Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: October, 2012

கோடி வரங்களை தரும் தஞ்சை கோடியம்மன்

Niranjana தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கோடியம்மன், தஞ்சையின் எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார். அற்புதம் நிறைந்த கோடியம்மன் தோன்றிய வரலாறு என்ன என்பதையும், சோழ மன்னரின் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, எதிரிநாட்டு அரசரான சத்துருகோபன் திட்டமிட்டு போருக்கு வந்தபோது, சத்துருகோபனுடன் போரிடும் அளவுக்கு போதிய நிதி நிலை இல்லை என வருந்திய சோழ மன்னரை, எவ்வாறு கோடியம்மன் காப்பாற்றினார் என்பதையும் இன்று நாம் தெரிந்துக்கொள்வோம். அழகாபுரி அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் […]

சிவபுராணம் சொல்லும் சிறப்பான பரிகாரங்கள்

Niranjana   இறைவனை வணங்கிட நாள்-நேரம் பார்க்க தேவையில்லை. எந்த சமயத்திலும் இறைவனை வணங்கலாம். ஆனாலும் இறைவனுக்குரிய மிகவும் விசேஷமான தினங்களில் வணங்கினால், வேண்டியது வேண்டியபடி விரைவில் கிடைத்திட வழிவகுக்கும். எந்தெந்த தெய்வங்கள் என்னென்ன பலன்களை நமக்கு தந்திடும்? என்னென்ன தானங்கள் செய்வதினால் என்னென்ன நற்பலன்கள் கிட்டிடும்? காலையில் எந்த திசையை நோக்கி கண் விழித்திட வேண்டும்?  எந்த திசையை முதலில் பார்க்கக் கூடாது.? போன்ற சாஸ்திர விஷயங்களை சிவபுராணத்தில் சூதமா முனிவர் அழகாக சொல்லி இருக்கிறார். […]

நோய்களை நெருங்க விடாமல் ஆரோக்கியம் காக்கும் ‘தேன்’!

Niranjana நல்ல வாய்ப்புகளை இழக்கச் செய்யும் முதல் எதிரி – சோம்பல். யாராவது சோம்பலாக உட்கார்ந்திருந்தால், “ஏன் இப்படி இருக்கிறாய்? தேனீயை போல் சுறுசுறுப்பாக இரு.” என்பார்கள்.  சுறுசுறுப்பையும் உழைப்பையும் தேனீக்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தேனீயின் உழைப்பைதான் மற்றவர்களால் திருட முடியும். தேனீக்களின் திறமையை ஒருகாலம் மனிதர்களால் திருடமுடியாது. இறைவனுக்கும் தேன் அபிஷேகம் விசேஷம். தேனீக்கள் நமக்கு சஞ்சிவியை போல் மிக உயர்ந்த மருந்தை தருகிறது. தேனால் என்னென்ன பயன் என்பதை இப்போது நாம் […]

மாமனாரின் செல்வ நிலை சொல்லும் கிரக அமைப்புகள்

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. தன் மருமகனை பல நாட்களாக “வீட்டுக்கு வாங்க மாப்ளே” என்று அழைத்துக்கொண்டே இருந்தார் அந்த மாமனார். மனைவியும், “எங்கப்பா எவ்வளவு நாளா கூப்பிடுகிட்டே இருக்காரு. போய்தான் தங்கிட்டு வருவோமே” என்றாள். இதனால் அந்த மாப்பிள்ளை, தன் அம்மாவிடம், “நான் மாமனார் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு வரட்டுமா?.” என கேட்டான். அதற்கு அவன் தாய், “தாராளமாக போ. ஆனால் உன் மாமனார் வீட்டில் நீ சாப்பிடும்போது அந்த உணவில் உன் […]

இராமருடன் மோதிய ஆஞ்சநேயர்

நிரஞ்சனா  ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயர், அதே இராமனிடம் மோதினார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே இருக்கும். விதியின் விளையாட்டில் இருந்து யார்தான் தப்பிக்க முடியும்?. யாரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கமுடியாது, அதுபோல தொடர்ந்து ஒருவருக்கு எதிரியாகவும் இருக்க முடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதனால்தான் நாரதமுனிவரின் சூழ்ச்சியில் ஸ்ரீஇராமரும் அனுமனும் மோதிக் கொண்டார்கள்.  அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம். உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று நினைத்த […]

சகல நன்மை தரும் சாளக்கிராமம்

நிரஞ்சனா சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சாளக்கிராமம் உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ –விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் […]

நாத்தனார் தொல்லை யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 நாத்தனார் நட்பும், நார்த்தங்காய் உப்பும் வீண் போகாது. நார்த்தங்காய்க்கு போடவேண்டிய உப்பை சரியாக போட்டால் காய் காலாவதி ஆகாது. அதைப்போலவே நாத்தனாரிடம் நட்பு பாராட்டினால் குடும்பத்தில் விரிசல் இல்லை. சுனாமி இல்லை. மாமியாருக்கு அடுத்து நாத்தனார் ராஜ்யம்தான் சில குடும்பங்களில் நடக்கிறது. உடன் பிறநத சகோதரிகள் அந்த வீட்டின் தாய் போல எனவும், அந்த வீட்டின் குலதெய்வம் எனவும் கிராமபுறங்களில் ஒரு ஆணின் உடன்பிறந்த […]

தாமத திருமணம் ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 மலர்கள் உள்ள கொடிகள், பழங்கள் உள்ள மரங்கள் எப்படி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதோ அதை போலவே திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக இருக்கும்போது கிடைக்கும் மதிப்பு, மரியாதை அற்புதமானது. லட்சாதிபதியாக இருக்கலாம், கோடீஸ்வரராக இருக்கலாம் ஆனால் வாடகை வீட்டில் இருந்தால் மதிப்பு குறைவுதான். சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு சிறு வீடு அது சொந்த வீடு என்றால் அதனுடைய மதிப்பே வேறு. அதைப்போலவே தனி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech