Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2014

பாலிவுட் நடிகர்கள் -நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

புதுடெல்லி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24-ந்தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில்  தெக் சின் அக்தர் கூறியதாவது:- ஒருநாள் பயிற்சி முகாமில் நான், யாசின் பத்கல், அசமதுல்லா அக்தர், ஜியா உர்  ரஹ்மான் ஆகிய 4 பேரும் தற்கொலை தாக்குதல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யாசின் பத்கல், இந்தி திரை உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் […]

அமெரிக்காவில் இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிரட்டிய இளைஞன் கைது

வாஷிங்டன், ஏப்.25- அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா […]

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை

டோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் […]

தேர்தல் செய்திகள்!

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அமைதியாக நடந்தது: 73 சதவீத ஓட்டுப்பதிவு. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்! தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். அதிகபட்டசமாக தர்மபுரியில் 71% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு விடுமுறை விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் – சீல் வைப்பு;ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை! ஐ.டி. நிறுவனங்கள் மீது […]

சீன மக்களை அசத்திய சூரிய ஐஸ் வளையம்

பீஜிங், ஏப்.23- சூரிய உதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ சில பருவங்களில் பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களில் இருக்கும் பனிப்படிமங்களின் (ஐஸ் க்ரிஸ்டல்ஸ்) ஊடாக சூரிய ஒளி பாயும் வேளையில் சூரியனைச் சுற்றி ஒரு சிறு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வினை ஆங்கிலத்தில் ‘சோலார் ஹேலோ’ என்று குறிப்பிடுவர். இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலிக்கும் கண்ணுக்கினிய அபூர்வ காட்சி தோன்றும். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் பகுதியில் […]

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

சென்னை, ஏப். 23– தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகள் நூற்றுக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. தொடக்க கல்வி துறையின் அனுமதியும், அங்கீகாரமும் பெறாமல் இயங்கும் இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தர […]

நாளை ஓட்டுப்பதிவு: இளைஞர்கள்–மாணவர்கள் சொந்த ஊர் பயணம்

சென்னை, ஏப். 23– தமிழ்நாடு – புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களும் நடந்து வருகின்றன. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது. ஓட்டுப்பதிவு நடை பெறுவதையொட்டி, தமிழ்நாடு – புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை விட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் […]

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை

புதுடெல்லி, ஏப்.23- பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது […]

வேலை சீக்கிரம் கிடைக்க என்ன பரிகாரம்? | இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி:- ஐயா, நான் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு வேலை தேடலாம் என நினைத்து தேட ஆரம்பித்தேன். வேலை கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது. கிடைக்கிற வேலையை செய்து கொண்டும், நண்பர்களிடம் கடன் வாங்கிக் கொண்டும் எனது வாழ்க்கையை மலேசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. கடனும் அதிகமாகி, கடன் தொல்லைகளும் ஆரம்பிக்கின்றது. இதெல்லாமே ஏழரை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech