்கு பெரும் துன்பங்கள் வர வாய்ப்புள்ளது.

பொதுவாக சனி இல்லத்தில் செவ்வாய் இருந்தாலோ, செவ்வாய் வீட்டில் சனி இருந்தாலோ கலவரம், ஒற்றுமை குறைவது போன்றவை இருக்கும்.

ஆகவே, 13.04.2020 முதல் 04.05.2020வரை மிக,மிக எச்சரிக்கையாக ஆரோக்கியத்தை நல்லவிதமாக அரசாங்கம் சொல்வதை கேட்டு அதன்படி கட்டுபட்டு வாழ்ந்தால் நல்லது. எனக்கு எல்லாம் தெரியும், என்னை எதுவும் ஒன்றும் செய்யாது என்று தேவையில்லாமல் ஊர் சுற்றி, சுகாதாரம் அற்ற உணவுகளை சாப்பிட்டு பிரச்னையில் மாட்டாதீர்கள். வீட்டுக்குள் வரும்போது கை, கால்களை சுத்தமாக கழுவி செல்லுங்கள். அப்படி இல்லாமல் இறுமாப்போடு இருந்தால் இருமி, இருமி போக வேண்டியதுதான். ஆகவே என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறன். ஏற்கனவே நான் மார்ச் 23 முதல் சிரமமான நேரம் என்று கூறி நமது bhakthiplanet.com இணையதளத்தில் கணிப்பை ( https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) பதிவு செய்திருந்தேன். இப்பொழுது கூறுகிறேன், வரும் 13.04.2020 முதல் 04.05.2020வரை மிகுந்த சோதனை நேரம். கவனம் தேவை. இதற்கு ஒரே தீர்வு வீட்டில் அமைதியாக இறைவனை பிராத்தனை செய்வோம். அம்பாளை வணங்கி அமைதியான வாழ்க்கை பெறுவோம்.

ENGLISH VERSION HERE – CLICK

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »