Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

ஏற்றம் தரும் எண்கணிதம் – நீங்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா?


Astrologer, 

V.G. KrishnaRau 

1-சூரியன்  

ஜாதகம் சாதகமாக இருந்தால் யோகம். ஆனால் பாதகமாக இருந்தால் மறுபடியும்  நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். ஸ்ரீமந் நாராயணன் ஒருவர்தான். ஆனால் அவர் பல அவதாரங்கள் எடுக்கும்போது அவருடைய பெயர்கள் மாறுவதை போல் அவரின் வாழ்க்கை முறையும் மாறியது.

உதாரணத்துக்கு ஸ்ரீ ராமசந்திரர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர் இப்படி பெயர் மாறும் போது வாழ்க்கையின் சூழ்நிலையும் மாறி விடுகிறது. ஆனால் ஒரே எழுத்து அதுவும் முதல் எழுத்து ரா அதாவது ராமன் என்ற எழுத்தும் ரங்கநாதர் என்ற எழுத்தும் ராவில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் ஸ்ரீ ரங்கநாதராக இருந்த நிம்மதி ராமராக இருக்கும்போது இல்லை.

இதில் இருந்து நாம் அறிய வேண்டியது எழுத்தை விட பெயருக்கு அதிக சக்தியிருக்கிறது. அந்த பெயர் எண்கணித முறைப்படி அமைந்தால் யோகம்.

“சிவாஜி ராவ்“ என்றிருந்த வரை கிடைக்காத புகழும் வாய்ப்பும் வசதியும் “ரஜினிகாந்த்“ என்று பெயர் மாற்றிய பிறகு கிடைத்தது.

“கணேசன்“ என்றிருந்த வரை கிடைக்காத புகழ் “சிவாஜி கணேசன்“ ஆன உடன் கிடைத்தது.

“சிவாஜி“ என்ற பெயர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமலும் இன்னொருவருக்கு மிக அதிர்ஷ்டத்தையும் தந்தது. இதனால் நம் பெயரையே இவர்களை போல எல்லோரும் மாற்ற வேண்டும் என்றில்லை. அவரவர்களின் பெயர்களுக்கேற்ப எண்கணித முறைப்படி எழுத்துகளை மட்டும் மாற்றி அமைத்து நல்ல முன்னேற்றத்தை பெற முடியும்.
பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது. அப்படியே மாற்றினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் பெயரையோ அல்லது பெயருக்கு உண்டான நம்பரையோ எண்கணித முறைப்படி மாற்றினால் ஏற்றமான வாழ்க்கையை பெறலாம்.

1- தேதி பிறந்தவர்கள் மற்றவர்களை ஆளும் சக்தி ஏற்படும். யாருக்கும் தலை வணங்க மாட்டார்கள். எடுத்ததை முடிக்காமல் தூங்கமாட்டார்கள். சாதாரண நிலையில் இருப்பவராக இருந்தாலும் கடுமையாக போராடி உயர்ந்த அந்தஸ்துக்கு வருவார்கள். எந்த தொழில் செய்தாலும் முன்னேறுவார்கள்.

10- தேதி பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளராக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். விட்டு கொடுக்கும் குணம் இருக்கும். மனதில் எந்த சிந்தனை இல்லாமல் இருந்தாலும் எதிர்பாரமல் திடிரென்ன வரும் வாய்ப்புகளால் புகழ் – அந்தஸ்து எற்படும்.

19- தேதி பிறந்தவர்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை அடைவார்கள். விவேகத்தால் புகழ்கிட்டும். எதிரிகள் இவர்களிடம் மோதினால் அவர்கள் தவிடு பொடியாவார்கள். வட்டத்திற்குள் புகழை கொண்டு வராமல் ஒவ்வொரு படியாக முன்னேருவார்கள்.

28- தேதி பிறந்தவர்கள் பேச்சு திறமையால் எல்லோரையும் தன் வசப்படுத்துவார்கள். நன்றாக சம்பாதித்தாலும் பணத்தை சேர்த்து வைக்கும் திறமையில்லாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். இருந்தாலும் அதை பெரிதுப்படுத்தாமல் நண்பர்களிடம் இன்முகத்தோடு பழகுவார்கள்.

இப்போது எண்கணித முறைப்படி எந்த எண்ணில் பெயர் வைத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.

10-ம் எண்ணில் பெயர் இருந்தால் இவர் பழகுபவர்களிடம் தன்னால் முடிந்த உதவி செய்வார்கள். அவர் யார்? எவர்? என்று கூட பார்க்க மாட்டார்கள். இதனாலேயே பிரச்சனையும் ஏற்படும். இந்த எண் ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஏற்படுத்தும். எந்த முயற்சி எடுத்தாலும் கடைசி நிமிடத்தில் வெற்றி தரும்.

19- ம் எண்ணில் பெயர் இருந்தால் என்ன சாதாரண நிலையில் வாழ்க்கையை துவங்கினாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் ஏறுமுகமாகவே இருக்கும். வீடுமனை வாங்கும் யோகம் உண்டாகும். இந்த எண்னை பயன் படுத்துபவர்கள் எதிரிகளை அடைக்கியாள்வார்கள். எதையும் செய்யாமல் இருந்தாலும் யாராவது இவர்களை நம்பி கடமையை ஒப்படைப்பார்கள். அதன் மூலமாக பல லாபகரத்தை அடையும் யோகம் ஏற்படும்.

28- ம் எண்ணில் பெயர் இருந்தால் பல நன்மைகளை அள்ளி தரும். எடுக்கும் முயற்சி எல்லாமே ஏற்றம் ஏற்படும். யாருக்கும் தலைவணங்காத குணம் உண்டாகும். எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் தடங்கல் ஏற்படும். பாதகங்கள் ஒன்று போனால் ஒன்று உண்டாகும். தைரியத்துடன் ஆரம்பிக்கும் செயல் திடிர் என்று தடங்கல் ஏற்படும். முயற்சியே பிரதானம் என்று போராடினால் இகழ்ச்சியே தரும்.

37- ம் எண்ணில் பெயர் இருந்தால் மங்களகரமான யோகத்தை உண்டாக்கும். இக்கட்டான பிரச்சனையாக இருந்தாலும் சர்வசாதாரணமாக தெய்வத்தின் அனுகிரகத்தால் நிவர்த்தி பெறும். குப்பைமெட்டில் இருப்பவர்களையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும் எண் இது. பணம், புகழ் ஏற்படும். உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு செல்லும்.

46- ம் எண்ணில் பெயர் இருந்தால் தைரிய வீரியங்கள் ஏற்படுத்த கூடிய எண் இது. எதையும் பலதடவை சிந்தித்து செய்தால்தான் வெற்றி கிடைக்கும். பதறிய காரியம் சிதறும் என்பதுபோல் பதட்டத்தாலேயே செயல்களில் தடை உண்டாகும். பொறுமையாக இருந்து முயற்சித்து காயை நகர்த்தினால் வெற்றியாளரகவே மாற்றி விடும்.

55- ம் எண்ணில் பெயர் இருந்தால் எடுக்கும் செயல் எல்லாம் வெற்றி பெரும். சாதாரண நிலையில் இருப்பவர்களையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும். நண்பர்களின் ஆதரவு உண்டாக்கும். எடுக்கும் முயற்சி தோல்வியை தழுவினாலும் கடைசி நேரத்தில் எழுச்சியை பெரும். இருந்தாலும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்தால் பாதகம் ஏற்படும். சிந்தித்து செய்தால் இந்த எண் பெயராக உடையவர்களை யாராலும் வெல்ல முடியாது.

64- ம் எண்ணில் பெயர் இருந்தால் கீர்த்தி – புகழுடன் வாழ வைக்கும் எண் இது. சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு கொண்டு செல்லும். சுகபோகமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும். ஆனால் இவர்களின் எதிரிகளை தூசி போல நினைத்தால் யானை காதில் கட்டெறும்பு புகுந்த கதையாகிவிடும். எப்போதும் எச்சரிக்கையோடு இருந்தால் ஏற்றத்தை கொடுக்கும் எண் இது.

73- ம் எண்ணில் பெயர் இருந்தால் கடினமான செயலாக இருந்தாலும் சர்வசாதாரணமாக முடிக்கும் ஆற்றலை கொடுக்கும் எண் இது. இறைநம்பிக்கை உடையவர்களாக இருந்தால் வெற்றியின் உச்சத்தை அடைவார்கள். திடிர் தனவரவுகள் ஏற்படும். மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். நிரந்தரமான அந்தஸ்தை பெருவார்கள். வாகன யோகத்தை உண்டாக்கும்.

82- ம் எண்ணில் பெயர் இருந்தால் சத்ரு என்கிற விரோதிகளின் வீட்டுக்கும் பயம் இல்லாமல் போக வைக்கும் எண் இது. எதிரிகளையும் நண்பனாக்கும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் இல்லற வாழ்க்கையில் நிம்மதி கொடுக்காது. வெளிஉலகத்தில் பாராட்டும் வெற்றியும் ஏற்படுத்தும். வியபாரதிற்கு ஏற்ற எண்ணாக இருக்கும். மனம் தளராமல் பல தடவை முயற்சி செய்தால் லாபத்ததை அடையலாம்.

91- ம் எண்ணில் பெயர் இருந்தால் இது நன்மையான எண். தாழ்ந்த நிலையில் இருக்கும் வியபாரத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும். நட்பால் உயர்வான அந்தஸ்தை ஏற்படுத்தி தரும். எதிலும் அமைதியையும் திருப்தியையும் கொடுக்கும். பகைவர்களையும் உறவாட வைத்து அவர்கள் மூலமாகவே லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

100- ம் எண்ணில் பெயர் இருந்தால் தனலாபத்தை தரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கொடுத்தாலும் அதிக அலைச்சலையே எற்படுத்தும். சுகபோகமான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும். ஒரு பானையில் தண்ணீர் மேல் வர காக்கை பல கற்களை போட்ட கதை உங்களுக்கு தெரியும் இல்லையா…? அதுபோல் பல தடவை முயற்சித்தால்தான் ஏற்றம் எற்படும்.

இந்த பத்தில் இருந்து நூறுவரை எண்களுக்கு என்ன பலன்? என்பதை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இந்த பெயர் எண்கள் எல்லா தேதிகளில் பிறந்தவர்களுக்கும் ஏற்றம் ஏற்படுமா? என்றால் இல்லை. எப்படி வயிற்று வலி மாத்திரை தலைவலிக்கு உதவாதோ அதுபோல் உடல் எண், உயிர் எண் போன்றவற்றை பார்த்துதான் எந்த பெயரும் வைக்க வேண்டும்.

ஜாதகம் இருப்பவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சாதகமாக – யோகமாக இருக்கிறது? எந்த கிரக நிலைகள் கெடுதல் – நீச்சம் பெற்று உள்ளது? என்பதை தெரிந்து கொண்டு பெயர் எண் அமைத்து உபயோகப்படுத்தினால்தான் சரியான பலன் நல்ல சமயத்தில் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் –  மஞ்சள் – சிகப்பு

அதிர்ஷ்ட ராசி கல் –  மாணிக்கம்

அதிர்ஷ்ட எண்  – 1, 3,5.

மேலும் எண் கணிதத்திற்கான பலன்களை அறிய கிளிக் செய்யவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 30 2012. Filed under எண்கணிதம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech