Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

பதினாறு செல்வங்களை தரும் முப்பாத்தம்மன்

நிரஞ்சனா  

கோயில் அமைந்த இடம்: சென்னை தி நகரில் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் இருக்கிறது அருள்மிகு முப்பாத்தம்மன் ஆலயம்.

உண்மையான பக்திக்கு தெய்வம் தேடி வந்து உதவும். அதிலும் பெண் தெய்வங்களை பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவரின் தர்மநெறிக்கும், நேர்மைக்கும், அன்பு நிறைந்த பக்திக்கும் கட்டுப்படுகிற பெண் தெய்வங்கள் அந்த ஒரு பக்தருக்கு மட்டுமல்லாமல் அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் துணை இருப்பார்கள். அப்படிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவள்தான் அன்னை சக்திதேவி. மகாசக்தியான அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினால் எல்லா தலைமுறைக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அதிலும் அன்னை பராசக்தியின் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பம்சம் இருக்கிறது. காமாட்சி அம்மனை வணங்கினால் திருமணம் கைகூடும், துர்கையையும், மகாகாளியையும் வணங்கினால் விரோதிகள் வீழ்வார்கள். நாகத்தம்மனை வணங்கினால், நாகதோஷம் நீங்கும். அதேபோலதான் “மூப்பற்றவள்” என்ற சென்னை மாநகரில் உள்ள முப்பாத்தம்மனை வணங்கினாள் தனி மகிமை உண்டு. அது என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

முப்பாத்தம்மன் சென்னை வந்த கதை  

எந்த ஒரு துன்பம் நடந்தாலும் அந்த துன்பத்திற்கு பிறகு ஒரு நன்மை இருக்கிறது. எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் எத்தனையோ பேர். அதில் ஒருவர்தான் கனியப்பன் என்ற அந்த முதியவர்.

முன்னொரு காலத்தில் மெட்ராஸில் மழைவிடாமல் பொழிந்து கொண்டே  இருந்தது. அந்த பேய் மழையை கண்டு தியாகராய நகர் மக்கள் அஞ்சினார்கள். “ஒரு நிமிடம் கூட விடாமல் மழைபொழிகிறதே… இப்படியே இருந்தால் தியாகராய நகரே மூழ்கி விடுமோ” என்று பயந்தார்கள்.

அந்த சமயம்தான் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த பெரும் மழை வெள்ளதில்  சிலையாக அன்னை பராசக்தி நீந்தி வந்தாள். அங்குள்ள ஒரு குளத்திற்கு வந்து, “இதுவே என் இடம்” என உறுதியோடு அங்கேயே நின்றாள். பாய்ந்து வந்து கொண்டிருந்த வெள்ள நீர், அன்னை மகாசக்தி தமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் அமைதியாக போய்க்கொண்டிருந்தது.

அப்போது அந்த பக்கமாக வந்த கனியப்பன் என்ற அந்த பெரியவர், அம்மன் சிலையை கண்டு, “தாயே இங்கு வருவதற்குதான் இந்த பேய் மழையை தோன்ற செய்தாயோ, வெள்ளத்தில் நீந்தி வந்து, எங்கள் குறையை தீர்க்க வந்த தாயே” என்று ஆனந்தப்பட்டார் கனிபயப்பன்.

குளத்தில் இறங்கி அம்மன் சிலையை கன்னியப்பன் தொட்ட உடன் பேய் மழை நின்றது. பல நாட்களாக எட்டிபார்க்காத சூரியன், அம்பாளை காண வேண்டும் என்ற ஆர்வதில் மேகங்களை விலக செய்து, அம்பாளை தரிசித்த ஆனந்தத்தில் பிரகாசித்தது.

ஊர் மக்கள் மகிழ்சியடைந்தார்கள். தங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்களை தந்திடவே அம்மன் நம்மை தேடி வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்கள்.

பெரியவர் கனியப்பன், தன் சக்திக்கேற்ப அம்மனுக்கு சிறிய அளவில் முகப்பு மண்டபமும், சுற்றுச்சுவரும் எழுப்பி கோயில் கட்டினார்.   

முப்பாத்தம்மனை வணங்கி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து புடவை அணிவித்தால் அந்த குடும்பத்தினருக்கு சுபிட்சங்கள் தடையில்லாமல் நடக்கும். இந்த ஆலயத்தில் வேப்பமரம் இருக்கிறது. அந்த வேப்பமரத்தை தொட்டு வணங்கினால், நோய்நொடிகள் நீங்கும், இதை அனுபவத்தில் உணர்ந்தோம் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

நாகதோஷம், காலசர்ப்பதோஷம் விலக அதற்குரிய தலங்களுக்கு செல்லமுடியாதவர்கள், சென்னையில் இருக்கும் இந்த முப்பாத்தம்மனை வணங்கி இங்குள்ள புற்றில் பால் ஊற்றி வணங்கினால், நாகதோஷம் – சர்ப்பதோஷம் விலகும்.

தோஷங்கள் நீங்கினால்தான் எந்த வேலையும் தடையில்லாமல் நடக்கும். திருமணம் பாக்கியம், குழந்தைபாக்கியமு்ம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இங்குள்ள அம்பாள், தியாகராய நகர் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் அருள்பாலிக்கவே நம்மை தேடி வந்திருக்கிறாள். தேடி வந்த தெய்வத்தை வணங்கி  வாழ்வில் பதினாறு செல்வங்கள் என்கிற,

1.நல்ல கல்வி அறிவு. 2.நீண்ட ஆயுள் 3.நம்பிக்கையான நல்ல நண்பர்கள் 4. வளமான வாழ்க்கைக்கு தேவையான பொருள். 5. உழைப்புக்குத் தளராத உடல் வலிமை.6. நோயற்ற வாழ்க்கை 7. கலங்காத மனத்திண்மை. 8. அன்பைச் செலுத்தும் மனைவி அல்லது கணவர். 9. அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் அனைத்தும் நிறைந்த குழந்தை செல்வம்.  10. வற்றாத பொருளும் புகழும்.11. திறமையான பேச்சாற்றல் 12.கேட்கும் இடத்தில் இல்லை என்று சொல்லாத உதவி 13. சிக்கனம், சேமிக்கும் குணம். 14. நேர்மையுடன், நிர்வாகத்தையும் குடும்பத்தையும் நடத்தும் திறமை. 15. வசதியும், நல்ல குணமும் கொண்ட மக்களின் தொடர்பு. 16. இறை நம்பிக்கை” ஆகிய இந்த பதினாறு செல்வங்களும் வாழ்க்கையின் கடைசிவரை நிலையாக பெற்று வளமோடும் நலமோடும் வாழ முப்பாத்தம்மன் பாதம் பணிந்து வரம் பெறுவோம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

 © 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on May 11 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech