
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே […]
போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சன்ஸ்தா என்ற அமைப்பு அமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆலிவுட் சிட்டி அருகே சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை ரூ.550 கோடி செலவில் கட்டி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டான இக்கோவில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் இது முதன்மையானதாக உள்ளது. கைகளால் கவனமுடன் செதுக்கப்பட்ட 35 ஆயிரம் இத்தாலிய மார்பிள் கற்கள் மற்றும் இந்திய மணற்பாறைகளை கொண்டு இக்கோவில் […]
நிரஞ்சனா ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு குணம், உடல் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம் இருக்கும், பெண் யானைக்கு தந்தம் இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு ஏற்ப இறைவனின் தந்துள்ளான். மனிதன் என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். […]
இறைவனுக்காக வேண்டிக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்வார்கள் பக்தர்கள். சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள். இதனால் இறைவனின் அருளும் அத்துடன் காலணி அணியாமல் வெறுங்காலில் நடப்பதால் கால்பாதத்திற்கு நன்மையும் கிடைக்கிறது. வெறுங்காலில் நடப்பதிலும் ஓடுவதிலும் மருத்துவ நன்மையும் உள்ளதாக இப்போது ஆராய்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை பற்றி 2009-ம் ஆண்டில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் பான் டு ரன் என்ற புத்தகம் எழுதி உள்ளார். அந்த […]
Article by Niranjana பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது. பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது. நீரிழிவு […]

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]
Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau. நீலம் – சாண்டி என்று உலகில் புயல் – மழை வந்து ஓய்ந்தாலும், 09.11.2012 முதல் 18.12.2012வரை செவ்வாய் தனுசில் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், இந்த காலகட்டத்தில் சுக்கிரன், துலா இராசியில் சனியுடன் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், மேலும் தனுசில் இருக்கும் செவ்வாயை, சனியும், சூரியனும் பார்வை செய்வதாலும், மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நில நடுக்கம், பூகம்பம் உள்ளிட்டவை உலகில் பல இடங்களில் […]
நிரஞ்சனா சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சாளக்கிராமம் உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ –விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கேள்வி :- எனது வருமானம் அனைத்தும் எனது கணவரால் வீணாகிக் கொண்டிருக்கிறது. தினமும் பணம் கேட்டு நச்சல் செய்து கொண்டே இருக்கிறார். எனது வாழ்க்கை இனி எப்படி இருக்கும். எனது குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். மேலும் அவருக்கு நிலையான தொழில்,வருமானம் இல்லை.இதற்கு என்ன காரணம்?இதை மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்? -லோகநாயகி வெங்கடேசன் பதில் :- மேஷ இராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தள்ளீர்கள். 22.12.2012-க்கு பிறகு தங்களுக்கு பிரச்னைகள் […]