Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

அமாவாசையில் பிறந்தால் திருடர்கள்?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648

அமாவாசையில் பிறந்தால் திருடர்களா?. அமாவாசையில் பிறந்தால் திருடர்கள் என்று சிலர் கூறுவதை கேட்டு இருக்கிறேன். உண்மையில் அமாவாசையில் பிறந்தால் திருடர்களா? என்றால் உண்மைதான். ஏன் என்றால் அமாவாசையில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் தன் வயப்படுத்துபவர்கள். மனதை திருடக்கூடியவர்கள். உள்ளம் கவர் கள்வர்கள்.

அமாவாசையில் பல பிரபலங்கள் பிறந்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா, மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என இப்படி பல பிரபலங்கள் அமாவாசையில் பிறந்தவர்கள்தான். அமாவாசை என்னும் நாள் வெகு சிறப்பான நாள். வெற்றி தரும் நாள். இதை வடஇந்தியர்கள் இன்றும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். சூரியனும், சந்திரனும் சேர்ந்த இந்த நாள், அமாவாசை என அழைக்கப்படுகிறது.

அமாவாசை அன்று புதிய காரியத்தை செய்ய சிலர் தயங்குவர். அது சரியல்ல. அமாவாசை ஒரு சிறந்த நாள். அந்த நாளில் நல்லவற்றை செய்து பயன் பெற வேண்டும். அமாவாசை அன்றுதான் இறந்த நம் முன்னோர்கள், புண்ணிய லோகத்தில் இருந்து இந்த பூமிக்கு வருகிறார்கள்.

தங்கள் குடும்பத்தை, வாரிசுகளை சூட்சம உடலால் பார்க்கிறார்கள். அமாவாசை நாளில் அவர்களுக்கு படையல் வைத்து வணங்கி பூஜை செய்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். நாம் முன்னேற வேண்டும், நம் குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று மிகுந்த சந்தோஷப்பட்டு ஆசீர்வாதம் செய்கிறார்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு சூழ்நிலை காரணமாக சந்தோஷப்படுத்தி பார்க்காதவர்கள், அவர்கள் இறந்த பிறகாவது சந்தோஷப்படுத்த இயற்கை தந்த புனிதநாள்தான் அமாவாசை.




இந்நாளில் திதி கொடுப்பது அல்லது மனதார பூஜித்து தீபாராதனை செய்து அவர்களுக்கு படையல் வைத்ததை சாப்பிட வேண்டும். இப்படி அமாவாசை தோறும் செய்து வந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் தீரும். இன்னல்கள் விலகி, இன்பங்கள் வர ஆரம்பிக்கும்.

அமாவாசையில் பிறந்தவர்கள் சாதனை படைக்கிறார்கள். என் அனுபவத்தில் பல ஜாதகங்களை பார்த்து வருகிறேன். காசிக்கு போக வேண்டாம், கங்கையில் குளிக்க வேண்டாம். பெற்றோரை மரியாதையாக நடத்துங்கள். பெற்றோரை இழந்தவர்கள், அவர்களை மனதார வணங்கி அவர்களுக்கு பிடித்த உணவு சமைத்து படைத்து பூஜித்து வாருங்கள். பிறகு பாருங்கள் பித்ரு தோஷம் எப்படி நீங்குகிறது என்பதை.

இன்று பல குடும்பங்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. கணவன், தன் மனைவியை மதிப்பதில்லை. மனைவி, தன் கணவனின் பேச்சை கேட்பதில்லை. இப்படி வாழ்ந்தால் எந்த கோயில், குளம் என்று ஏறி இறங்கினாலும் நிம்மதி கிடைக்காது. முன்னேற்றமும் கிடைக்காது. முதலில் குடும்பத்தில் உள்ள சொந்தங்களை மதித்து நடக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்.

திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார், தன் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் வள்ளுவரின் வீட்டு வாசலில் பிட்சை என குரல் கொடுத்து நின்றிருந்தார் ஒரு முனிவர்.

வாசுகி அம்மையாரோ கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருப்பதால் எழுந்து வெளியே செல்லக்கூடாதே என்று, வருகிறேன் சுவாமி சற்றே இருங்கள் என்று சொல்லி, கணவரான வள்ளுவர் சாப்பிட்டு முடித்த பிறகு, முனிவருக்கான உணவை வெளியே கொண்டு வந்தார். தன்னை காக்க வைத்த அம்மையார் மீது முனிவருக்கு கடும் கோபம். வாசுகி அம்மையாரை சபிப்பது போல் முறைத்து பார்த்தார்.

அவர் கோப பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக வாசுகி அம்மையார் என்ன சொன்னார் தெரியுமா?

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா?

முனிவருக்கு தூக்கி வாரி போட்டது. ஆம், வந்தது கொங்கண முனிவர். சற்று நேரத்திற்கு முன்னர்தான் தன் தவத்தை கலைத்த குற்றத்திற்காக ஒரு கொக்கை தன் கோப பார்வையால் சாம்பல் ஆக்கிவிட்டு வந்திருக்கிறார். நான் யார் என்பதும், சற்று நேரத்திற்கு முன் எங்கேயோ தன்னால் நடந்ததை இந்த அம்மையார் சொல்கிறார் என்றால் என்ன காரணம்? வாசுகியின் பதிபக்தி, முனிவரின் தவ வலிமையைவிட உயர்ந்ததாக இருப்பதை கண்டு, வாசுகி அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டு ஆசீர்வதித்து சென்றார்.




கணவனுக்கு பணிவிடை செய்து, கணவனே தெய்வம் என்றிருந்ததால் மகாசக்தி பெற்றிருந்தார் திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார். இதிலிருந்து என்ன தெரிகிறது?. கோயில், குளம், தெய்வ வழிபாடு தேவைதான். அதிலும் சிறந்தது குடும்பத்தை மதிப்பது, குடும்பத்தினரை மதித்து நடப்பதுதான் அவசியம். தெய்வத்தை விட உயர்ந்தவர்கள் பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள். அவர்களுக்கு அமாவாசை அன்று திதி கொடுப்பது அல்லது அவர்களுக்கு பிடித்த உணவை ருசியாக சமைத்து படைத்து வழிபாடு செய்வது மிகவும் அவசியமானதாகும்.

அமாவாசை வழிபாடு செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் விலகி முன்னேற்றம் வரும் பாருங்கள். வாழ்க வளமுடன்.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here




© 2011-2022 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 30 2022. Filed under Bhakthi planet, Headlines, Home Page special, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech