Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

இராகு பிடியில் இருந்து மீண்டு வரும் திருமதி.சசிகலா

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

திருமதி.சசிகலா அவர்களை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்று அவர் சிறைவாசத்தில் இருந்து 27.01.2021 அன்று விடுதலை ஆவார் என்ற செய்தி வந்தவண்ணம் இருந்தது. சிறையில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை பிடித்து இறுக்குவது இராகு பகவானே.

சாதாரண பாமர மனிதனை மன்னன் ஆக்குவதும் இராகுவே. இந்த இராகு, ஒருவரின் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சி அசுர வேகத்திற்கு உயரும்.

அதே இராகு, பாவ கிரகத்தோடு சேர்ந்தாலும், பலம் இல்லாமல் இருந்தாலும் வளர்ச்சி கொடுத்தாலும், தேவையில்லா பிரச்னைகள், மனஉளைச்சல், நோய் நொடிகள் கொடுத்து பாதிக்கும்.

இங்கு திருமதி. சசிகலா அவர்களை பிடித்து இறுக்கும் இராகு, தன் பிடியை தளர்த்தி வருகிறார்.

திருமதி.சசிகலா அவர்களின் ஜாதகம்

பிறந்த தேதி: 18.08.1954.

பிறந்த நேரம்: காலை 06.32.

இடம்: திருத்துறைபூண்டி.

இராசி: மீனம்.

லக்கினம்: கடகம்.

நட்சத்திரம்: ரேவதி.

தற்காலம் இராகு திசையில், இராகு புக்தி 30.03.2021வரை உள்ளது.

இங்கு இவர் ஜாதகத்தில் 10-ம் இடத்தை லக்கினாதிபதி சூரியன் பார்த்ததால் உலகம் அறிந்த நபராக ஆனார். பொதுவாக ஒருவர் நாடறிய வேண்டும் என்றால், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும் என்றால் 10-ம் இடத்தில் ஒரு பாப கிரகம் அல்லது பார்வை இருக்க வேண்டும்.

பொதுவாக திரிகோணாதிபதி திரிகோணம் ஏறினால் அரசர்களின் தொடர்பு, பெரும் பதவியில் இருப்பவர்களின் நட்பு நிச்சயம் கிடைக்கும்.

அதுபோலவே –

திருமதி.சசிகலா அவர்களுக்கு மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நட்பும், செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறக்கும்வரை அவருடனே இருந்தவராக மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

தற்போது திருமதி.சசிகலா அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது என்று செய்திகள் வருகிறது.

ஏன்? என்றால் –

இவரின் ஜாதகத்தில் சுகாதிபதி செவ்வாய், இராகுவோடு சேர்ந்து 5-ம் வீட்டில் இருப்பதும், அந்த இராகு பூராடம் காலில் இருப்பதும் காரணமாகிறது.

பூராடம், சுக்கிரன் சாரம் (கால்). அதாவது மூன்றுக்குரியவன் காலில் இருப்பதால் உடல்நலனில் பல திருப்பங்கள். ஆனால் இராகு திசையில், இராகு புக்தி 30.03.2021-க்கு பின் பாதிப்புகள் வர வாய்ப்பில்லை. அதுவரையில் உடல்நலனில் மிகுந்த கவனம் தேவை.

லாபஸ்தானத்தில் இருக்கும் குரு, கேதுவோடு அமர்ந்து நேர் பார்வையாக திசாநாதன் இராகுவை பார்வை செய்வதால், அதாவது பூர்வ புண்ணியாதிபதி பார்வை ஏற்படுவதால் நன்மைகள் வர வாய்ப்பு அதிகம்.

New Update: சொன்னது நடக்கிறது !




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech