Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும்! ஆடி மாதம் சிறப்பு கட்டுரை!


Written by Niranjana niranjana

காரணம் இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதை அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வைத்து, கருவாட்டு குழம்பு, இறைச்சி சமைத்து படைப்பார்கள். கூழ் அம்மனுக்கு பிடிக்கும் சரி, ஆனால் கருவாட்டு குழம்பு, பக்தர்கள் ருசியாக சாப்பிட வேண்டும் என்ற தங்களின் சௌகர்யத்திற்கான கண்டுபிடிப்பு என்று சிலர் நினைத்தால் அது தவறான எண்ணம்.

அம்மனுக்கு கூBhakthi Planetழுடன்-கருவாடும் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு. நம்மில் பலருடைய குலதெய்வங்களுக்கு ஆடுவெட்டி பூஜை செய்யும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக இருக்கலாம்.

கருப்பசாமி, சுடலைமாடசாமி, காளிதேவி என்று இன்னும் சில தெய்வங்களுக்கும் அசைவத்தை படைத்து வணங்கும் சம்பிரதாயம் இருக்கிறது. ஆடி மாதத்தில் கண்டிப்பாக குலதெய்வத்தை வணங்கவேண்டும் குலதெய்வத்தை மகிழ்விக்க வேண்டும். இதனால் அந்த குலம் தழைக்கும். சிலரின் குல தெய்வம் என்பது அவர்களின் குலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜீவன். அதனால் நம் குலதெய்வத்திற்கு பிடித்த அசைவத்தை படைத்து வணங்கும் வழக்கம் இருந்து வருகிறது.niranjana channel

அன்னை பார்வதிதேவி, மீனவ குலத்தில் பிறந்தவள். இதனால் மீன், கருவாடு வைக்கும் வழக்கமும் இருக்கிறது. அத்துடன் சில நகரத்தில் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஆடி மாதம் திருவிழா நாட்களில் கிராம பூசாரிகளை அழைத்து அம்மனுக்கு பூஜை செய்வார்கள்.

எதனால் ?

சிவபெருமான் வேதத்தின் ரகசியமான பொருளை பார்வதிதேவிக்கு உபதேசித்து வந்தார். தேவியருக்கு இதில் ஆர்வம் இல்லாததால் அங்கும் இங்குமாக தன் பார்வையை செலுத்தினார். இதை உணர்ந்த சிவபெருமான் கோபம் கொண்டு,  “வேதத்தை மதிக்காத நீ, பூgreensiteலோகத்தில் மீனவ குலத்தில் பிறப்பாயாக.” என்று சபித்து விடுகிறார்.

ஈசனின் சாபத்தால் பார்வதிதேவி பூலோகத்தில் தண்டுறைப்பாக்கம் என்ற ஊரில் புன்னை மரத்தின் நிழலில் பெண் குழந்தையாக தோன்றி அழுதாள். குழந்தை அழும் சத்தம் கேட்ட அந்த ஊர் மீனவ தலைவர், குழந்தை அழும் திசையை நோக்கி வந்தார். ஒரு புன்னை மரத்தின் கீழே அழகான பெண் குழந்தை இருப்பதை கண்டு, யாராவது இந்த குழந்தையை விட்டு சென்றார்களா? என்று அக்கம் பக்கம் தேடினார். யாரும் இல்லாததால் இறைவனே தனக்கு இந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் என்று மகிழ்ந்து, தன் இல்லத்திற்கு எடுத்து சென்று தன் மனைவியிடம் அக்குழந்தையை கொடுத்தார்.

மீனவ சமுதாயத்தில் சக்திதேவி வளர்ந்ததால், மீனவர்களுக்கு பெருமை ஏற்படும்படி மீனை தனக்கு பிடித்த பிரசாதமாக ஏற்றுக்கொண்டார் அம்மன்.

அதுபோல, மேல்மலையனூர் அம்மனுக்கு மீனவர்களின் குடும்பம்தான் இன்றுவரை பூஜை செய்கிறது.

ஆடி மாதம் அம்மனுக்கு கருவாடு, இறைச்சி படைக்கும் வழக்கம் வந்த காரணத்தை தெரிந்துக்கொண்ட்டீர்கள். கூழ் எதற்காக படைக்கிறார்கள்? என்ற காரணத்தையும் அறிய வேண்டுமல்லவா.

ஆடி மாதம் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்து குண்டம் Manamakkal Malaiஇறங்குவார்கள். அதாவது தீ மிதிப்பார்கள். அப்போது தீ மிதிக்கும் பக்தர்களின் உடலில் அம்மன் இறங்குவார். அந்த பக்தனின் உருவத்தில் அம்மனே தீ மிதிப்பார். இதனால்தான் பல அடி தூரம் கொண்ட தீயில் பக்தர்கள் நடக்கும்போது அவர்களின் பாதத்திற்கு எந்த தீ கொப்பளங்களும் ஏற்படுவதில்லை.

ஆடி மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால் அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும். அதை தணிக்கவே குளிர்ச்சியான தன்மைகொண்ட கேழ்வரகை அரைத்து, அத்துடன் நொய் அரிசியை கலந்து கூழ் தயாரித்து அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உருவானது.

இப்போது தெரிந்துக்கொண்ட்டீர்களா ஆடி மாதம் அம்மனுக்கு கூழுடன் கருவாடு குழம்பும் ஏன் வைக்கிறார்கள் என்று.

தன் பக்தர்கள்  ஏழ்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தினமும் சாப்பிடும் கூழை தனக்கு பிடித்த உணவாக மாற்றிக்கொண்டாள் அன்னை.  அம்மனுக்கு கூழ் படைத்தால் அந்த பக்தர்களில் வாழ்க்கை வசந்தமாக மாறும்!

அடுத்த பகுதியை படிக்க கிளிக் செய்யவும்…

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2016 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech