Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது? – இயக்குனர் ஷங்கர் ஜாதகம்

Click & Read Previous Part 

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது என்கிற இந்த பகுதிக்கு வாசகர்களின் அமோக வரவேற்புக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பு என்கிற விஷயம் நம்மிடம்தான் இருக்கிறது அதற்கு பலன் தரும் புகழ் என்பது இறைவன் நமக்கு வரமாக தருவது. ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.” என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் பிறக்கிறார் என்றால் அவரின் பெயரை ஊர் சொல்ல வேண்டும்.

ஆனாலும் புகழ் என்பது வெறும் பெயரோடு நின்றுவிடக் கூடாது. அந்த புகழுக்குரிய பண வசதியும் இருந்தால்தான் புகழுக்கும் மரியாதை கிடைக்கும். அப்படி பொருளும் பெருமையையும் தருகிற புகழ் சிலருக்கே சாத்தியமாகிறது. அந்த வகையில் இந்த பகுதியில் நாம் இயக்குனர் ஷங்கரின் ஜாதக அமைப்பை ஆராய இருக்கிறோம். ஏழ்மையில் இருந்து உயர்ந்த அந்தஸ்துக்கு வந்த பலரை போல, ஷங்கரின் ஆரம்ப கால வாழ்க்கையும் மிக மிக சுமாரானதுதான்.

“தந்தையின் கார் புரோக்கர் தொழில் நஷ்டம் அடைந்ததால், அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாமல் போக, அரிசி சோறுக்கு பதிலாக ரேஷனில் கோதுமை வாங்கி அதில் சப்பாத்தி செய்து சாப்பிடுவதை அக்கம்பக்கத்தினர் கேலியாக பேச, என் அம்மா அதை சொல்லி வருத்தப்பட்டு அழுவார்கள். அப்போது, எப்படியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.“ என்று தமது ஆரம்ப கால வாழ்க்கையின் ஏழ்மை நிலையை அவரே சொல்லி இருக்கிறார்.

ஒரு நகைச்சுவை நடிகனாக புகழ் பெற வேண்டும் என்றுதான் அவரின் சினிமா முயற்சிகள் இருந்தது. சினிமாவில் காமெடி நடிகராக நுழைவதற்கு எளிய வழியாக இருக்கும் என்றுதான் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். ஆனால் அவரை மாபெரும் திரைப்பட இயக்குனராக மாற்றியது சந்தர்ப்பங்கள்.

இன்று இயக்குனர் ஷங்கரை தெரியாதவர்கள் இல்லை. இந்த புகழை அடைய பல கஷ்டங்களை அனுபவித்து, பல சோதனைகளை தாண்டி, இன்று உலக அதிசயங்களை தன் திரைப்படங்களின் மூலமாக நம் கண்முன் நிறுத்துகிறார். உலகநாயகன் கமலின் முக்கிய படங்களில் ஒன்று ஷங்கரின் இந்தியன்.  சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட படங்களாக சிவாஜியையும், எந்திரனையும் நமக்கு தந்தவர் இயக்குனர் ஷங்கர்.

சரி. இப்படி மக்கள் மத்தியில் புகழ் பெற காரணம் என்ன?

மக்கள் மத்தியில் புகழ் பெற செய்த யோகங்கள், இவருடைய ஜாதகத்தில் அப்படி என்ன இருக்கிறது.?

அதை பார்ப்போம். – 

கடக இராசி – துலா லக்கினத்தில் பிறந்தவர் ஷங்கர். ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி 10-ல் இருந்தாலோ அல்லது சனி 10-யை பார்த்தாலோ, சனி 10-ல் இருந்தாலோ மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள் என்று நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.  

ஷங்கர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 3-ல் கேது. அதாவது புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் கேது. அது செவ்வாயின் பார்வையில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய சங்கடமான நிலைகளை தந்தாலும், பின்னர் இதே ஞானக்காரகனான கேது, புதிய சிந்தனைகளை தந்து நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி புகழ், கீர்த்தியை வழங்கியது.

பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்கிற லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் சனி அமைய பெற்றவர்கள், அவர்கள்பட்ட துயரங்கள் – துன்பங்களின் வலி அவர்களுக்கு மட்டுமெ தெரியும். அந்தளவுக்கு எண்ணில் அடங்கா கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள். சோதனைகளும், வேதனைகளும் பஞ்சம் இல்லாமல் வந்து இருக்கும். ஆனால் அதே சனி 4-ல் அமைந்து ஷங்கரின் ஜாதகத்தில் 10-ம் இடத்தை, அதாவது மக்கள் மத்தியில் புகழை தருகிற 10-ம் இடத்தை சனி பார்வை செய்ததால், மக்கள் மத்தியில் இன்று புகழ் பெற்று விளங்குகிறார்.

அதுமட்டுமல்ல, இவரின் ஜாதகத்தில் இதே 10-ம் இடத்தை, 6-ல் அமர்ந்த குரு பார்வை செய்கிறார். தொழில்ஸ்தானமான 10-ம் வீட்டில் லக்கினாதிபதியான சுக்கிரன், ஆட்சி பெற்ற சந்திரனுடன் இணைந்து அமர்ந்து, குருவின் பார்வையை பெறுகிறார்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்கிற ஜோதிட வாக்குக்கு ஏற்ப நற்பலன்கள் அமைந்து, அந்த சிறப்புடன் கெஜகேசரியோகம், குரு-சுக்கிர யோகமும் கூட்டு சேர்ந்தது.

அத்துடன் அவரின் ஜாதகத்தில், லாபஸ்தானம் என்கிற 11-ம் இடத்தில் ஆட்சி பெற்ற சூரியனும், பாக்கியாதிபதியான புதனும் இணைந்து லாபத்தில் அமர்ந்து விட்டார்கள். இந்த கிரக நிலைக்கு “புதஆதித்யா யோகம்” என்று பெயர். இதனுடன் சிவயோகமும் அமைந்துவிட்டது.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த யோகம் இருக்கிறதோ இல்லையோ புதஆதித்யா யோகம் இருந்தாலே அவர்கள் எந்த துறையை தேர்தெடுத்தாலும் சாதிப்பார்கள். தங்களின் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள்.

ஆனால் இவரின் ஜாதகத்தில் 12-ல் செவ்வாய் மறைந்துவிட்டதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு குறையாக தெரிந்தாலும், 12-ல் மறைந்த செவ்வாய், அஸ்த நட்சத்திர சாரத்தில் அதாவது ஜீவானாதிபதியான சந்திரன் சாரத்தில் அமர்ந்து விட்டான். அமர்ந்தவன்,  குருவின் பார்வையை பெற்று குருமங்கள யோகத்தை அடைந்தான்.

இந்த “குருமங்கள யோகம்” என்ன பலன்களை தரும்? எனக் கேட்டால், நில புலன்களை வாரி வழங்கும்.

தனாதிபதி-சப்தமாதிபதி என்கிற 2-7க்குரிய செவ்வாய், குருவின் பார்வையை பெற்றதால், திருமணத்திற்கு பிறகு ஜாதகம் இன்னும் யோகங்களுக்கு பலம் சேர்த்தது. பல உயர்ந்த அந்தஸ்தை அவரின் திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் தந்திருக்கும்.

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்று அவர் சொன்னாலும், பாக்கியஸ்தானத்தில் இராகு அமைந்துவிட்ட காரணத்தால், தெய்வ திருப்பணிகளுக்கான உதவிகளை தாராளமாக செய்ய வைப்பார் இந்த இராகு பகவான்.

தற்போது இவருக்கு சுக்கிர திசை நடக்கிறது. அதாவது லக்கினாதிபதியின் திசை. மக்கள் மத்தியில் புகழ் பெற வேண்டும் என்றால் 10.-ம் இடம் வலுவாக இருக்க வேண்டும். இவர் ஜாதகத்தில் 10-ல் சந்திரன் – சுக்கிரன். அதற்கு குரு – சனியின் பார்வையும் அமைந்துவிட்டது. 

பிறந்த தேதி 17.08.1963. பிறந்த எண்ணும் 8. தேதி-மாதம்-வருடம் கூட்டு எண்ணும் 8.

பெயர் ஆங்கிலத்தில் SHANKAR – பெயர் எண் 19. ஆதிக்கம் சூரியன்.

ஜாதகத்தில், ஆட்சி பெற்ற சூரியனின் ஆதிக்கத்தில் பெயர் எண் அமைந்துள்ளது. இது அரசியல் – அரசாங்க விஷயங்களிலும் சாதகமான நிலையை தரும்.

ஜாதகம் யோகமாக இருந்து, அத்துடன் பெயர் எண்ணும் சரியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு அந்தஸ்தான வாழ்க்கை அமைந்தது விடும். போராடினாலும் நிச்சயம் அதற்கான பலனை தந்துவிடும் பெயர் எண், ஜாதக ரீதியாக சரியாக அமையும்போது,. நேரம் சரியில்லை என்றாலும் பெரிய பாதகத்தை உண்டாக்காது. ஏதேனும் வகையில் உதவி கிடைத்து கெட்ட நேரத்தை கடந்து வந்துவிடுவார்கள்.

அடுத்த சந்தர்ப்பத்தில், மக்கள் மத்தியில் புகழ் பெற்ற இன்னும் பலரின் யோக ஜாதக விளக்கங்களுடன் சந்திக்கிறேன்.♦

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 N. JOTHI,

Advocate,

319. Law Chambers,

Madras High Court,

Chennai – 104

Send your Feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இலவச ஜோதிட கேள்வி – பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

More Astrology Articles in English

More Astrology Articles in Tamil

CLICK FOR VIDEO PAGE

http://www.youtube.com/bhakthiplanet

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

BHAKTHIPLANET.COM
BHAKTHIPLANET.COM

Posted by on Aug 5 2012. Filed under Headlines, Home Page special, Photo Gallery, ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech