Friday 31st July 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

இமான் இசையில் கானா பாடலை பாடினார் அனிருத் !

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை புதுமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவது தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இமான் இசையில் இசையமைப்பாளர் […]

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை!

Written by Niranjana ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார். “வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை […]

வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு ‘பாரத ரத்னா’விருது!

இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் காலஞ்சென்ற கல்வியாளர் மதன்மோகன் மாளவியாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதை தமது டிவிட்டர் செய்தி மூலம் இதை உறுதியும் செய்துள்ளார். வாஜ்பாய்க்கு இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி கோரிவந்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட, அவரின் நீண்டநாள் […]

சாலையில் பண மழை.. அள்ளி சென்ற மக்கள்!

ஹாங்காங்கில் சுமார் 68 மில்லயன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். பணத்தை ஏற்றி வந்த லாரி சாலை விபத்தில் சிக்கியதையடுத்து சுமார் முப்பத்தியைந்து மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான பண நோட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன. இதைப் பார்த்தவர்கள், ஒடி வந்து தங்களால் முடிந்த […]

Simple Remedy (pariharam) for childless couples |வம்ச விருத்திக்கு எளிய பரிகாரம்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம் செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார். இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு […]

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், காலமானார்!

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அர்ஜூன், மனோரமா, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைபிரபலங்களும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். சில மாதங்களுக்கு முன், பாலசந்தரின் மகன் கைலாசம் இறந்தார். இதனால், பாலசந்தர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். பத்து […]

ரசகுல்லா

தேவையானவை பால் – 1 லிட்டர் பால் மைதா – 1 டீஸ்பூன் மைதா எலுமிச்சம் பழம் – 1 சீனி – 21/2 கப் நீர் – 5 கப் செய்முறை முதலில் பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி […]

பாஸந்தி

தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, […]

பால் பாயாசம்

நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் […]

சரும நோயை போக்கும் ரோஜாப்பூ மருத்துவம்!

ரோஜாப்பூ ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம் நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரண சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி முற்றிலுமாக குணமாகிவிடும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும் இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »