Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

நாத்தனார் தொல்லை யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

நாத்தனார் நட்பும், நார்த்தங்காய் உப்பும் வீண் போகாது. நார்த்தங்காய்க்கு போடவேண்டிய உப்பை சரியாக போட்டால் காய் காலாவதி ஆகாது. அதைப்போலவே நாத்தனாரிடம் நட்பு பாராட்டினால் குடும்பத்தில் விரிசல் இல்லை. சுனாமி இல்லை. மாமியாருக்கு அடுத்து நாத்தனார் ராஜ்யம்தான் சில குடும்பங்களில் நடக்கிறது. உடன் பிறநத சகோதரிகள் அந்த வீட்டின் தாய் போல எனவும், அந்த வீட்டின் குலதெய்வம் எனவும் கிராமபுறங்களில் ஒரு ஆணின் உடன்பிறந்த சகோதரிகளுக்கு மரியாதை இருக்கிறது.    

“என்னங்க… உங்கம்மா சிவனேன்னு கம்முன்னு இருந்தாகூட, உங்க தங்கச்சி ஏதாவது கொளுத்தி போட்டு பிரச்சனை பண்றா. அவள கொஞ்சம் கண்டிச்சி வையுங்க.” என்று தன் கணவனுக்கு சில பெண்கள் கொம்பு சீவி விடுவார்கள் அந்த நேரத்தில் அந்த கணவனோ பூம், பூம் மாடு போல, “பார்க்கலாம் பார்க்கலாம்” என்று தலையாட்டுவான்.

சில குடும்பங்களில் நாத்தனார்தான் All in All அழகுராஜாக்கள். அம்மா-அப்பாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாத்தனார்களும் இருக்கிறார்கள்.

மாமியார் சும்மா இருந்தாலும் நாத்தனார் சில குடும்பங்களில் சும்மா இருப்பதில்லை.

குடும்பம் என்கிற மலர்களை ஒன்றாக கோர்த்து மாலையாக்கும் நாத்தனார்களும் உண்டு. அதே மாலையை நாறு நாறாக பீய்த்து குடும்பத்தையே நாறடிக்கும் நாத்தனார்களும் உண்டு.  

புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் இருக்கும் நாத்தனார் நல்ல தோழியாக இருப்பாளா – தொல்லையாக இருப்பளா? என்பதை அந்த மணப் பெண்ணின் ஜாதகமே எடுத்துக்காட்டும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ம் இடம் கணவனின் இடம். அந்த 7-ம் இடத்திற்கு 3-ம் இடம் கணவனின் தங்கையை பற்றி அறிவது அதாவது நாத்தனார் குணத்தை அறிவது.

அதாவது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-ம் இடம் நாத்தனார் இடம். அந்த 9-ம் இடத்தில் பாபிகள் எனப்படும் சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது இருந்தால் அந்த பெண்ணும் அவளுக்கு அமைந்த நாத்தனாரும் எலியும் பூனையுமாக இருப்பார்கள்.

அதே 9-ல் மேற்கண்ட கிரகங்கள் இருந்து, குரு பகவான் பார்வை செய்தால், பூனை இருக்கும் வீட்டில் எலி, பேரன்-பேத்தி எடுத்த கதையாக அந்த வீட்டின் மருமகள் எப்படியோ நாத்தனாரை சமாளித்து விடுவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-க்குரியவன் 2,5,9,11-ல் இருந்தால், நாத்தனாருடன் மோதல் இல்லாமல் நிம்மதியாக இருப்பாள். 9-க்குரிவன் 6,8,12ல் இருந்தால் அந்த பெண்ணின் குடுமி நாத்தனார் கையில்.

சரி. நாத்தனார் பிரச்னை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் நாத்தனாரை எப்படி நட்பாக்கிக்கொள்வது அல்லது எப்படி அவளுடன் பெரிய பிரச்சனை இல்லாமல் சமாளிப்பது?

இதற்கு, பெரிய செலவு தரக் கூடிய பரிகாரம் எதுவும் வேண்டாம். உங்களுடைய லக்கினாதிபதிக்கு ஏற்ற விலை குறைந்த சாதாரண ரத்தினம் ஒன்றை தேர்வு செய்து வெள்ளியில் மோதிரமாக அணிந்து அத்துடன், உங்களின் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டி வந்தால், Non Stop-பாக இம்சை தரும் நாத்தனார், உங்கள் விஷயத்தில் தலையிட மாட்டாள். செய்து பாருங்கள். !  

 For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

முன் அனுமதி பெற்று நேரில் ஜோதிட ஆலோசனை பெற அணுகவும்: 98411 64648

Posted by on Oct 8 2012. Filed under ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech