Friday 26th April 2024

தலைப்புச் செய்தி :

தென்மேற்கும் அதன் குணங்களும் !

விஜய் ஜி கிருஷ்ணாராவ்.

   பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது.

பஞ்ச பூதங்கள் என்பது என்ன?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் வாழ்வதற்கு அடிபடையான விஷயங்கள் சில கட்டாயமாக தேவை. அவற்றில் ஒன்றுதான் வசிக்க இடம். குடியிருக்கிற இடத்திலே குறை இருந்தால் அது வாழ்க்கைக்கு நிறைவை தராது. வசிக்கின்ற இடம் வசதியாக இருக்கின்றதா என்று பார்ப்பதற்கு முன்னதாக அந்த இடம் நமது வாழ்க்கையின் மேன்மைக்கு துணை செய்யுமா? என்று முதலில் கவனித்தல் அவசியம்.

உழைப்பு மதிப்பு தரும் என்றாலும், உழைப்புக்கேற்ற ஊதியமே மரியாதை தரும். உழைப்பு மட்டும் இருந்தால் அதனால் கிடைக்கின்ற பலன்தான் என்ன?.

நம் உழைப்பானது நம்மை உயர்த்திட வேண்டும். நம் நிலையை மரியாதைக்குரியதாக ஆக்கிட வேண்டும். அதனால்தான், நம் உழைப்புக்கேற்ற நல்ல பலன்களை நாம் அனுபவித்திட வேண்டும் என்றால், நாம் வசிக்கின்ற இடம் வசதியாக இருப்பதைவிட கட்டடகலை சாஸ்திரத்திற்கு எதிரானதாக அமைந்திடக் கூடாது.

சாலையோரம் உறங்குகின்றவன் சாஸ்திரம் பார்க்க முடியுமா? என்று வார்த்தை ஜாலத்திற்கு கேட்டாலும் கூட அதில் நியாயம் இல்லாமல் இல்லை. நம் சாஸ்திர சம்பிரதாயங்களின் நோக்கமே பாமரனும் சாஸ்திரங்களை தன்னால் இயன்றவரை அனுசரித்தால், மாமரம் போல அவனும் மதிப்பு பெற்று பிறருக்கும் பலன் தரும் மாமனிதாக உயர்ந்திட வேண்டும் என்கிற நோக்கம்தான்.

எந்த ஒரு விஷயமும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஒரு செயலை செய்தால் அது மருந்தாவதும், விஷமாவதும் அவரவரின் அனுகுமுறையின்படிதான்.

நம்பிக்கை என்பதுதான் இதில் அடிபடை மந்திரம். சாஸ்திரங்களில் சிலவற்றை நம்பிக்கையுடன் செய்தாலும், நம்பிக்கை இல்லாமல் செய்தாலும் அவை தர வேண்டிய பலனை தந்துதான் தீரும்.

கட்டட சாஸ்திரமும் அப்படிதான். கட்டட சாஸ்திரத்தில் அடிபடையான விஷயங்கள் சில உண்டு. மேலோட்டமாக பார்த்தால் அவை அடிப்படையான விஷயமாகப்பட்டாலும் அவைதான் அஸ்திவாரமாகவும் அமைவதுண்டு.

அதன்படி பார்த்தால் வாஸ்து சாஸ்திரம் என்றும், மனையடி சாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிற கட்டட சாஸ்திரமானது சில அடிபடை விஷயங்களை நமக்கு சொல்கிறது.

அதில் முக்கியமானது –

மனையை தேர்வு செய்யும் முறை. கட்டடத்தை தாங்கி நிற்கின்ற எந்த மனையானாலும் சிறப்புக்குரியதாக இருத்தல் அவசியம். மனையை தேர்வு செய்யும்முறை பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் ஏழுதி இருக்கின்றேன். நான் எழுதி வெளிவந்த புத்தகத்திலும் அதைபற்றிய தகவல் இருக்கின்றது. அதனால் மனையை பற்றிய விளக்கம் இந்த கட்டுரைக்கு அவசியமில்லை என நினைக்கிறேன்.

இப்போழுது நாம் இங்கே தெரிந்துக் கொள்ள இருப்பது, தென்மேற்கு பகுதியின் குணங்களை பற்றியது. தென்மேற்கு மூலையை வாஸ்துகலை, நிருதி (அ) நைருதி என்று அழைக்கின்றது. மற்ற பகுதியை போன்ற இந்த நிருதி என்கின்ற தென்மேற்கு பகுதியும் அதிக முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

நிருதி பகுதி என்றால் தென்மேற்கு. இந்த தென்மேற்கு என்பது தெற்கை நோக்கிய தென்மேற்கு, மேற்கை நோக்கிய தென்மேற்கு என்று இருவகைப்படுகிறது. இதன் பலன்களும் வெவ்வேறு ஆனதாக இருக்கின்றது. இதில் தெற்கை நோக்கிய தென்மேற்கு பெண்களுக்கும், மேற்கை நோக்கிய தென்மேற்கு ஆண்களுக்கும் துணை செய்வதாக அமைகிறது. அதனால்தான் தென்மேற்கை பொருத்தவரை நாம் கவனமாக பார்த்து கட்டடத்தை அமைக்க வேண்டும். தென்மேற்கில் குறை ஏற்படுத்திவிட்டால் அது துர்மரணம் வரை கொண்டு சென்றுவிடும்.

அதனால் நாம் ஒரு மனையில் கட்டடத்தை உருவாக்கும் முன்னதாக வரையப்படும் வரைப்படத்தில் தென்மேற்கு எந்த நிலையில் அமைக்கபட்டு (அ) வரையப்பட்டு உள்ளது என்பதை மிக,மிக கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்.

இங்கே நான் இப்படி எழுதுவதற்கு காரணம், நம்மில் பலர் ஒரு கட்டடத்தின் வரைப்படம் அமைக்‌கும்போது ஒருசில வாஸ்து விஷயங்களை மட்டும் பார்த்துவிட்டு, தென்மேற்கு அமைப்பை பற்றி கவலைப்படாமல், கட்டடம் கட்டிமுடித்து சில வருடங்களில் அல்லது ஒருசில மாதங்களில் துயரமான விஷயங்களை சந்தித்து வருந்துகிறார்கள். ஆகவே வாசகர்களே, நீங்கள் கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை போலவே தென்மேற்கு மூலைக்கு தரும் முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும்.

சரி –

தென்மேற்கு மூலை நன்றாக இருந்தால் என்னென்ன சிறப்பு கிடைக்கும்?

நல்ல ஆரோக்கியத்தை தரும். வம்பு, வழக்கு, வீண்பழி, விபத்து, பிரிவு இப்படி துயரமான சம்பவங்களை தந்திடாது.

இதுவே, தென்மேற்கு மூலையில் குறை ஏற்பட்டால், அடுக்கடுக்கான வீண்பழி, திடீர் உடல்நலக்குறைவினால் பெரிய அளவில் பாதிப்பு, துர்மரணம், வழக்குக்கு மேல் வழக்கு இன்னும் இன்னும் எத்தனையோ துன்பங்களை தரவல்லது தென்மேற்கில் வாஸ்து தோஷம்.

தென்மேற்கில் அமைக்க ஏற்றவை என்ன? அமைக்கவே கூடாதது என்ன?

(சொல்கிறேன்)

அடுத்த பகுதி இங்கே படிக்கவும்.





மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Vaasthu Consultation Contact: Vijay G Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 18 2018. Filed under Bhakthi planet, EBooks, Headlines, Home Page special, Vaasthu, Vaasthu, செய்திகள், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech