Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

அருளும், பொருளும் தரும் ஈச்சனாரி விநாயகர்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் சாலையில்- சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஈச்சனாரி என்னும் இடத்தில் இருக்கிறது இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயம்.

இந்த கோயிலின் தலவரலாறு மிகவும் சுவையானது. கோவையில் புகழ்பெற்ற இன்னொரு கோயிலான பேரூர் பட்டீஸ்வரசாமி கோயிலுக்காக செய்யப்பட்ட விக்ரகம் இது. ஆறு அடி உயரம், மூன்று அடி பருமனும் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்றி வந்தனர். வண்டியின் அச்சு இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது முறிந்துவிட்டது. வேறு வண்டியில் பிள்ளையாரை ஏற்றி பேரூருக்குக் கொண்டுசெல்ல முயன்றும் முடியவில்லை. விநாயகர் ஈச்சநாரியிலேயே தங்கிவிட்டார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் இது. பிறகு அதே இடத்தில் சிறிய கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர்.

இந்த கோயிலின் இBhakthi Planetன்னொரு சிறப்பு

இடைவெளி இல்லாத தரிசனம். ஆமாம். கோயில் காலை ஐந்து மணிக்கு தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்பட்டால், இரவு பத்துமணி வரை இடைவிடாமல் விநாயகரை தரிசிக்கலாம். இடையில் கோயிலை மூடுவதே இல்லை.

ஈச்சனாரி விநாயகரின் அலங்காரம்

ஈச்சனாரி விநாயகர் திருமுடியில் கிரீடம். தங்க விபூதிப்பட்டைகள்.Manamakkal Malai இடது கையில் மோதகம், கழுத்தில் உருத்திராட்சமாலை. அழகான அருகம்புல் மாலை.

ஒவ்வொரு நாளும் விநாயகரின் அலங்காரங்கள் வித்தியாசப்படுகின்றன. சந்தன அலங்காரம், விபூதி அலங்காரம், தங்கக் கவச அலங்காரம் என்று பலவிதமாக அலங்காரங்கள்.

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று செய்யப்படும் அன்னாபிஷேக அலங்காரம் மிகவும் வித்தியாசமானது. விநாயகருக்கு அஸ்வதி முதல் ரேவதி வரை உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு நடத்தப்படும் நட்சத்திர பூஜை மிகவும் விசேஷமானது.

சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சதுர்த்தி ஆகிய நாட்களில் மாலை ஏழு மணிக்கு சுவாமி திருவீதி உலா நடத்தப்படுகிறது.

தினசரி கோயிலுள் திருவீதி உலா

தமிழகத்திலேயே முதன்முறையாக விநாயகப் பெருமானுக்கு என்று தங்கத்தேர் செய்யப்பட்டு, நாள்தோறும் இடைவிடாமல் பக்தர்களால் வழிபாடாக தினசரி இரவு ஏழு மணிக்கு கோயிலுள் திருவீதி உலா நடக்கும் காட்சி, வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத ஒன்றாகும்.

சங்கடங்களைத் தீர்த்துவைக்கும் ஈச்சனாரி விநாயகரை தரிசித்து அருளும், பொருளும் பெருவோம்

Posted by on Sep 24 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »