Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: September, 2014

Those who are able to win struggles in life? |Astrology Article

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau In astrological terms, in ones horoscope the third place in Lakna is said to be keerthi sthanam or dhairya sthanam. If subha grahas are to be seated in dhairya sthanam, then the particular horoscope person can overcome any struggle or hindrance that comes their way and they will be crowned […]

சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா சார்பில் ஜாமீன் மனு தாக்கல்; பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுவார்

பெங்களூர் பெங்களூர் ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க.வின் சட்டப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று அ.தி.மு.க. வக்கீல்கள் பெங்களூரில் கூடி நீண்ட நேரம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்படும் அப்பீல் மனுவில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டது. பொதுவாக சிறை தண்டனை விதிக்கப்படும் ஒருவர், 3 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெற்றிருந்தால் எங்கு தீர்ப்பு வழங்கப்பட்டதோ […]

புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் பதவி ஏற்கிறார்.

சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக் குப் பதிலாக புதிய முதல்- அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது.புதிய முதல் – அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் […]

சிறைச்சாலையில் 3-வது நாள்…ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி தற்போது நலம்

பெங்களூர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து கைது செய்யபட்ட அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று 3-வது நாளாக அவர் சிறைச்சாலையில் உள்ளார். பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]

பெங்களூரிலிருந்து தமிழகம் செல்லும் பஸ்களின் சேவை ரத்து

பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்துக்கு இயக்கப்படும் அம்மாநில அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெங்களூரில் இருந்து ஒசூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பகல் நேரத்திலும் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இரவு நேரத்திலும் பெங்களூரிலிருந்து கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு பாதகமாக வந்தால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதும் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகம் இன்று அதிகாலை […]

மோடிக்கு சம்மன் அனுப்பியது சிறுபிள்ளைத்தனமானது: இந்தியா கருத்து

நியூயார்க், குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சையது அக்பரூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குஜராத் கலவர வழக்கில் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே நன்கு விசாரித்து குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை […]

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை – ரூ.100 கோடி அபராதம்?

பெங்களூர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு […]

செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்?

செவ்வாயில் எலியன்ஸ்கள் சாலையை கடக்க டிராபிக் சிக்னல் பயன்படுத்துகிறார்களா? ஒரு வேடிக்கையான கேள்வியுடன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது. “டிராபிக் சிக்னல்” தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் […]

விஜய் ஆண்டனியின் அடுத்த படம் – இந்தியா பாகிஸ்தான்

‘நான்’, ‘சலீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. இதில் இவருக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடித்து வருகிறார். மேலும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து வருகிறார்கள். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ரொமண்டிக் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் […]

சொத்துகுவிப்பு வழக்கு: புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech