Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: August, 2011

ஸ்ரீஆதிசங்கரர் அதிசய தோடு அம்பிகைக்கு அணிவித்தது ஏன்?

பகுதி – 2  இதன் முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா  கைலாய மலையில் புட்பதந்தன், மாலியவான் என்கிற இரண்டு சிவகணங்கள் இருந்தார்கள். சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் இருவரும் போட்டி போடுவார்கள். ”நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள்.” என்று பலமுறை சிவபெருமானும் சொல்லி பார்த்தார். ஆனால் அந்த சிவகணங்கள் கேட்பதாக இல்லை. ஒருநாள் சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டு புட்பதந்தனை யானையாகவும் மாலியவானை சிலந்தியாகவும் பிறக்கும்படி சாபமிட்டார். இருவரும் அவ்வாரே பிறவி எடுத்தனர். அதுவும் ஒரே […]

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்

பகுதி – 1  நிரஞ்சனா திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ளது ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். பிரம்மனால் அன்னை ஆணாக மாறிய சம்பவம் பிரம்மன், தன் படைக்கும் தொழிலை சிறப்பாக செய்துவந்தார். சித்திர குப்தரும் அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கை பிரம்மனிடம் தருவார். ஒருநாள் சித்திரகுப்தர், ஒரு ஆத்மாவின் பாவ புண்ணிய கணக்கை சரிபார்த்த போது அந்த ஆத்மா பாவமே செய்யாமல் அதிக புண்ணியம் மட்டுமே செய்திருந்தது. இதனால் அந்த அந்த ஆத்மாவை பற்றி “புண்ணியவான்” வரிசையில் எழுதி […]

பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா யார் இந்த சாய்பாபா? எதற்காக சீரடிக்கு வந்தார்.? அவர் மகானா அல்லது மந்திரவாதியா? போன்ற கேள்விகளை தீயவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். இதை உடனே அறிய வேண்டும், நமக்காக இல்லை என்றாலும் பாபாவை பற்றி அவதூறாக பேசும் சண்டாளர்களின் வாயை மூட வேண்டும் என்ற முடிவுடன் சிலர் கண்டோபா ஆலயத்திற்கு சென்று(சிவன் கோயில்) பூசாரியிடம் குறி கேட்டார்கள். அதை காண சீரடி […]

வீர சிவாஜியின் உருவில் எதிரிகளுக்கு தோன்றிய ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர்

நிரஞ்சனா அருள்மிகு ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் விட்டலாபுரம் – 627 304 திருநெல்வேலி மாவட்டம்.   கோயில் உருவான கதை   16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசரின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலாராயன் என்ற விட்டலதேவன் ஆட்சி செய்து வந்தார். இவர் பகவான் பாண்டுரங்கன் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். எதையும் பாண்டுரங்கனால்தான் செய்ய முடியும் என்று அதிகமாக நம்பிக்கை கொண்டு இருப்பார். இவருடைய பக்தியை கண்ட எல்லோரும் பாராட்டி வணங்கும் பக்திமானாக திகழ்ந்தார். ஒருநாள்  பாண்டுரங்க […]

திருமண அலங்காரத்தில் உள்ள அம்மனை தரிசித்தால் திருமண தடை நீங்கும்

நிரஞ்சனா திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 2.கி.மி மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது, திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் ஆலயம். திருமண கோலத்தில் காட்சி தரும் காந்திமதி அம்மன் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது கொண்டு இருந்தது. சிவ-சக்தியின் திருமணத்தை காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள், பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாக திரண்டு வந்ததால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது, தென்திசை உயர்ந்தது.  இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech