Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

திருமண அலங்காரத்தில் உள்ள அம்மனை தரிசித்தால் திருமண தடை நீங்கும்

நிரஞ்சனா

திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 2.கி.மி மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது, திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் ஆலயம்.

திருமண கோலத்தில் காட்சி தரும் காந்திமதி அம்மன்

சிவபெருமானுக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது கொண்டு இருந்தது. சிவ-சக்தியின் திருமணத்தை காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள், பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாக திரண்டு வந்ததால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது, தென்திசை உயர்ந்தது.  இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான சிவபெருமான் அகத்திய முனிவரிடம், “அகத்தியனே நீ தென்திசைக்கு சென்று பூமியை சமமாக்கு” என்றார்.

“இறைவா… தங்கள் திருமணத்தை காண பாக்கியம் இல்லாதவனா தான்” என்று வருந்தினார் அகத்தியர். “கவலை வேண்டாம். நீ எங்களை திருமண கோலத்தில் காண நினைக்கும் போது, நாங்கள் உனக்கு காட்சி தந்தருளுவோம்.” என்றார் இறைவன். அவ்வாரே தென்திசை வந்த அகத்தியரால் பூமி சமநிலையை அடைந்தது.

ஒருநாள் அகத்திய முனிவர் சிவனை நினைத்து தவம் இருந்தார். இறைவனின் திருமண கோலத்தை காண விரும்பினார். சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணகோலத்தில் அகத்தியருக்கு காட்சி தந்தனர். இப்படி இறைவனும் இறைவியும் அகத்தியருக்கு திருமண காட்சி தந்த ஊர்களில் ஒன்று திருநெல்வேலி. அகத்தியரின் வேண்டுகோளுக்கு அருளி இன்றுவரை திருமண கோலத்தில் அம்மன் காந்திமதியாக பக்தர்களுக்கும் தரிசனம் தந்து வருகிறாள்.

கோயில் உருவான கதை

அரசர் ராமபாண்டியனின் அரண்மனைக்கு சென்று தினம் பால் விநியோகம் செய்யும் வேதபட்டர் என்பவர், ஒருநாள் நிறைந்த  பால் குடத்துடன் அரண்மனைக்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்த பட்டர், கையில் இருந்த குடம் உடைந்து பாலேல்லாம் கொட்டிவிட்டது. இதே போல் அதே இடத்தில் இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. அரண்மனைக்கு சில நாட்களாக சரியாக பால் வராததால் மன்னர் கோபம் அடைந்து பட்டரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அரசரின் முன் நிறுத்தப்பட்ட வேதபட்டர், “அரசே.. நான் தினமும் அரண்மனைக்கு பால் கொண்டு வரும் வழியில் ஒரே இடத்தில் கால் தடுமாறி விழுந்து விடுகிறேன். ஒருநாள் அல்ல இரண்டு நாளல்ல…பலநாட்களாக இதுவே நடக்கிறது. இதனால்தான் அரண்மனைக்கு வரும் பால் தடைப்பட்டது.” என்றார் பால்காரரான பட்டர். சரி நீ போ என்று தண்டனை ஏதும் தராமல் பட்டரை அனுப்பிவிட்டார் அரசர். பட்டர் சொல்வது உண்மைதானா என்பதை கண்டறிய மறுநாள் காவலர்களை பட்டர் வரும் வழியில் கண்காணிக்க அனுப்பினார் அரசர் இராமபாண்டியன். மறுநாள் காவலர்களும் பட்டர் வழக்கமாக வரும் வழியில் மறைந்திருந்தபடி கண்காணித்தனர். பால்காரர் வந்தார். ஒரு இடத்தில் கால் தவறி விழுந்தார். குடம் உடைந்து பால் கொட்டிவிட்டது. இதை கண்ட காவலர்கள் பால்காரர் சொன்னது உண்மைதான் என்றார்கள்.

மறுநாள் வேறு சில காவலர்களை பால் குடத்துடன் அனுப்பி பால்காரர் வரும் அதே வழியில் நடந்து வரும்படி அனுப்பினார் அரசர். காவலர்களும் பால் குடத்துடன் அந்த வழியாக வந்தார் சரியாக ஒரு இடத்தில் வரும் போது கால் தவறி விழுந்தார்கள். பால் குடம் உடைந்து பால் கொட்டியது. உடனடியாக பால் கொட்டிய அந்த இடத்தை கோடாரியால் வேகமாக வெட்டினார்கள். அப்போது அந்த இடத்தில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியது. இதை கண்டு காவலர்கள் சற்று அச்சம் கொண்டாலும் மீண்டும் தோண்ட தொடங்கினார்கள். அப்போது பூமிக்குள் ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்து, அதை பத்திரமாக வெளியே எடுத்து வைத்துவிட்டு,. அரசரிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள். ஆனால் அரசர் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல்  விட்டுவிட்டார். சுயம்புவாக தோன்றிய லிங்கத்தை அதே இடத்தில் தினமும் வழிப்பட்டு வந்தார் பால்காரர் பட்டர். தினமும் சிவனுக்கு உணவு படைக்க, நெல்லை சுத்தமாக கழுவி இறைவன் முன்பாகவே அந்த நெல்லை காயப்போடுவார். ஒருநாள் இப்படி நெல்லை காயப்போட்டுவிட்டு ஆற்றில் குளிக்க சென்றார் பட்டர்.

அப்போது பலத்த மழை பெய்தது. இதை கண்ட பட்டர், காயப்போட்ட நெல் மழையில் நனைந்து நீரில் அடித்துக் கொண்டு போய்விடபோகிறது என்று பயந்து ஓடி வந்தார். ஆனால் தெய்வ அதிசயமாக காயப் வைக்கப்பட்டிருந்த நெல் இருக்கும் இடத்தில் மட்டும் மழை பொழியாமல் வெயில் அடித்து கொண்டு இருந்தது. இந்த அதிசயத்தை அரசர் பார்க்கட்டும் என்று அரண்மனைக்கு ஓடிவந்து விஷயத்தை சொன்னார். காவலர்களுடன் அரசர் வந்து பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அப்போது வானில் ஒரு அசரீரி ஒலித்தது.

“இவ்விடத்தில் நாம் இருக்கிறோம். ஒரு திருக்கோயில் அமைத்திடுக. நமக்காக நெல் காயவைத்த இடத்தில் மட்டும் வேலி போட்டது போன்று மழை வராமல் நெல்லை காத்ததால், இப்பகுதிக்கு “நெல்வேலி என்று பெயர் சூட்டுகிறோம்.” என்றார் அசரீரியாக இறைவன். இதனால்தான் திரு என்கிற திருமகளின் மரியாதை சொல்லையும் சேர்த்து “திருநெல்வேலி” என்று பெயர் பெற்றது இவ்வூர். இக்கோயிலில் உள்ள இறைவனை, “நெல்வேலி நாதர்” என்றும் “நெல்லை கோவிந்தர்” என்றும் அழைக்கப்படுகிறார். கோடாரியால் லிங்கம் வெட்டுப்பட்டதால் இடப்பக்கம் மூலவரின் தலையில் வெட்டுகாயம் இருக்கிறது. என்னதான் நெல்வேலி நாதருக்கு பெயர் இருந்தாலும், இந்த ஊரை ஆட்சி செய்வது காந்திமதி அம்மன்தான். மதுரைக்கு ஸ்ரீமீனாட்சி, காஞ்சியில் ஸ்ரீகாமாட்சி திருநெல்வேலியில் ஸ்ரீகாந்திமதியின் ஆட்சி.

தடைபட்ட பொன்னழகனின் திருமணம் நடத்தி வைத்தார் அம்மன்

பாப்பையன் என்பவருக்கு நல்ல குணவதியான மனைவி. அவள் பெயர் நாகமணி. செல்வ வசதியும், நல்ல குணமும் படைத்த இவர்களுக்கு பொன்னழகன் என்ற ஒரு மகன் இருந்தான்.  பெயர்க்கேற்ப  எல்லோரையும் கவரும் பொன்னழகன். உறவினர் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பொன்னழகனுக்கு நல்ல பெயர் இருந்தது. இருந்தாலும் ஏனோ திருமண பாக்கியம் இல்லாமல் இருந்தான். இவன் வயதில் இருப்பவர்களுக்கெல்லாம் திருமணம் குழந்தை என்று குடும்ப வாழ்க்கையில் இருக்கும் போது தங்கள் மகனுக்கு காலகாலத்தில் திருமணம் நடக்கவில்லையே என்ற கவலை இருந்தது. உறவினர் வகையில் எந்த பெண்ணும் சரியாக அமையவில்லை. எல்லா வசதி இருந்தும் தன் மகனின் திருமணம் நடக்கவில்லையே இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய ஜோதிடரிடம் சென்றனர் பொன்னழகனின் பெற்றோர்.

பொன்னழகனின் ஜாதகத்தை கண்ட ஜோதிடர், “கவலைபடாதீர்கள். திருமணம் கைக்கூட இறைவனை வணங்குங்கள். நல்லதே நடக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் எந்த பெரிய தோஷமும் இல்லை. சில கிரக தடைகளே உள்ளன.  அந்த கிரக தடைகளை நீக்குபவள் நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன். அவளின் திருக்கோயிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சாத்துங்கள். கல்யாண கோலமுகத்தில் இருக்கும் அம்மனை கண்டு வணங்கி வாருங்கள். அம்மனை கல்யாண அலங்காரத்தில் கண்டால் கிரக கோளாறுகளால் திருமணம் தடைப்படும் உங்கள் மகனுக்கு திருமண பாக்கியத்தை ஸ்ரீகாந்திமதி நிச்சயம் அருளுவாள்.

அத்துடன் கோயிலில் பொங்கல் படைத்து வணங்குங்கள்.” என்றார் ஜோதிடர். ஜோதிடர் கூறியது போல் தங்கள் மகன் பொன்னழகனை நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்று பரிகாரங்களை செய்தனர் பாப்பையா தம்பதியினர். திருமண கோலமுகத்தில் இருக்கும் அம்மனை கண்டதால் சில மாதங்களிலேயே திருமண தடை நீங்கி, பொன்னழகனுக்கு அழகும் நல்ல குணமும் படைத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. தன் மகனின் திருமண வைபவத்தை கண்குளிர காண்போமா என்று ஏங்கி தவித்த பெற்றோர்களின் மனத்தில் ஆனந்தம் பொங்கியது.

ஸ்ரீகாந்திமதி அம்மனை திருமண அலங்கார கோலத்தில் தரிசித்தால் திருமணம் தடைப்படுபவர்களுக்கு நிச்சயம் திருமணம் பாக்கியம் அமையும்.

 

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Aug 1 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech