சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த, மகிமை நிறைந்த அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைப்பெற்றது. கோயிலின் முக்கிய நிகழ்வான தீ மிதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். நேற்று இரவு முதல், அம்மன் வீதி உலா வரும் வைபவம் நடைப்பெற்றபோது எடுத்த படம். படங்கள்: கே.விஜய கிருஷ்ணாராவ் © 2012 bhakthiplanet.com All Rights Reserved
நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது. பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், […]