Stories written by bhakthiplanet.com

லாஸ் ஏஞ்சல்ஸ் 59 வயதாகும் பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான் சீனாவின் யிஸ்குவாங் மாவட்டத்தில் ஜே.சி வேர்ல்டு என்ற நினைவு பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளார்.பொதுவாக சீனாவில் தீம் பார்ர்க்குகள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் தான் முதல் பறவைகள் தீம்பார்க் இங்கு உருவாக்கபட்டது. 2015 இல் டிஸ்னி ஒரு தீம்பார்க் திறக்கவும். ஸ்டீபன் ஸீபில் பர்க் 2016 இல் ஒரு தீம் பார்க் திறக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீம் பார்க் குறித்து ஜாக்கி சான் கூறியதாவது:- […]
வீட்டில் ஆரோக்கியமாக உள்ள எல்லோருக்கும் பொதுவான உணவுகள் ஆஸ்துமா நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுக்கும் போது கவனம் தேவை. குறிப்பாக ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனென்றால் சிலவகையான உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி உடனடி எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன. சிலவகையான, புரதம் சார்ந்த உணவுகள், திராட்சை, வாழைப்பழம், இளநீர், தயிர், மோர், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் சிலருக்கு மூக்கில் நீர் வடியத் […]
பொதுவாக பார்த்தால் எல்லோருடைய தோலும் ஓரே மாதிரியாகத் தான் இருப்பது போலத் தோன்றும். எப்படி முக அமைப்பு ஓரே மாதிரியாக இருப்பதில்லையோ அதே போல தோல் அமைப்பும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றிலும் பல வகைகள் உண்டு. சாதாரண சருமம் இந்த சருமத்தை உடையவர்களுக்கு எந்த விதமான மேக்கப்பும், அழகு சாதனமும் ஒத்துக் கொள்ளும். இவர்களுக்கு பிரச்சனை இல்லை. அதனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட தேவையில்லை. உலர்ந்த சருமம் எப்பொழுதும். தோல் வறட்சியாக காணப்படும். […]

வரலாற்று கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அனுஷ்கா, சார்மி இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாற்றுப் படங்களை எடுக்க தெலுங்கு பட உலகம் அச்சத்தில் இருக்கிறதாம். “அருந்ததி“ படத்தில் நடித்து அழியாப் புகழ் பெற்றார் அனுஷ்கா. சிவாங்கி படத்தில் நடித்து சார்மியும் வரலாற்று நாயகியாகவே வலம் வருகிறார். இதனிடையே அனுஷ்கா “ருத்ரமாதேவி” என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். “அனுஷ்காவுக்கு மட்டுமதான் வரலாறு இருக்குமா எனக்கு இருக்க்க்கூடாதா? வரலாற்றுக் கதைகள் எனக்கும் பொருத்தமாக இருக்கும்” என்று […]

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். தன்னுடைய தந்தை பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களிடம் உதவியாளராக நடிகர் மனோஜ்குமார் பணியாற்றியுள்ளார். நடிப்பில் பிரகாசிக்க முடியாத காரணத்தால், படம் இயக்கும் முயற்சியில் இருந்தார். தற்பொது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருப்பது அவருடைய இயக்குநர் கனவை நனவாக்கியிருக்கிறது.

காதல் படத்தில் அறிமுகமான சரண்யா நாக் அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் நடித்தார் அடுத்து வந்த “பேராண்மை” படத்திலும் மாணவியாகவே நடித்தார். இந்நிலையில் “ரெட்டை வாலு” படத்திலும் பள்ளி மாணவியாக நடிக்க கேட்டபோது, முதலில் மறுத்துவிட்டாராம். இதனையடுத்து, “யூனிபார்ம் போட்டு போட்டோ ஷுட் நடத்திப் பார்க்கலாம் உங்களுக்கு திருப்தி என்றால் மட்டும் நடியுங்கள்” என்று படயூனிட் சொன்ன பிறகு ஒ.கே. சொன்னாராம். ஆனால், “இதுதான் நான் பள்ளி மாணவியாக நடிக்கும் கடைசி படம். இனிமேல் என்னை […]

“மனோஜ் நைட் ஷியாமளனிடம் போய் 130 கோடி மில்லியன் படத்தை இயக்கும் பொறுப்பைத் தந்திருக்கிறார்களே.. ”என்று ஷியாமளன் “ஆஃப்டர் எர்த்” படத்தை இயக்கிய போது ஹாலிவுட்காரர்கள் அலறினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு “லான் ரேஞ்சர்” படத்தின் கதையைக் கேட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். காரணம், ஜோனி டெப் நடிப்பில் ஜுலை மாதம் வெளிவந்த “த லோன் ரேஞ்சர்” படத்தின் பட்ஜெட் 250 கோடி மில்லியன் டாலர்கள். ஆனால் முன் படத்துக்கு அலறியபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்று ஷியாமளனுக்கு ஹாலிவுட்டில் […]

விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள படம் “மதகஜராஜா”. படம் முடிவடைந்து 8 மாதங்கள் ஆகியும் வெளிவராததால் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றார் விஷால். ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு, இதற்கு முன் தயாரித்த படங்களின் தோல்வியால், விநியோகதர்களுடன் பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக “மதகஜராஜா” வை வெளியிடுவதில் சிக்கல் உருவாகி விஷாலுக்கு ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவில் நிலை உருவானது. இந்நிலையில், […]

ஹன்சிகா புதிதாக ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கப் போகிறார். நம்ம சுந்தர்.சி. படத்துக்கு பெயர் “அரண்மனை”. ”விஷன் எக்ஸ் மீடியா” என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தினேஷ் என்பவர் தயாரிக்கும் படம் இது. இவர் பெரிய பட விநியோகஸ்தரும் கூட. இதில் வினய், ஆண்டரியா சந்தானம் உள்பட பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் 2-ந் தேதி முதல், பொள்ளாச்சியில் ஷுட்டிங் ஆரம்பம்! அரண்மனை மாதிரி பெரிய பங்களாவை […]

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். ஓய். எம். மூவிஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அவர், ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஒரு இந்திப்படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இயக்குநர், நடிகர், நடிகைகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. படத்துக்கு இசையை அவரே அமைக்க இருக்கிறாராம்.