Monday 3rd August 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

வங்கக் கடலில் புயல் சின்னம்

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிலை கொண்டிருப்பதால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. சென்னையில் […]

சிவாஜி சிலையை அகற்றக் கூடாது: திரைப்பட இயக்குநர்கள் போலீஸ் கமிஷனரிடம் மனு

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

மது பாட்டிலில் இந்து கடவுள்களின் படங்களால் சர்ச்சை

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா […]

உலகின் அரிய – பெரிய ‘ஆரஞ்சு வைரம்’

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே […]

காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது என்று தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் […]

ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம்: புதிய உலக சாதனை

சீனாவை சேர்ந்த ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து புதிய சாதனை புரிந்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ‘டி மால்’ நேற்று ஒரேநாளில் ரூ.50ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது. ‘டி மால்’ தவிர வேறு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களை நிர்வாகிக்கும் அலிபாபா நிறுவனம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதியை ‘சிங்கிள்ஸ் டே’ என அறிவித்து, […]

இந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உலக அளவில் 2ம் இடம்

பெங்களூர்:உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. சுமார் 6.3 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் சர்க்கரை நோய் தாக்கம் குறித்து சர்வதேச நீரிழவுநோய் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 6.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் 5 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

எண்ணங்கள் ஈடேறுமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் […]

தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. சந்திரனோடு சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2.5.9.11-ல் இருந்தால் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். சந்திரனை சூரியன் நேர் பார்வையாக பார்த்தாலும், தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை (நேர்பார்வை) பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள்! மூக்கின் மேல் கோபம் யாருக்கு? லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கினத்தில் செவ்வாய் […]

திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’

டெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »