Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

நிரஞ்சனா

மருதாணி இலையின் மருத்துவ குணத்தை பற்றி வரும் நாட்களில் தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன் மருதாணியின் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவத்தை பற்றி இப்போது சொல்கிறேன்.

மருதாணியை வைத்துக்கொண்டால்  லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை  மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும்  தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இது உண்மையும் கூட என்கிறார்கள் பக்தர்கள்.

ஏன் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள்.? மருதாணிக்கும் ஸ்ரீமகாலஷ்மிக்கும் என்ன சம்மந்தம் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

சீதை, இராவணனால் கடத்தபட்டு அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அந்த அசோகவனத்தில் மருதாணி செடிகளும் இருந்தது. சீதை, தன் மனகவலையை யாரிடம் சொல்வது? என்றும், யாரிடமாவது சொல்லி அழுதால் மனம் ஆறுதலாக இருக்கும் என எண்ணினாள். ஆனால் அந்த அசோகவனத்தில் இருந்த அனைவரும் அரக்கிகள். மற்றவர்களின் துன்பங்களை உணர தெரியாமல் கல் மனம் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் பேசினால்,  மேலும் துன்பங்கள் நேரும் என அஞ்சினாள் சீதை.

அச்சமயத்தில் அசோகவனத்தில் இருக்கும் செடிகொடிகளிடம் தன் துயரத்தை சொல்வாள். அப்போது, அங்கு இருந்த மருதாணி செடி ஒன்று, சீதை சொல்லும் துன்பங்களை கேட்பது போல் அசையும். இதை பார்த்த சீதாதேவி, தன் கஷ்டத்தை கேட்க இந்த அசோகவனத்தில் இந்த மருதாணி செடியாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைவாள். தினமும் அந்த மருதாணி செடியிடம், தன் தோழியிடம் பேசுவது போல பேசி வந்தாள் சீதை. சீதையின் பேச்சுக்கேற்றார் போல அந்த செடியும் தலை அசைக்கும்.

பிறகு ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.

“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.   அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில்வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி  மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.

அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள். மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO     

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்  

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

 

 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 27 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech