Saturday 7th June 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

மோடி-ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது: சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து […]

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார், மன்மோகன் சிங்

புதுடெல்லி, மே 17- பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர், பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார். முன்னதாக, மத்திய மந்திரிசபையின் கடைசி சம்பிரதாய கூட்டத்தை கூட்டும் மன்மோகன் சிங், ராஜினாமாவுக்குப் பின்னர், நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியப் பிறகு தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை மன்மோகன் சிங் காலி செய்வார் என்றும் […]

தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்: மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவில்லை. இந்த நிலையில், தோல்வி குறித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியபோது, திமுக ஒரு போதும் தோல்வி கண்டு துவளாது. தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.மேலும் நாட்டின் பிரதமாரக பதவியேற்கவுள்ள மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

பிரதமராகும் மோடிக்கு தொலைபேசியில் ஒபாமா வாழ்த்து

வாஷிங்டன், மே 17- 16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது, உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா ஆற்றவுள்ள பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வாக்காளர்கள் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு பாராட்டு […]

37 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க.வின் வரலாற்று சாதனை சென்னை, மே 17-

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது […]

மோடிக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க தயாராகும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை

வாஷிங்டன், மே 17- 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதன் எதிரொலியான கலவரங்களை மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2005-ம் ஆண்டு அந்நாட்டிடம் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் கறுப்புப் பட்டியலில் மோடியின் பெயரை இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பாக பட்டும்படாமல் பேசி வந்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், ‘விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால், ஏனைய விண்ணப்பங்களைப் […]

எனது சகோதரர் பாஜகவில் சேர்ந்தது கவலை அளிக்கிறது: மன்மோகன் சிங் வேதனை

பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாரதீய ஜனதாவில் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் நடந்து வரும் சூழலில் பிரதமரின் சகோதரரே,  பாஜகவில் சேர்ந்துள்ளது காங்கிரஸ் கட்சியிநரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது தல்ஜீத் சிங் கோலி, பாஜகவில் சேர்ந்தது குறித்து .மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. […]

அமலாபாலுடன் விரைவில் திருமணம்: டைரக்டர் விஜய் அறிக்கை

டைரக்டர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய எல்லோருக்கும் நன்றி. நான் இதுவரை தனியாக இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையை எட்டி உள்ளேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆமாம் என் வாழ்க்கை துணையை தேடிய நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. என் வாழ்க்கை துணையாக நடிகை அமலாபாலை கண்டறிந்து உள்ளேன். அமலாபால் மிகவும் அழகான இதயத்தை கொண்டவர். அவரை மிகவும் காதலிக்கிறேன். கடைசி வரை அவருக்கு […]

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, ஜூவாலா-அஷ்வினிக்கு வெண்கலம்

ஜிம்சியான், ஏப். 26- கொரியாவின் ஜிம்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜூவாலா, அஷ்வினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 18 வயதான பி.வி.சிந்து, ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிஜியானை (சீனா) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் கடுமையாகப் போராடிய பி.வி.சிந்து, 21-15, 20-22, 12-21 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் அவர் வெண்கலம் வென்றார். இதற்கு முன்பு மூன்று முறை […]

வதோதராவில் தொடரும் முதலைகள் அட்டகாசம்

வதோதரா, ஏப். 26- குஜராத் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான வதோதராவில் ஓடும் விஷ்வாமித்ரி நதிக்கரையை ஒட்டி நவிநகரி என்ற குடிசைப் பகுதி உள்ளது. நேற்று அந்தப் பகுதியில் வசித்து வந்த 60 வயது முதியவர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் ஆற்றுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள முதலை ஒன்று அவரைக் கடித்துக் குதறியதில் அவர் இறந்துள்ளார். அந்த வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் இதனைப் பார்த்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தர அவரகள் சம்பவ இடத்திற்கு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »