நிரஞ்சனா ஸ்ரீ ராமானுஜர், குரு சேவையில் பிரியம் கொண்டவர். தன் குரு யாதவப் பிரகாசருக்கு அன்று எண்ணைய் தேய்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குரு தன் சிஷ்யர்களின் ஒரு கேள்விக்கு சரியான உதாரணமாக கூறாமல் அறுவெறுப்பான உதாரணத்தை தன் சீடர்களுக்கு உபதேசித்துவிட்டார். நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, குருவாக இருந்தாலும் இப்படி அருவருக்கத்தக்க உபதேசம் செய்தால் எப்படி சகித்து கொண்டு இருப்பது? என்ற எண்ணத்தில் சரியான தெய்வீகமான பதிலை கூறி குருவையே மிஞ்சினார் […]
விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 6 நிரஞ்சனா முன்னொரு காலத்தில் சுதர்மன் என்றொரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எத்தனை முறை சொல்லி கொடுத்தாலும் கல்வி புத்தியில் ஏறாது. சின்ன மந்திரங்களும் கூட அவன் வாயில் நுழையாது. இதனால் அவனை ஊர்மக்கள் மடையன், மூடன் என்ற கேலி செய்தார்கள். அவனிடம் சக மாணவர்கள் பழகினாலும், “அவனிடம் பேசாதீர்கள்.. அவனுடைய மந்த புத்தி உங்களுக்கும் ஒட்டி கொள்ளப்போகிறது.“ என்று ஆசிரியர்களும் சுதர்மனின் காதுப்பட பேசி அவமானப்படுத்துவார்கள். இதை […]
எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை பகுதி – 2 முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா துஷ்ட மந்திரங்களை உச்சரித்து அரசருக்கு செய்வினை செய்தார் விஷ்ணுகுப்தர். இதனால் அரசருக்கு திடீரென உடல்நலம் பாதிப்படைந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து அரசருக்கு சிகிச்சை செய்தும் அரசர் தனநன்தன் உடல்நலம் தேரவில்லை. மேலும் மேலும் உடல்நிலை மோசமாக போய்க் கொண்டே இருந்தது. கடைசியில் மருத்துவர்களால் அரசர் கைவிடப்பட்டார். நாட்டை சரியாக யாருக்கும் பாதுகாக்க தெரியாததால், விஷ்ணுகுப்தன், அறிவு தந்திரத்தாலும் மாந்தீரிக சக்தியாலும் […]
நிரஞ்சனா பில்லி – சூனியம் உண்மையா என்ற சந்தேகம் பலர் மனதில் காலம் காலமாக இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த வினைதான் இந்த ஜென்மத்தில் செய்வினையாக வருகிறது என்றும் அதைதான் நாம் யாரோ நமக்கு செய்த செய்வினை என்கிறோம், அது மூடநம்பிக்கை என்பதும் சிலர் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நம் முன் முற்பிறவி கர்மவினையும் இந்த பிறவியில் நம் எதிரிகளால் செய்யப்படும் துஷ்ட பூஜைகளும் இணைந்தால் அதுவே செய்வினையாகும். செய்வினையால் பாதிப்பு அடைந்தவரின் உண்மை […]
நிரஞ்சனா சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை சொல்லியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. இதனால் சினம் கொண்ட சிவன், “நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்.“ என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சக்திதேவி, தன் தவறுக்கு மன்னிப்பும் அத்துடன் சாப விமோசனமும் கேட்டார். “கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் […]
நிரஞ்சனா சாளக்கிராமம் உருவான கதையை பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ – விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும் பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று பயந்தார்கள் தேவர்கள். இவர்களின் மன பயத்தை புரிந்து கொண்ட விஷ்ணுபகவான், மோகினி உருவம் எடுத்து […]
நிரஞ்சனா சித்திரகுப்தர். இவரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?. அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு […]
மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 6 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் தாஸ்கணு பாபாவிடம், “நான் புனித நதிகளை தரிசிக்க போகிறேன். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்.“ என்றார். கங்கை, காவேரி போன்ற பல புனிதநீரை பாபா தன் கால் பாதத்திலேயே வரவழைத்தார். அந்த புனிதநீரை மக்கள் எல்லோரும் தலையில் தெளித்து கொண்டார்கள். அந்த இடத்திற்கு “பிரயாகை நதி“ என்று பெயர் வைத்தார்கள். ஒருநாள், ஈஷா உபநிஷத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து […]
நிரஞ்சனா கயிலாயமலையில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசித்து கொண்டு இருந்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த பாலமுருகனும் இதை கேட்டார். “தந்தை என் தாய்க்கு உபதேசித்ததை நான் அவர் அனுமதியில்லாமல் கேட்பது பாவசெயல்.“ என்று அவர் மனம் கருதி திருப்பரங்குன்றம் சென்று தவம் இருந்தார். முருகனின் தவத்தை ஏற்று சிவசக்தி காட்சி தந்தார்கள். அவர்கள் காட்சி தந்த இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக இப்போது திகழ்கிறது. மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்கள் திருபரங்குன்றத்தில் முருகனையும் […]
நிரஞ்சனா கலயனார் என்பவர் தினமும் ஈசனையே வணங்கி வருவார். சிவலாயத்தில் சாம்பிரானி போடும் போது குங்குலியத்தையும் தன் பங்குக்கு கொடுத்து போட சொல்வார். குங்குலியத்தை ஆலயத்திற்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பல வருடங்கள் இந்த வழக்கம் தொடர்ந்தது. தங்கத்தை தீயில் காட்டி தட்டி அழகான ஆபரணம் செய்வார்கள். வைரத்தை பட்டை தீட்டினால்தான் பலபலக்கும். இந்த இரண்டுக்கும் சோதனை வந்தாலும் முடிவில் மதிப்பு அதிகமாக கிடைக்கும். அதேபோலதான் இறைவன் பக்தர்களை சோதித்து பார்ப்பதும். ஈசனின் திருவிளையாட்டில் இருந்து யார்தான் […]