Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு திசை திரும்புகிறது மங்கள்யான்

புதுடெல்லி, நவ. 27– மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது. செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. […]

சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்

வாஷிங்டன், சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது. சீனாவின் உத்தரவு சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் […]

சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு 3-ம் இடம், எழுத்து துறை காட்டும் இடம். அந்த இடத்தில் புதன் அமர்ந்து அந்த புதனை குரு, சந்திரன், சூரியன், சனி பார்த்தாலும் வசனகர்த்தாக்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 3-ம் இடத்தில் புதன் இருப்பது அவசியம். 3-ம் இடத்தை புதன் நேர் பார்வையாக பார்த்தாலும் எழுத்தாளர் – வசனகர்த்தாக்களே! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே.. Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: […]

35 வருடங்கள் கழித்து தமிழில் திரைக்கு வரவிருக்கும் சங்கராபரணம்

கடந்த 1979-ஆம் ஆண்டு திரைக்குவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குத் திரைப்படம் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’ ஆகும். முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சோமையாஜுலு, மஞ்சு பார்கவி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் நேரடியாகத் திரையிடப்பட்டு வசூலைக் குவித்த வெளிமாநிலப் படங்களில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமின்றி இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்பட விருதுகள் பலவற்றையும் இந்தப்படம் பெற்றது. 35 வருடங்கள் கடந்த பின்னர் இந்தப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருப்பதாகத் […]

1000 கிலோ அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

பலசூர், நவ. 23- ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது. இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பிரித்வி ஏவுகணையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த தனுஷ் ஏவுகணை, இன்று காலை […]

‘ஹெலன்’ புயல் தாக்கம் புதுவையில் கன மழை

புதுச்சேரி, நவ.22– ஹெலன் புயலின் தாக்கத்தையொட்டி புதுவையில் அதிகாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘ஹெலன்’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ‘ஹெலன்’ புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. அது ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் அருகே மையம் கொண்டுள்ளது. புயல் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். ‘ஹெலன்’ புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவையிலும் […]

மாமியார் பிரச்சனை! தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் ஐஸ்வர்யா ராய்?

இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் இது!! அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன். காரணம்? மெகா சீரியல் காரணம்தான்! மாமியார் பிரச்சனை! அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜெயபச்சன் ஒன்றும் கொடுமை படுத்தவில்லை. மாறாக ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது […]

ஹெலன் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது: மசூலிப்பட்டினத்தில் கனமழை

சென்னை, நவ. 22- வங்க கடலில் உருவான ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருக்கும் புயல் வலுவிழக்காமல் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடந்தபின்னரும் 6 மணி நேரத்துக்கு மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அதன்பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கத் தொடங்கும் என்றும் வானிலை […]

சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு

பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது.  சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. […]

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ3.5 கோடியில் பவள மாலை

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாஹரி அம்மாள் விஸ்வநாத ஐயர் நினைவாக அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பவள மாலையை காணிக்கையாக கொடுத்தார்கள். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தின் போது திருத்தேரில் ஸ்ரீ நடராஜர் அலங்காரத்தில் காட்சி தருவார். அப்போது, நடராஜருக்கு இந்த மாலை அணிவிக்கப்படும். இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த பவள மாலையில் 20 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பவள மணியின் எடை 961 கிராம் 600 மில்லி கிராம். இந்த […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »