Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ

நிரஞ்சனா

ஆத்மாவுக்கு சக்தி இருக்கிறதா என்றால், உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவில்லாதது. அதிலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் புனித ஆத்மாக்கள் மகிமை நிறைந்தவை. ஆண்டாண்டு காலங்கள் இந்த பூலோகத்தில் நிலைத்து இருக்கும்.

மகான்களும், சித்தர்களும் உயிரோடு இருக்கும் போது, தியானம் செய்து தங்களின் ஆத்மாவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருப்பார்கள்.

அவர்களின் உடல் அழிந்தாலும் கூட அழிவில்லாத ஆத்ம ரூபமாக நம்மை சுற்றிதான் அவர்கள் இருக்கிறார்கள்.

ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ

 கி.பி 19- ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்னதாக மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் அரசுடைமை ஆக்கும்படி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஸ்ரீஇராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலய கிராமத்தையும் அரசுடைமை ஆக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்தார்கள் மறைந்த அந்த மகானின் பக்தர்கள்.

பக்தர்களின் எதிர்ப்பை அறிந்த கவர்னர் சர் தாமஸ் மன்றோ, இந்த விவகாரத்தை பற்றி நேரடியாக விசாரிக்க மந்த்ராலயம் வந்தார். இந்து சமுதாயமுறைப்படி தன்னுடைய காலணிகளை வெளியே கழற்றிவிட்டு, தனது தொப்பியை கழற்றி கையில் வைத்துக்கொண்டு மந்த்ராலயத்திற்குள் சென்று சுற்றி பார்த்தார். அப்போது மகான் ஸ்ரீ இராகவேந்திரரின் சமாதியான துளசி செடிகள் நிறைந்த பிருந்தாவனத்திற்கு வந்த போது, அங்கே சாந்தமான புன்னகையுடன், நெற்றியில் நாமம், வெண்ணிற தாடி, காவி உடையில் ஒரு பெரியவர் தோன்றினார்.

”தாங்கள் யார்?” என்று சர் தாமஸ் மன்றோ வினவ,

“என்னை இராகவேந்திரர் என்று அழைப்பார்கள்.” என்ற அந்த மகான் தொடர்ந்து பேசினார்.

“இந்த கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் தானமாக கொடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.” என்ற மகான் ஆவண சாட்சிகளை பற்றியும் விளக்கினார்.

அத்தனையும் உண்மை என்று புரிந்துக்கொண்டார் சர் தாமஸ் மன்றோ. அப்போது தாமஸ் மன்றோவுடன் பேசிய மகான், அவரை ஆசிர்வதித்து பிருந்தாவனத்திற்குள் மறைந்தார். இதை கண்டு பெரும் வியப்படைந்த சர் தாமஸ் மன்றோ, வெளியே வந்து “உள்ளே ஒரு பெரியவர் என்னிடம் பேசினாரே யார் அவர்?” என்று கேட்க,  அவரிடம் ஒரு ஓவியம் கொண்டுவந்து காட்டப்பட்டது.

“ஆம். இவர்தான் என்னிடம் பேசினார். யார் இவர்?” என்றார் சர் தாமஸ் மன்றோ.

“இவர்தான் எங்கள் மகான் ஸ்ரீ இராகவேந்திரர்.” என்றார்கள் மக்கள்.

ஆச்சரியம் அடைந்த சர் தாமஸ் மன்றோ, மகான் இராகவேந்திரரே நேரடியாக சொன்னது போல எல்லா ஆவணங்களும் சட்டப்படி இருந்த காரணத்தால், மந்த்ராலய மானிய சொத்துக்களை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டு அரசாணை வெளியிட்டார்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் இன்னமும் நம்முடன் இருக்கிறார் நமது ஒவ்வொரு செயல்களையும் அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். நமது நலனை மட்டுமே அவர் விரும்புகிறார்.

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

Posted by on Aug 23 2012. Filed under Photo Gallery, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech