Saturday 4th May 2024

தலைப்புச் செய்தி :

புரட்டப்போகும் புரட்டாசி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648,

அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு வணக்கம். இந்த “புரட்டப்போகும் புரட்டாசி” என்ற தலைப்பு ஏன் வைத்தேன் என்றால், சூரியன், கன்னி இராசியில் 17.09.2020 அன்று பிரவேசிக்கிறார். கன்னி இராசியில் இருக்கு சூரியனை, தனுசில் இருக்கும் சனி பார்வை செய்யப்போகிறார். சனி பகவான் சாதாரணமானவன் அல்ல. ஈஸ்வரேனையும், இராவனேஸ்வரனையும் ஆட்டி படைத்தவன். அவ்வளவு ஏன் நம்மையெல்லாம் கூட ஜென்ம சனியில், அஷ்டம சனியில், ஏழரையில் ஆட்டி படைக்கவில்லையா?. அப்படிபட்ட பலமான சனி பகவான், சூரிய பகவானை பார்ப்பதால், சூரியன் அரசாங்கம், அரசியல் தலைவர்கள் குறித்து கூறுவது.

சனி பகவான், ஒரு தலைவனை உருவாக்குபவன். ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால், மக்கள் மத்தியில் புகழோடு அந்த ஜாதகன் திகழ்வான். ஒருவன் ஒரு நாட்டுக்கு அல்லது ஒரு நகரத்திறகு தலைவானாக இருக்க முக்கிய காரணம் சனி பகவான். அதுமட்டுமல்ல சனி பகவானே நீதி தேவன்.




இப்பொழுது கன்னி இராசியில் இருக்கும் சூரியனை சனி 10-ம் பார்வையாக பார்வை செய்கிறார். சனி, உத்திராடம் காலில் இருந்து சூரியனை பார்வை செய்வது நன்மையில்லை. சூரியன், அவன் சொந்த சாரத்தில் (உத்திரத்தில்) இருக்கிறது. இப்படி சொந்த சாரத்தில் இருக்கும் சூரியனை, சனி பார்வை செய்வதால், அரசியல் தலைவர்கள் பலருக்கு உடல்நலக்குறைவு, அரசாங்கத்திற்கு பெரும் சோதனையான காலகட்டம் என்றே கூற வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் மாதத்திற்கு மேல் படிப்படியாக குறையும் கொரோனா, இந்த புரட்டாசி மாதம் சற்று புரட்டி எடுத்துவிட்டு செல்லும்.

கன்னி சூரியன், புதனின் வீடாக இருப்பது மாணவர்களுக்கு கல்வியில் சற்று சோதனை காலம். தனுசில் இருக்கும் சனி, குருவின் இல்லத்தில் இருப்பதால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். குறிப்பாக, வரும் 18.10.2020 முதல் கடுமையான காலம்தான். மேஷத்தில் இருக்கும் செவ்வாய் 17.10.2020 அன்று ஐப்பசி துலா இராசிக்கு சூரியன் வந்து அமர்ந்ததும், கடும் மழை-வெள்ள பெருக்கு ஏற்படும். நல்லதே கூற வேண்டும் நல்லதே எழுத வேண்டும் என்றாலும் கிரக நிலை சாதகமாக இல்லை என்பதையும் குறிப்பிட்டு ஆக வேண்டும். அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களே… புரட்டாசி, ஐப்பசி மிக, மிக மோசமான, பாதகமான காலம். உடல் ஆரோக்கியத்தை முக்கியமாக கவனித்துக் கொள்ளுங்கள். பொருளாதாரம் பாதிப்பு அதிகமாகும். இந்த புரட்டாசியே புரட்ட ஆரம்பம் ஆகிவிட்டது. இதை போல் பாதகமாக நான் எழுதியது இல்லை. இருப்பினும் பல தொழில்கள் நலிவடைய இருப்பதால் அதிக கடன் வாங்கி மூலதனம் செய்யாதீர்கள். இவை அனைத்தும் தை மாதம் பிரச்னைகள் தீர்ந்து நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அம்பாள் அருளால் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

READ IN ENGLISH

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech