தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். சிட்டிபாபு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் சர்ஜரி’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4 ஆம் தேதி அவர் திடீரென […]

சென்னையில் தமிழில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். சான்றிதழ் பெற்றோர் மற்றும் புதிதாக பெற விரும்புவோர் இந்த புதிய திட்டத்தில், தங்கள் விருப்பப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் அறுசுவை சமையல் […]
மும்பையில், மாமியார் ஒருவர், தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார். மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தம் அடைந்திருந்த நேரத்தில், வைஷாலியின், மாமியார் சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.இதை […]
மும்பை : கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் கூறியதாவது: கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரி க்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் […]
சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும் ஆண்ட்ரியாவும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். அந்த படத் தில் நடித்தபோது இப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. படத்தில் நடித்தபோது இருவருக்கும் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று வி.டி.வி. கணேஷ் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு, ஆண்ட்ரியா இடையே காதல் துளிர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். […]
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய படங்களில் தலைப்பை வித்தியாசமாக வைக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களை 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் […]
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (8ம் தேதி) மாலை 4.35 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் தீவு உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கில் 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீவை ‘ஹையான்’ என்ற புயல் நெருங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் […]
சென்னை, உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார். ஆனந்த் பேட்டி நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? […]
சென்னை விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியை தொடக்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:– சதுரங்கத்துக்கு பொற்காலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில், இந்தப்போட்டி நடைபெறுவது, சதுரங்கத்துக்கு பொற்காலமாகும். மிகப்பழமையான புத்திகூர்மைக்கான இந்த விளையாட்டின் தாயகமான இந்தியாவில், முதல்முறையாக இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக சதுரங்க வாகையர் […]