Sunday 8th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |
Category archives for: முதன்மை பக்கம்

ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் கருவி ஆதார்: ப.சிதம்பரம் விளக்கம்

புதுடெல்லி, பிப். 17- “வீடுகள் இல்லாதவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதார் என்ற தனித்துவ அடையாள அட்டை அதிகாரமளிக்கும் கருவியாகும்” என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது:- ஆதாரை குறை சொல்பவர்களும் கூட அது ஒரு அதிகாரமளிக்கும் கருவி என்று உணர்ந்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கடந்த ஆண்டு சமையல் எரிவாயுவிற்கான மானியம் நேரடியாக ஆதார் அட்டையின் […]

மொபைல், கார் விலைகள் குறைகின்றன

மொபைல் போன்கள், கார்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைவதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அதனால் அவற்றின் விலைகள் குறையும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மொபைல்களுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைகின்றன. இதனால், மொபைல் போன்களின் விலைகள் குறைகின்றன. மேலும், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான […]

பகுஜன் சமாஜ் கூட்டத்தில் கவர்ச்சி நடனம்

லக்னோ வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு  உத்திகளை கையாளுகின்றன. உத்தரபிரதேசத்தில் அரசியல்கட்சிகள் பாலிவுட் நடிகைகளை ஆடவைப்பது மற்றும் கவர்ச்சி நடிகைகளை கொண்டு ஆபாச நடனங்களை ஏற்பாடு செய்வதும் வாடிக்கையாகி விட்டது சமீபத்தில் சமாஜ் வாதி கட்சி தலைவர்கள் பாலிவுட் நடிகர் -நடிகைகளை கொண்டு பெரிய விழா நடத்தியது.  கவர்ச்சி  நடனம் நடைபெற்றது. மூலக்கோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பபிஜ்னோர் உள்பட தலைவர்கள் ஆபாச நடனத்தை கண்டுகளித்தனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஜோதிட […]

பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை

டமாஸ்கஸ், சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக்  இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து […]

என்.டி.ராமராவ் மகள் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விலகுகிறார்

ஐதராபாத், பிப்.15– தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியுமான மறைந்த என்.டி. ராமராவ் மூத்த மகள் புரந்தேஸ்வரி. இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற இவர் மன்மோகன்சிங் மந்திரி சபையில் வர்த்த துறை இணை மந்திரியாக உள்ளார். தெலுங்கானா பிரச்சினையால் சீமாந்திராவில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து உள்ளது. இதனால் புரந்தேஸ்வரி காங்கிரசில் இருந்து விலக திட்டமிட்டு உள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் […]

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்

லாகூர், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பஷீர் அகமது இவர் அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் எனபவரின்  19 வயது  மகளை திருமணம் செய்து கொள்ள  விரும்பினார். அதற்கு அப்பெண் மறுத்து விட்டார். இதனால் பஷீர் அகமது ஆத்திரம்  அடைந்தார். அப்  பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்தார். பின்னர் அவரது மூக்கை அறுத்து துண்டாக்கினார்.இதனால் ரத்த வெள் ளத்தில் துடித்த அப் பெண் […]

இங்கிலாந்து ஓவியர் பிரான்சிஸ் பேகனின் ஓவியம் ரூ.430 கோடிக்கு ஏலம்

லண்டன், பிப். 15– இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பேகன். இவர் கடந்த 1992–ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் தனது ஓரின சேர்க்கை நண்பர் ஜார்ஜ் டயர் என்பவரின் ஓவியத்தை வரைந்து இருந்தார். இந்த ஓவியம் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் இந்த ஓவியம் ரு.430 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவியம் 6 அடி உயரம் உள்ளது. அதில் ஜார்ஜ் டயர் உடலின் […]

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்: 25 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன.இதனால் ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வாஷிங்டன், நியூயார்க், நியூ இங்கிலாந்து, விர்ஜீனியா மைனே உள்ளிட்ட பெரும்பாலான நகர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிககட்டிகளாக உறைந்துவிட்டன. ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினாவில் 4 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.1500 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை  […]

17ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்த நாளுக்குள்  விண்ணப் பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ்  விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம்  தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள்  தவிர தனித்  தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க  லாம். தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும்   ஒரு சிறப்பு  […]

முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

சென்னை, பிப்.7 – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று   காலை சந்தித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆந்திர மாநில பிரிவினை கூடாது என்ற தங்களின்  கருத்துக்கு ஆதரவு கேட்பதற்காக, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னைக்கு நேற்று  வந்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று   பகல் 11.50 மணிக்கு ஆந்திர மாநில […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »