Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

பதிவு செய்யும் பத்திரங்களை ‘சிடி’ ஆக வழங்கும் புதிய திட்டம் – ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் இந்த துறையை நவீனப்படுத்துவதுடன், எளிமைப்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரங்களை அலுவலகத்தில் பதிவு செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் சிசிடிவி மூலம் பதிவு செய்யப்படுகிறது. பத்திரங்களை பதிவு செய்யவருபவர்கள் தேவைப்பட்டால் ரூ.50 கட்டணம் செலுத்தி ‘சிடி’யாக வாங்கிக்கொள்ளலாம். அதேபோல் பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் பதிவு செய்ய வரும் நாள், நேரம் போன்றவற்றை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, அதற்கான நாள், நேரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் கூட்டநெரிசலை தவிர்த்து 20 நிமிடங்களில் தங்கள் பதிவை பதிவு செய்துவிட்டு செல்ல முடியும். இந்த இரண்டு திட்டங்களையும் நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கும், பத்திரங்கள் பதிவுசெய்ய வருபவர்களுக்கும் வேலை எளிதாக இருக்கும்.

ரூ.9.70 லட்சம் செலவில், பதிவுத்துறை பயிற்சி மையத்திற்கென 21 கணினிகள், 3 லேசர் அச்சுப்பொறிகள், 1 தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் மற்றும் 1 நகலெடுக்கும் இயந்திரங்களும் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.18.30 லட்சம் செலவில், பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக 5 ஆயிரம் பிளாஸ்டிக் நாற்காலிகளும் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.5 லட்சம் செலவில், பதிவுத்துறையின் பல்வேறு அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக 164 சாய்வு மேஜைகள் வாங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறினர்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 5 2013. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »