Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

எண்ணங்கள் ஈடேறுமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் […]

தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. சந்திரனோடு சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2.5.9.11-ல் இருந்தால் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். சந்திரனை சூரியன் நேர் பார்வையாக பார்த்தாலும், தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை (நேர்பார்வை) பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள்! மூக்கின் மேல் கோபம் யாருக்கு? லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கினத்தில் செவ்வாய் […]

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழா முருகப்பெருமானின் 2–வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 3–ந் தேதி யாக சாலை பூஜையுடன் […]

திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’

டெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட […]

3டி-யில் ஷோலே

இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ஷோலே. இந்தியன் கமர்ஷியல் சினிமாக்களை ஷோலேக்கு முன் ஷோலேக்கு பின் என்று பிரிக்கலாம். ஷோலேக்கு பிறகு வெளிவந்த கமர்ஷியல் படங்களில் அப்படத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயா பச்சன் நடித்த ஷோலே 1975-ல் வெளியானது. இந்தியா முழுக்க வரவேற்பை பெற்ற இப்படத்தை 3டி-யில் வெளியிடுகிறார்கள். யுடிவி அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஷோலேயை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். திரைக்கதை ஜாவேத் அக்தர், சலீம் கான். […]

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் மீட்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரினை பகுதியில், மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 30 பேரும், அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும், இலங்கை கடற்படையால் […]

சார்பதிவாளர் அலுவலகங்களை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை, ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இனி சொந்தக் கட்டிடம் நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய […]

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கம்

சென்னை, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் உள்ள சில அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.இதன் காரணமாக, இரு தினங்களாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு பேருந்துப் போக்குவரத்து இன்று  மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  அறுசுவை […]

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது

திருப்பதி, நவ. 9– திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். வைகுண்டம் 2–வது கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 500 மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் […]

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன்

நியூயார்க், நவ 9– அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள இப்போலியில் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை டெப்ராடிரைடென் என்ற பெண் டிரைவர் பஸ்சில் அழைத்து வந்தார். அப்போது பஸ்சில் வந்த ஒரு 9 வயது சிறுவன் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கை துப்பாக்கியை தனது பைக்குள் வைத்து எடுத்து வந்து இருந்தான். அதை வெளியே எடுத்து சக மாணவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான். […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »