Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் சுவாமிகள் – பகுதி 2

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்

Written by Niranjana NIRANJHANA

சூனியத்தை செய்தவனிடமே திருப்பி அனுப்பிய பாம்பன் சுவாமிகள்

சிதம்பரத்தில் சுவாமிகள் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால் சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வெற்றி பெற்றார். இதனால் கோபம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளுக்கு செய்வினை செய்தார்கள். முருகன் அருளால், அந்த செய்வினையை செய்தவருக்கே திருப்பி அனுப்பினார் பாம்பன் சுவாமிகள்.

பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமான் வழி காட்டிய கோவில்

ஒருசமயம் பாம்பன் சுவாமி, பாதயாத்திரையாக பல திருத்தலங்களுக்கு சென்றார். அப்போது ஒரு இளைஞர், “நீங்கள் பல கோவிலுக்கு சென்று வருவதாக கேள்விப்பட்டேன். குமரக்கோட்டம் சென்றதுண்டா?“ என்றார். “இல்லையே..அந்த கோயில் எங்குள்ளது.?“ என்றார் பாம்பன் சுவாமிகள். “வாங்க காட்டுகிறேன்“ என்று கூறி குமரகோட்டம் அழைத்து வந்து, “இதுதான் குமரகோட்டம் முருகன் கோவில்“ என்று கூறி, அடுத்த வினாடியே மறைந்தார் அந்த இளைஞர். தன்னுடன் வழிக்காட்டி வந்தது அந்த முருகப்பெருமானே என்பதை உணர்ந்தார் சுவாமிகள்.

சுவாமி கண்ட கனவு

Manamakkal Malai“தேட்டிலே மிகுந்த சென்னை சேர்“ என்று முருகபெருமான் சுவாமிகளுக்கு  கனவில் கட்டளையிட்டார். கனவுதானே என்று அலட்சியப்படுத்த மாட்டார் சுவாமிகள். அதன் காரணம், தான் காணும் கனவு யாவும் திருமுருகனின் திருவருளால் வருவதே என்று நம்பிக்கை கொண்டவர் பாம்பன் சுவாமிகள். அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஒருநாள் அவர் கனவில்,

திருநீறு அணிந்த பெரியவர் ஒருவர், வாழையிலையிலே உணவு பரிமாறி, “உனக்காக நான் கொண்டு வந்தது சாப்பிடு. பராசக்தி திருஞான சம்பந்தருக்கு அமுதபால் தந்தது போல், நான் உனக்கு அன்னமும் பாலும் தருகிறேன். சாப்பிடு“ என்றார் அந்த பெரியவர். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று சாப்பிட்டார் பாம்பன் சுவாமிகள். பிறகு தூக்கம் கலைந்தது. சுவாமிகளுக்கு, தாம் கண்ட கனவை பாடலாக பாடினார். தாம் கவிநயமாக பாடியதை கண்ட சுவாமிகளே ஆச்சரியம் அடைந்தார். “தமக்கு தமிழ்கடவுள் முருகனே கனவில் வந்து, பாலும் அன்னமும் கலந்து கொடுத்தாரோ.? அதனால்தான் தமக்கு கவிபாடும் ஆற்றல் வந்ததோ“ என்று மகிழ்ந்தார். இந்த கனவின் பிறகே பாம்பன் சுவாமிகள் பல பாடல்களை இயற்றி பாடினார். அன்றிலிருந்து கனவில் தமக்கு வரும் உத்தரவுகள் யாவும் முருகப்பெருமான் அருளுவதே என்றெண்ணி, சென்னைக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.

“சென்னை உங்களுக்கு அதிக பரிச்சயம் இல்லை. அதனால் நீங்கள் சென்னையில் எங்கு தங்குவீர்கள்“ என்றார்கள் சிலர்.  முருகன் இருக்கும் இடமெல்லாம் அவனுடைய வீடு, அவனுடைய ஊர். அதனால் முருகனே, “வா சென்னைக்கு” என்றார். செல்கிறேன். அவன் காட்டுவான் வழி” என்று கூறி மதுரை தொடர்வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து சேர்ந்தார் பாம்பன் சுவாமிகள்.

அவருடைய சக்தியையும் மகிமையும் சென்னை மக்கள் நன்கு அறிந்தார்கள். சுவாமிகள் போகும் இடமெல்லாம் முருகனின் அருளால் ஆசியால் அவருக்கு நற்பெயர் கிடைத்தது.

சுவாமிகளுக்கு ஏற்பட்ட விபத்து

1923 சென்னை தம்பு செட்டி தெருவழியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு குதிரை வண்டிக்காரன் சுவாமியின் கால்மீது வண்டியை ஏற்றி விடுகிறான். இதனால் சுவாமிகளின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. வலியில் துடித்தார் சுவாமிகள்.  சுவாமியை பொதுமக்கள், அருகில் இருந்த சென்னை அரசு பொது  மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாம்பன் சுவாமிகளுக்கு நேர்ந்த விபத்து அவரின் சீடர்களுக்கு பெரும் கவலையை தந்தது. Bhakthi Planetசுவாமியை காண ஓடோடி வந்தார்கள். “சுவாமி உங்களுக்கு இந்த நிலையா.?” என்று வருந்தினார்கள். அப்போது அந்த மருத்துவமனையில்  வேலை செய்த ஆங்கிலேயே தலைமை மருத்துவர் ஒருவர், “இனி உங்களால் நடக்கவே முடியாது. எலும்பு பலமாக முறிந்து விட்டது. இதற்கு அறுவை சிகிச்சை கூட இல்லை.“ என்று கூறினார். இதை கேட்ட சீடர்கள், கண்ணீருடன் நின்றார்கள். ஆனால் சுவாமிகள், மருத்துவர் சொன்னதை கேட்டு வருந்தாமல், “விபத்தை ஏற்படுத்தியவன் என் முருகன். அவனே இதற்கும் வைத்தியன்.” என்று கூறி தினமும் ஷண்முக கவசத்தை தன் சீடரை படிக்க சொன்னார். இதன் பயனாக ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சரியாக 11-ம் நாள், இரண்டு மயில்கள் தன்னை நோக்கி வருவதை சுவாமிகள் கண்டார். அதில் முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். இந்த காட்சியை கண்ட சுவாமிகள் முருகனை வணங்கினார். சுவாமிகளின் முறிந்த கால் எலும்பு சேர்ந்தது. இதை கண்ட மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். பாம்பன் சுவாமிகள் மேலும் புகழ் அடைந்தார்.

மறைந்தும் மறையாமல் வாழும் சுவாமிகள்

30.05.1929-ஆம் ஆண்டு, காலை 7-15 மணிக்கு முருகப்பெருமானிடம் ஐக்கியமானார் பாம்பன் சுவாமிகள். அவர் சமாதி சென்னை திருவான்மியூரில் இருக்கிறது. குழந்தை வடிவில் மயில்மேல் முருகன் வருவதாக சிலை உருவாக்கி மயூரவாகனனை அந்த இடத்தில் நிறுவினார்கள்.  அத்துடன் சுவாமியின் திருஉருவச்சிலையையும் நிறுவினார்கள்.

“என்னை நம்பி வருபவர்களை காக்க வேண்டும். என்னுள் இருந்து இயங்கி என்னை வாழ வைத்த தெய்வமான முருகா, என் பக்தர்களையும் நீ வாழ வை.” என்று வேண்டி கொண்டார் பாம்பன் சுவாமிகள். அத்துடன் அவர் தன் பக்தர்களுடன் எப்போதும் ஏதோ ஒரு உருவத்தில் வந்து உதவுவதாகவும் பலர் சொல்கிறார்கள்.  எப்படி அருணகிரிநாதர் உடல் சிதைவுற்ற போதிலும் கிளி உருவில் கந்தர் அநுபூதி பாடினாரோ, அதுபோல் சுவாமிகளும் மறைந்தும் மறையாமலும் நம்மோடு வாழ்கிறார். அவர் ஆசி எல்லோரையும் வாழ வைக்கும்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 5 2013. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முதன்மை பக்கம், முருகன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech