வெங்காய விலை உயர்வுக்கு மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே காரணம் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புது விளக்கம் அளித்துள்ளார். வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.100-ஐ எட்டிவிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தூரில் வெங்காயத்தை நகைகள் போல அணிந்து கொண்டு, பாஜக-வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயம் வாங்குவது நகை வாங்குவது […]

சீனாவில், சிகிச்சை திருப்தியளிக்காததால், டாக்டரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். சீனாவின் சேஜியாங் மாகாணம் வென்லீங் நகரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு, மருத்துவர் வாங், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லியான்(33) என்பவர் அங்கு கத்தியுடன் நுழைந்து மருத்துவரை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற இரண்டு ஊழியர்களுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில் மருத்துவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் காயத்துடன் சிகிச்சை பெற்று […]

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் படேல் நினைவகம் திறக்கும் பிரமாண்ட விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கின்றனர்.சுதந்திரத்திற்கு பிறகு தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் அப்போதைய முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல். ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் படேலுக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல பிரமாண்ட சிலை அமைக்க போவதாக குஜராத் அரசு அறிவித்தது. […]
பவானி; பவானி அருகே மரத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. ஆசிட் கொட்டியதால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண்எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.மேட்டூரில் இருந்து சாயப்பட்டறைகளுக்கு பிளிச்சிங் செய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 6 மணிக்கு பவானி அடுத்த சித்தார் அருகே வரும்போது சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பிஓடி விட்டார். கிளீனர் லாரியில் சிக்கி […]

டுவிட்டர் வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செளஃபியேன் (17) என்ற அந்த இளைஞர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஒபாமாவிற்கு கொலை மிட்டல் விடுத்ததற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் […]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் இணையதளத்தை சமூக விரோதிகள் சிலர் முடக்கி வைத்துள்ளதால், பல மணி நேரங்களாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்த இணையதளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. என்எஸ்ஏ.ஜிஓபி என்ற அந்த இணையதளத்தை யாராலும் பார்க்க முடியாமல் போனது. அதனை சில சமூக விரோதிகள் முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.26) முதல் விற்பனை தொடங்குகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த பாரிமுனை பகுதியில் பட்டாசுக் கடைகள் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம தடை விதித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் அனுமதியுடன் தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை விற்பனை தொடங்கியது. இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் […]

விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் முடிந்து ஜனவரி மாதம் தனியார் வசம் ஒப்படைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சென்னை விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உணவு இடைவேளையில் […]

பழனி மலைக் கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில் பழனி கோயிலாகும். பல்வேறு முக்கிய நாட்களில் இக் கோயிலுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலநிற ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக நெருங்கி சுற்றி வந்தது. மலைக் கோயிலை சுற்றிய ஹெலிகாப்டரால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். ஹெலிகாப்டர் எதற்கு வந்தது என்று காவல் துறையினருக்கு தெரியவில்லை. […]

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்கவும், பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் போன்றவைகள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அளிக்கவும், இறுதி சிறப்பு முகாம் இம்மாதம் 27ம் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் விடுபட்டுள்ளவர்களது பெயர்களை சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 […]