Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

மகளிருக்காக மட்டும் திறக்கப்பட்ட பாரதிய மஹிலா வங்கி.

முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு , பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் வங்கி  இன்று லக்னோவில் திறக்கப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மும்பையில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர். முதலில் நாடு முழுவதும் எழு கிளைகள் திறக்கப்படுகிறது. லக்னோவில் இன்று திறக்கப்பட்ட கிளையில் 10 பெண் ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு […]

பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இயக்குனர் பாலசந்தருக்கு அவ‌ரின் கலையுலக பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. ரெய்ன் ட்ராப் என்ற சமூக அமைப்பு இந்த விருதை வழங்குகிறது. அதன் செய்திக் குறிப்பில், கடந்த பல வருடங்களாக திரையுலகுக்கு பாலசந்தர் ஆற்றிவரும் அளப்ப‌ரிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி இந்த விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது. ஜோதிட […]

இங்கிலாந்தின் பிரபல ஹோட்டல் உரிமையாளர்களிடையே எழுந்துள்ள சொத்துப் பிரச்சினை

லண்டன், நவ. 19- இங்கிலாந்தில் உள்ள பிரபலமான ராடிசன் புளூ எட்வர்டியன் ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் பஞ்சாபைச் சேர்ந்த பல் மொகிந்தர் சிங் (86) என்பவராவார். தனது இளமைக்காலத்தில் சில வருடங்களை ஆப்பிரிக்காவில் கழித்தபின், இங்கிலாந்திற்கு வந்த மொகிந்தர் சிங் ஹோட்டல் வியாபாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தார். இவரது மகனான ஜஸ்மிந்தர் சிங் என்பவரே தற்போது இந்த ஹோட்டல் நிர்வாகங்களைக் கவனித்து வருகின்றார். இவர் மீதுதான் ஹோட்டல் நிர்வாகத்தை முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொண்டதாகவும், தங்களது சீக்கிய மத […]

மண்டேலாவால் பேச முடியவில்லை, உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்வதால் தற்போது அவரால் பேசமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 வயதாகும் நெல்சன் மண்டேலாவிற்கு சில மாதங்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், மீண்டும் மண்டேலாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் […]

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள விண்கலமும் மங்கள்யான் விண்கலமும் ஒன்றுக்கொன்று போட்டி அல்ல – ராதாகிருஷ்ணன்

செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள மோவன் விண்கலமும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் ஒன்றுக்கொன்று போட்டி அல்ல என்றும் பரஸ்பரம் உதவி செய்பவை என்றும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து, சென்னை வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விண்கலம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு, பாரத ரத்னா விருது […]

சினேகா கர்ப்பமான செய்தி உண்மையில்லை: உறுதிப்படுத்தினார் கணவர் பிரசன்னா

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை […]

வெடிகுண்டு அச்சுறுத்தலால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

கொலம்பஸ், நவ.19- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான போயிங் எம்டி-80 நேற்று டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து 133 பயணிகளுடநும், 5 ஊழியர்களுடனும் புறப்பட்டது. இது டல்லாசின் போர்ட் வொர்த் விமான நிலையத்திலிருந்து இயங்கும் திட்டமிடப்பட்ட பயணமாகும். இந்த விமானம் ஓஹியோ மாநிலத்தின் போர்ட் கொலம்பஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கும் முன்னர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு எச்சரிக்கை தகவல் நிலையத்தாருக்கு கிடைத்துள்ளது. இதனால் விமானம் ஓஹியோவில் தரையிறங்கியபின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு […]

அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது

புதுடெல்லி, நவ. 19– முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் […]

அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை: விஞ்ஞானிகள் தகவல்

லண்டன், நவ. 19– அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர். அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது. இந்த எரிமலை […]

உலக செஸ் போட்டியின் 8-வது சுற்று டிராவில் முடிந்தது: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை, நவ. 19- சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கார்ல்சன் 4.5-2.5 என முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், இருவருக்கிடையிலான 8-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், விஸ்வநாதன் ஆனந்த் கறுப்பு காய்களுடனும், கார்ல்சன் வெள்ளை காய்களுடனும் ஆடினர். வெற்றி நெருக்கடியுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் கடுமையாகப் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »