Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

உயர்ந்த வாழ்வை உறுதியாக தரும் சடாரி

நிரஞ்சனா

பெருமாள் கோயிலுக்கும் அனுமன் ஆலயத்திற்கும் சென்று தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, சடாரியை நம் தலையில் வைக்கும் போது சாபங்களும், தோஷங்களும் விலகுகிறது. காரணம், சடாரியின் மேல் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும் என்கிறது சாஸ்திரம்.

ஒருசமயம், வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் வழக்கமாக தன் பாதுகையை விடும் இடத்தில் விடாமல் தன்னுடைய அறையில் கழற்றி வைத்தார். இதை கண்ட சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்திற்கும் கோபம் ஏற்பட்டது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினால் சுவாமி கோபித்துக்கொள்வார் என்ற எண்ணத்தில்  அமைதியாக இருந்தனர்.

அச்சமயம், ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முனிவர்கள் வந்திருப்பதாக தகவல் வந்ததால் முனிவர்களை காக்க வைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டு இருந்தவர் அவசர அவசரமாக எழுந்து. தன் பாதுகையை அணியாமல் சென்றார்.

ஸ்ரீமந் நாராயணன் வெளியே சென்றதால் மகிழ்சியடைந்த சங்கு, சக்கரம், கிரீடமும் ஸ்ரீமந் நாராயணணின் பாதுகைகளை பார்த்து, “கேவலம் பாதத்தின் கீழ் இருக்கும் நீ, ஸ்ரீமகாவிஷ்ணுவை அலங்கரிக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில் எப்படி எங்களுக்கு சரிசமமாக இருக்கலாம். நீ இருக்க வேண்டிய இடம் இங்கல்ல வெளியேதான் என்பதை மறந்துவிட்டாயா? என்னதான் கால்களுக்கு பாத பூஜை செய்தாலும் அது நன்றி இல்லாதது. கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கமால் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட அந்த கால்களுக்கு அடியில் இருக்கும் உனக்கு எப்படி மரியாதை தர முடியும்.?” என்று ஏக வசனத்தில் பேசியது சங்கும், சக்கரமும். கீரிடமும்.

அதற்கு அந்த பாதுகை, “அப்படி பேசாதீர்கள். யாருக்கு ஆபத்தென்றாலும் உதவிக்கு ஓட உதவுவது கால்கள்தான். அந்த கால்களுக்கு மரியாதை செய்யவே பாதபூஜை செய்கிறார்கள். அப்படிபட்ட புண்ணியவான்களின் கால்களுக்கு பாதுகையாக இருப்பதில் எங்களுக்கு பெருமைதான்.” என்று கூறிய பாதுகை, “பெருமாளே என் பிறவி கேவலமானதா?” என்று அழுதது.

அப்போது முனிவர்களை சந்தித்து விட்டு திரும்பி வந்த ஸ்ரீமந் நாராயணன், தன் அறையில் நடந்த சம்பவத்தை உணர்ந்துக் கொண்டார்

சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்தை அழைத்த ஸ்ரீமகாவிஷ்ணு, “ஒருவரை பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது அவர்களுடைய தவறை நீங்கள் விமர்சிக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அவர்களிடமே அதை பற்றி பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி தவறை திருத்த பார்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் மனம் நோகும்படியாக விமர்சிப்பது அவர்கள் மேல் இருக்கும் பொறமையால்தானே தவிர அவர்கள் மேல் இருக்கும் தவறால் அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். பாதுகை இத்தனை நாள் வெளியே இருந்ததால் உங்களுக்கு அதன் மீது பொறாமை வரவில்லை.

ஆனால் இன்றோ என்னுடைய அறையில் உங்களுக்கு சரிசமமாக வந்து விட்டதே என்ற எண்ணத்தில் பாதுகையின் மேல் பொறாமை கொண்டு  கீழ் தரமாக பேசி இருக்கிறீர்கள். இதற்கு தண்டனையாக எனது இராம அவதாரத்தில் சங்கும், சக்கரமாகிய நீங்கள்தான் பரதன், சத்ருகனாக பிறப்பீர்கள். உங்களுக்கு அரசபதவி கிடைத்தாலும் அதனை ஏற்க முடியாமல் போகும். நீங்கள் எந்த பாதுகையை அவமானம் செய்தீர்களோ அதே என்னுடைய பாதுகையைதான் 14 வருடம் சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பீர்கள். கிரீடமே… என் சிரசின் மேல் இருப்பதால்தானே உனக்கும் ஆணவம். அதனால் உன் மீதுதான் என் பாதுகையே இருக்கும்.” என்றார் ஸ்ரீமந் நாராயணன்.

கிரீடத்தின் மீது இறைவனின் திருவடி, அதாவது பாதுகை  இருக்கும் சடாரியை நம் தலையில் வைத்து ஆசி பெற்றால் நமக்கும் நம்மை அறியாமல் உள்ளூணர்வில் இருக்கும் ஆணவம், அகங்காரம் அத்துடன் எல்லா தோஷங்களும் நீங்கும். இறைவனின் ஆசியை முழுமையாக பெற அருள் செய்யும் சடாரி.!

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

 

Posted by on Aug 29 2012. Filed under Photo Gallery, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech