Monday 27th July 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் முடிந்து ஜனவரி மாதம் தனியார் வசம் ஒப்படைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சென்னை விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உணவு இடைவேளையில் […]

பழனி கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டர்

பழனி மலைக் கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில் பழனி கோயிலாகும். பல்வேறு முக்கிய நாட்களில் இக் கோயிலுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலநிற ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக நெருங்கி சுற்றி வந்தது. மலைக் கோயிலை சுற்றிய ஹெலிகாப்டரால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். ஹெலிகாப்டர் எதற்கு வந்தது என்று காவல் துறையினருக்கு தெரியவில்லை. […]

வாக்காளர் பட்டியல் : சென்னையில் ஞாயிறன்று சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்கவும், பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் போன்றவைகள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அளிக்கவும், இறுதி சிறப்பு முகாம் இம்மாதம் 27ம் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் விடுபட்டுள்ளவர்களது பெயர்களை சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 […]

அமெரிக்கா உளவு பார்க்க மன்மோகன் சிங்கிடம் செல்போன் , இ – மெயில் இல்லை .

“பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின. இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” […]

செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்: நடிகரான ஷாருக் கான் 114-வது இடத்தை பெற்றுள்ளார்

இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய […]

இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது.

புதுடில்லி: இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது. வீடுகள் தோறும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, தகவல் தொழில்நுட்ப புரட்சி நிலவும் நம் நாட்டில், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களான, ‘சைபர்’ குற்றங்களும் அதிகரித்து விட்டன. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, ‘சைமன்டெக்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டின், பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் கேடிகளால், அபகரிக்கப் பட்டு, ஏப்பம் விடப்பட்டுள்ளது. இது, […]

மரணத்திற்கு பிறகும் அதிக வருமான ஈட்டியவர்கள் வரிசையில் மைக்கேல் ஜாக்சனுக்கு முதல் இடம்

மைக்கேல் ஜாக்சன் தன் மரணத்துக்கு பிறகும் கடந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய சாதனை வரிசையில் முதல் இடம்பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி மற்றும் கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் ஷூல்ஸ்சுனின் சாதனையை மைக்கேல் ஜாக்சன் முறியடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். கடந்த ஆண்டு அதிகவருமானம் ஈட்டியவர்கள் வரிசையில் எலிசபெத் டெய்லர் முதல் இடம்பிடித்ததால் இவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து […]

நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள்

ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் ஓடும் சோம் என்ற நதி நீரில் தங்கம் எடுத்து உள்ளூர்வாசிகள் பிழைத்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 10 ஆண்டுகளாக இந்த நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் ஹரியானாவின் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்க்காரர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்கிறது இந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க […]

தங்க புதையல் நப்பாசை: பெங்களூருவில் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர்.

பெங்களூரு: உத்தர பிரதேசத்தில், பழமை வாய்ந்த கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர். இதனால், பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை அடைந்துள்னர். உ.பி.,யில், உன்னாவோ என்ற பகுதியில், பழமையான கோட்டை ஒன்றில், தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் என்பவர் கூறியதை அடுத்து, […]

வெஜ் மசாலா பிரியாணி

வெஜ் மசாலா பிரியாணி பாசுமதி அரிசி – 400 கிராம் நெய் – 50 மி.லி பட்டை – 2 லவங்கம் – 4 ஏலக்காய் – 4 பிரிஞ்சி இலை – 2 தேங்காய் பால் – 400 மி.லி உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, நெய் காய்ந்ததும் கரம் மசாலா போட்டு தாளிக்கவும். நீரை […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »