Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

என் சிறுநீரகம், மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி : மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் அளித்த மாமியார்

மும்பையில், மாமியார் ஒருவர், தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தம் அடைந்திருந்த நேரத்தில், வைஷாலியின், மாமியார் சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.இதை கேட்டு, வைஷாலியும், அவரது குடும்பத்தாரும் திக்கித்து போயினர். கணவன், மனைவி, சகோதரர், சகோதரி என்ற உறவு நிலையில் தான் சிறுநீரக தானம் கொடுக்க முன்வருவர். ஆனால், மருமகளுக்கு, மாமியார் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க வந்தது, டாக்டர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது.சிறுநீரகவியல் மருத்துவர்கள், சுரேகா ஷாவை பரிசோதித்து பார்த்தனர். அவரது சிறுநீரகம், வைஷாலிக்கு பொருத்தமாக இருக்கும் என, தெரியவந்தது.இதையடுத்து, கடந்த மாத இறுதியில் மும்பையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில், வைஷாலிக்கு வெற்றிகரமாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.மருமகளும், மாமியாரும், சிகிச்சை முடிந்து சில நாள் ஓய்வுக்கு பின் இல்லம் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து சுரேகா ஷா கூறுகையில், ”என் சிறுநீரகம், மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மருமகளுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, மக்கள் தயங்க கூடாது. உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்,” என்றார்.

புத்துயிர் பெற்றுள்ள வைஷாலி, பேசுவதற்கு வார்த்தை வராமல் கண்ணீர் மல்க,”எனக்கு உயிர் பிச்சை அளித்துள்ள, என் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன். அவருக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார்மாமியார் என்றாலே, வில்லியாக சித்தரிக்கப்படும் நிலையில், சுரேகா அந்த எண்ணத்தை மாற்றி, தன்னை போன்ற மாமியார்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 8 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »